இடுகைகள்

கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்களை மேடையில் வாசிக்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி!

படம்
  கடிதங்களைப் படிப்போம் வாங்க! இங்கிலாந்தில் கடிதங்களைப் படிப்பதை பிரபலமான திரைப்பட, நாடக கலைஞர்கள் செய்கிறார்கள். இதை லெட்டர்ஸ் லைவ் என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள். இதில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகம். கடிதங்களை நீங்கள் எப்படி தயாரிப்பீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதுவதாக அல்லது பிறருக்கு எழுதியதை வைத்திருந்தால் கூட படிக்கலாம். யாரோ ஒருவருக்கு எழுத விரும்பியதைக் கூட எழுதி வந்து மேடையில் படிக்கலாம்.  இப்படி படிப்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வந்து கடிதங்களைப் படிக்க பெரிய முன்னேற்பாடுகள் எதையும் ஒருவர் செய்யவேண்டியதில்லை. கடிதங்களை எழுதிக்கொண்டு வந்து சத்தமாக படிக்க தெரிந்தால் போதும். ஆனால் இதற்கே பலரும் பதற்றப்படுகிறார்கள். ஏனெனில் திரைப்பட கலைஞர்களுக்கு இங்கு எப்படி முகத்தை உடலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே, கடிதங்களை படிக்கும்போது ஏற்படு்ம் உணர்வுகளை ஒருவர் எளிதாக பிறருக்கு கடத்த முடியும். சுற்றியிருக்கும் பார்வையாளர்களும் கடிதத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை கவனித்துக் கேட்கிறார்கள்.  நீங்கள் கடிதங்களை படிக்கும்போது, இன்

பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  பணம் விரயமாகும் வழி 27.1.2022 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம் கங்கை’ என   பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே, அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது. கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என வருத்தப்பட்டார். ‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின் சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும்.   சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள். இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர் இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே இருக்கிறது. வினோத் மேத்தா பற்றிய நூலை இன்னு

உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும். அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை. மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி அன்பரசு படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்

மறைமலையடிகளின் தனித்துவமான கடித நூல்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் 24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா வீட்டில் உள்ள தங்களது பெற்றோர்களையும் கேட்டதாக சொல்லுங்கள். நேற்று லாக்டௌன் என்பதால் எங்கும் செல்ல முடியவில்லை. மாணவர்களுக்கான நாளிதழை ஐந்து பக்கமாக்க வடிவமைத்து அதை டிஜிட்டல் வடிவில் பிடிஎஃப்பாக பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. இது எந்தளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு நாங்கள் இதற்காகவே வேலை செய்கிறோம். தினசரி காலை நாளிதழ்களில் வரும் செய்திகளை எடுத்து ஐடியாக்களாக அனுப்புவது, அதில் எடிட்டர் தேர்வு செய்துதருவதை ஒரு மணிக்குள் எழுதி தர வேண்டும். பத்து மணிக்கு தகவல் சொன்னால் கட்டுரை எழுத மூன்று மணி நேரம் உள்ளது. இப்படிதான் இரண்டு நாட்களாக வேலை செய்கிறோம். மறைமலையடிகளின் கடித நூலைப் படித்தேன். அவர் அதில் முக்கியமான முறைகளைக் கையாள்கிறார். நூலில், அஞ்சலட்டை என்றால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். இன்லேண்ட் கவர் என்றால் தமிழில் எழுதுகிறார். இப்படி எழுத அவருக்கென சில காரணங்கள் இருக்கும் என நினைக்கிறேன். வெளியூருக்குப் போனால் சோப்பு, சீப்பு இருக்குமாறு பெட்டி ஒன்றைத் தயார் செய்தேன்.

