இடுகைகள்

உளவுத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்

படம்
                ஹூ எம் ஐ ஜெர்மனி திரைப்படம்    படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல் . ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு , பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர் . படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று . பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் . அந்த வீட்டில் வேறு யாருமில்லை . அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது . அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான் . அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர் . கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான் . அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன் . அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள் . ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான் . அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளே கதை .    முழுக்க கணினியை வைத

அட்டகாசமான ரகசிய உளவாளியின் கதை- ருத்ரநேத்ரா

படம்
ருத்ர நேத்ரா எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் - கௌரி கிருபானந்தன் ருத்ர நேத்ரா, ஒரு மணிநேரத்தில் விறுவிறுவென படிக்கவேண்டிய நூல். கதை இளமையும் குறும்பும் கொண்ட சீக்ரெட் ஏஜெண்ட் நேத்ரா எதிர்கொள்ளும் வழக்கு பற்றியது. அந்த வழக்கை அவர் மேலதிகாரி சிறிய வழக்கு என்று கூறி அவரிடம் கொடுக்கிறார். ஆனால் அந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான், புளூட்டோனியம், விஷவாயு ஆராய்ச்சி என நினைத்து பார்க்க முடியாதபடி நீள்கிறது. இதற்கிடையில் சீக்ரெட் ஏஜெண்டுகளின் அலட்சியத்தால் நேத்ராவின் நண்பனும் தங்கையும் பலியாகிறார்கள். இதற்கு காரணமான பிளாக் ஈகிள், அவனது மகன் ஏஜெண்ட் க்யூ இருவரையும் நேத்ரா என்ன செய்தான், அவனை வெறித்தனமாக காதலிக்கும் தொழிலதிபர் பூஷணத்தின் மகள் அம்சரேகா, சந்தேகிக்கும் வளர்ப்பு மகள் சுவர்ணரேகா, இவர்களின் காதலை பொறாமையோடு பார்க்கும் பிரதிமா ஆகியோரின் காதல் பகுதிகளும் நூலில் உண்டு. தேசப்பற்று போதிக்கும் கதை. எளிதாக நம்மை வாசிக்க வைப்பதில் எண்டவீரி வென்றுவிடுகிறார். கதை விறுவிறுவென செல்கிறது. இதில் காமெடி அத்தியாயங்களை சக பெண் சீக்ரெட் ஏஜெண்ட் பிரதிமா மற்றும் அவரது பாட்டி பார்த்துக்கொள்கிற

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை