கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?
ஆத்மா நிர்பாரத மிஷன் கடந்த ஆண்டு மே 12 இல் பிரதமர் மோடி , ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று . இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள் . தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார் . அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு , தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன . அக்டோபர் , நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின . உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது . இதில் ஆயிரம் சிலிண்டர்கள் , 15 மில்லியன் என் 15 மாஸ்குகள் , ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம் . இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும் . இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது . எல்லை