சாதியால் இழிவுபடுத்தப்பட்ட எழுத்தாளரின் வாழ்க்கைக் குரல் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தேவிபாரதி 21.1.2022   அன்பிற்கினிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று குக்கூ வெளியிட்ட தேவிபாரதியின் ஒரு மணி நேர நேர்காணலை யூட்யூபில் பார்த்தேன். நிறைய இடங்களில் பேசும்போது எழுத்தாளரின் குரல் தடுமாறி உடைந்துவிட்டது. கேமரா சிறப்பாக இயக்கப்பட்டது. ஆனால், படத்தொகுப்பாளர் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கையை சொல்லி அழும் காட்சியில் வண்ணமாக இருந்த காட்சியை கருப்பு வெள்ளையாக மாற்றுகிறார். இப்படி செய்வது எதற்கு என்று புரியவில்லை. எழுத்தாளர்கள் அவர்களாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் நிறைய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியாது போல உள்ளது.   இதற்கு அவர்களின் அகவயமான இயல்புதான் காரணம். ஒரு மணிநேர பேட்டியில், தேவிபாரதி எழுதிய நூல்களைப் பற்றிய கேள்விகளே இல்லை. ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜெயமோகன் பேசிய உரை சிறப்பாக நன்றாக இருந்தது. சிறந்த கச்சிதமான உரை. நன்றாக தயாரித்து வந்து சிறப்பாக பேசினார். களப்பணி எப்படிப்பட்டது., அதற்கான உழைப்பு, அதில் கிடைக்கும் பயன், அதற்கான காலக்கெடு என சில விஷயங்களை அழுத்தம் திருத்தமாக பேசினார். தன் மீட்சி – ஜெயமோகன் எழுத

திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று  10.1.2022 இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன். அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.   இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய ச

தங்குமிடம் ஏதுமில்லை - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  தங்குமிடம் ஏதுமில்லை 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிட்டு, அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்

தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதி

விளைவுகளை அறியாமல் செயல்படும் நாட்டின் தலைவர்!

படம்
  விளைவுகளைப் பற்றிய அறிவற்ற தலைவர் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. மோடியைப் பற்றிய கூறியவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் சுமைதாங்கி யாருமில்லை!

படம்
  பயணம் 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிடு அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களை பற்றி எழு

லாக்டௌன் காலத்தில் சென்னைவாசியின் நிலை!

படம்
  லாக்டௌன் 4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந

கல்யாணம் சார்ந்து ஏற்பட்ட மன உளைச்சல்கள் அதிகம்!

படம்
  நரசிங்கபுரம் 6/6/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? கடந்த சில நாட்களாக டெலிகிராமில் மெசேஜ் எதுவும் வருவதில்லை. தினமும் செக் பண்ணுவேன். கடந்த 28.5.2023 அன்று எழுதியிருந்த கடிதத்தில், போன் ரிப்பேர் ஆனதைச் சொல்லியிருந்தீர்கள். எதற்கு உங்களை டிஸ்டர்ப் செய்யுறது?ன்னு போன் போடவில்லை. சில விஷயங்களால் மன உளைச்சல் அதிகம். கடிதத்தில் நண்பர் ஜெகன் பற்றி சொல்லியிருந்தீங்க. அவருக்கு ஏற்பட்ட நிலை இன்று எனக்கும்… பெண்கள் சுயநலவாதிகள். தானும், தனக்குரியவரும் மட்டுமே நல்லா இருந்தா போதும். யார் எப்படிப் போனாலும் கவலை கொள்ளாத மூடர்கள். இதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர். தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை பெண் வீட்டார் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். இதைக் கேட்டதும் கவலையாக உள்ளது. வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அப்பா, பாவம். வரன் கிடைப்பதே கஷ்டம். கெடச்சாலும் இப்படியான கண்டிஷன்ஸ். அவரின் பட்ஜெட்டில் இடி இடிப்பது போல உணர்கிறார். பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இந்த சூழலில் தனிக் குடித்தனம் அவசியமா? இப்பவே

கிரிக்கெட்டை விளையாடமுடியாத அளவுக்கு வெயில்!

படம்
  சார் வணக்கம். நலமா? கடும் வெயில். உடல் சூடு அதிகம். பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியவில்லை. மழையில் ஒதுங்கினால் தேவலை என்பது போல வெயில் வாட்டுகிறது. நேற்று (ஞாயிறு) குடும்பமாக அக்கா வீட்டிற்குச் சென்றோம். அங்கேயே நாளைக் கழித்தோம். எங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டில் கடும் புழுக்கம். என்னுடைய முதல் அக்கா வீடு காற்றோட்டமாக நன்றாக இருக்கும். தாய்மாமனுக்கே அக்காவைக் கொடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களுக்கு உரிமை அதிகம். பனங்காய், தோண்டி கிடையில் அறுத்து சாப்பிட்டோம். குடும்பம் சூழ இருந்ததால் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.   மாணவர் இதழ் பற்றி சொல்ல ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. டிசைனர் சீஃப் போனதில் இருந்து, அவரது குழுவினர் சிறப்பாக டிசைன் செய்கிறார்கள். புதுப்புது லோகோ வைத்து எனது பக்கத்தை மெருகேற்றுகிறார்கள். விரைவான லே அவுட் இனி நடக்கும் என நம்புகிறேன். கணபதி சார், இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேசுகிறார். கொடுக்கு அந்தளவிற்கு கொட்டுவதில்லை. அவரது பெண்ணை நல்ல கல்லூரியில் சேர்க்க படாதபாடு படுகிறார். மாணவர் இதழ் எடிட்டரும் தாய் நாளிதழும் உதவி புரியவில்லை என்ற புலம்

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23

மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது!

படம்
  நரசிங்கபுரம் 28/3/2023 அன்பரசு சாருக்கு   அன்பு வணக்கம். நேற்று பேசிய உரையாடல் மகிழ்ச்சி தந்தது. அதில், கடிதமாக எழுதவேண்டியதை பேசிவிட்டேன். பேசத் தவறியதை கடிதத்தில் எழுதுகிறேன். சமீபத்தில் மெகா ஸ்டாரின் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, கிரிஸ்டோபர். காம எண்ணமே ஒருவனை அழிக்கிறது. சாதாரண மனிதன் தவறான ஆசைகளை வெளிப்படுத்தினால் மரணமே வழி என்பதாக கதை அமைந்துள்ளது. மம்மூட்டியின் தர்ம செயல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தது. கொடூரமான காட்சிகள் நெஞ்சை உலுக்கின. இரண்டாவது படம், ஒன். 2021இல் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகளை யூட்யூபில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். பார்க்க வேண்டிய படம். நான் ஃபேஸ்புக்கில் வங்கி மேலாளரைப் பற்றி புகார் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளதென வியந்தேன். இந்தப்படத்திலும் மம்மூட்டியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. நிதானமான பேச்சு, அதிரடி முடிவு என முதலமைச்சராக வலம் வந்து நம்மைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் நம்பர் ஒன் என சொல்லி படத்தை முடிக்கிறார். முதலமைச்சர்கள் பார்க்க வேண்டிய படம். இன்று பிளாக்க

அப்பாவுக்கு கடிதத்தைப் பெற்று படிப்பதில் அதீத மகிழ்ச்சி!

படம்
  நரசிங்கபுரம் 20/12/2022   அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் கிடைத்தது. அப்பா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அவரது நண்பர் திருவண்ணாமலையில் இருந்து கடிதம் எழுதி அனுப்பி வந்தார். போன் வந்ததும் கடிதம் நின்றுவிட்டது. எனவே, கடிதத்தை வாங்குவதில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. எனக்கு முன்பாகவே படித்துப் பார்ப்பார். அவருக்கு நீங்கள் எழுதும் கையெழுத்தில் சில வார்த்தைகள் புரியவில்லையாம். எப்படி படிப்பே? என்று கேட்டார். அன்பிடம் பழகியவர்க்கே அன்பரசு கையெழுத்து புரியும் என்று சொன்னேன். சரிதானே? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சார்? மருத்துவ செலவுகள்? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம். சென்னை வந்தால் சொல்லலுங்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால் சிறப்பு. தினமும் விதவிதமான கணித ஸ்டேட்டஸ்களை வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 17ஆம் தேதி என் குருநாதர் நடத்திவரும் பை கணித மன்றத்தில் இராமானுஜன் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. ஏஐஆர்எம்சி என்ற அமைப்பிலிருந்து வந

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த ப

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்