குடிராம் போஸ்!- பதினெட்டு வயதில் செய்த அளப்பரிய தியாகம்!
என்தேசம் இந்தியா! குடிராம் போஸ் வங்காளத்தின் அலிப்பூரிலிருந்த டக்ளஸ் கிங்க்ஸ்ஃபோர்டு தன்னைப் பற்றி விமர்சித்து எழுதிய பத்திரிகைகளை படித்து படித்து மனம் வெந்து போனார். அதிலும் குறிப்பாக ஜூகந்தர் என்ற வங்காளப்பத்திரிகையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான துவேஷ கருத்துகள் வெளியாக பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர்களை சிறையில் தள்ளி அடித்து நொறுக்கி ஆசுவாசமானார். தேசபக்தி இளைஞர் கூட்டம் இதற்கு எதிராக திரண்டெழுந்தது. இதில் முன்னணியில் புரட்சிக்கருத்துகளுக்கு பெட்ரோல் ஊற்றி மக்களை வெறி குறையாமல் வைத்திருந்த இளைஞர் சுசில் சென், கிங்க்ஸ்ஃபோர்டை பெரிதும் அச்சுறுத்தினார். உடனே அவரை கைது செய்ய காவலர்களை ஏவி, கசையடி கொடுக்கச்செய்தார். கசையடிகள் இளைஞர்களின் மனதில் ஆ்ங்கிலேயர் மீதான கோபத்தீக்கு நெய்விட்டது போலானது. உடனே டக்ளஸ் உயிருக்கு நாள் குறித்தது இளைஞர் கூட்டம்.அப்போது முசாபர் நகருக்கு மாற்றலாகியிருந்தார் டக்ளஸ். டக்ளஸை கண்காணித்து கொல்லும் பொறுப்பை குடிராம்போஸ், பிரபுல்லா சக்கி என இரு இளைஞர்கள் ஏற்றிருந்தனர். 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று டக்ளஸின் வீட்டுக்கு அருகில் நாட்டு வெட