இடுகைகள்

உளவுத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...

தோற்றுப்போன உளவுத்துறை ஆபரேஷனுக்கு காரணமான துரோகியை கண்டுபிடிக்க உதவும் குடியிருப்புவாசி அமைப்பு!

படம்
   மை சீக்ரெட் டெரியஸ் கே டிராமா 16 எபிசோடுகள் எம்பிசி டிவி தேசதுரோகி என்ற குற்றம்சாட்டப்பட்ட என்ஐஎஸ் ஏஜெண்ட், தோற்றுப்போன தனது ஆபரேஷன் பற்றி துப்பறிந்து துரோகியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. தொடரின் நாயகன் டெரியஸ். அவனை உளவுத்துறை ஏஜென்ட் என பில்டப் செய்கிறார்கள். ஆனால், அவனை விட எதிரி பலசாலி. டெரியஸ் எத்தனை முறை தாக்கப்பட்டார், துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கைவிரல்களை விரல் விட்டு எண்ணவேண்டும். அத்தனை முறை நாயகன் அடிபடுகிறார். பரிதாபம். தொடர் முழுக்க என்ஐஎஸ் அமைப்பை விட கிங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குரூப் சிறப்பாக இயங்குகிறது. நாயகி இரண்டு குழந்தைகளின் தாய். அதேநேரம் அவளுக்கு டெரியஸ் மீதும், டெரியசுக்கு அவள் மீதும் காதல் வருகிறது. அதுபோன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. கணவர் இறந்தபிறகு இரு குழந்தைகளை வளர்க்க நாயகி ஆரின் படும்பாட்டை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சில நேரம் ஆரின் பாத்திரம் நடிப்பது மிகை நடிப்பாக மாறுகிறது. அனிமேஷன் பாத்திரத்தின் நடிப்பை பின்பற்றுகிறாரோ.... நாயகனைப் பொறுத்தவரை அதிக உணர்ச்சிகளை கொட்டி நடிப்பவரல்ல. டெரியஸ் பாத்திரமே சிந்...

சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!

படம்
  சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி! மராஸ்லி துருக்கி தொடர் இருபத்தாறு எபிசோடுகள் யூட்யூப் பழைய புத்தக கடையை முன்னாள் ராணுவ வீரர் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. டீ கொண்டு வருபவரிடம் கூட அவர் அதிகமாக பேசுவதால், காசைக் கொடுத்துவிட்டு தன்னுடைய உலகில் மூழ்கிவிடுகிறார். அவர் கையில் நாளிதழில் வெளியான துப்பாக்கிச்சூடு செய்தி இருக்கிறது. அதை படித்துக்கொண்டிருக்கும்போது, இளம்பெண் ஒருவர் வந்து நூல் ஒன்றைக் கேட்கிறார். அதற்கு, ராணுவ வீரர் அதுமாதிரியான நூல் என்னுடைய கடையில் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அந்தப்பெண் எரிச்சல் அடைந்தாலும் சமாளித்து பேசி புகைப்படம் எடுக்க செல்லவேண்டிய இடத்தை அறிந்துகொள்கிறார். அவர் அங்கு செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரை கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அதை பார்த்து புகைப்பட கலைஞரான இளம்பெண் பதறி ஓடுகிறார். அதேநேரம், அவரைக்கொல்ல கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். நாயகன், தனது செல்ல நாயை தேடி அங்கு வரும்போது நாயகி மாஹூரைக் காப்பாற்றுகிறான். கொலைகார கூட்டம், முன்னாள் ராணு...

ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்

படம்
                ஹூ எம் ஐ ஜெர்மனி திரைப்படம்    படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல் . ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு , பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர் . படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று . பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் . அந்த வீட்டில் வேறு யாருமில்லை . அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது . அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான் . அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர் . கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான் . அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன் . அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள் . ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான் . அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்தி...

அட்டகாசமான ரகசிய உளவாளியின் கதை- ருத்ரநேத்ரா

படம்
ருத்ர நேத்ரா எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் - கௌரி கிருபானந்தன் ருத்ர நேத்ரா, ஒரு மணிநேரத்தில் விறுவிறுவென படிக்கவேண்டிய நூல். கதை இளமையும் குறும்பும் கொண்ட சீக்ரெட் ஏஜெண்ட் நேத்ரா எதிர்கொள்ளும் வழக்கு பற்றியது. அந்த வழக்கை அவர் மேலதிகாரி சிறிய வழக்கு என்று கூறி அவரிடம் கொடுக்கிறார். ஆனால் அந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான், புளூட்டோனியம், விஷவாயு ஆராய்ச்சி என நினைத்து பார்க்க முடியாதபடி நீள்கிறது. இதற்கிடையில் சீக்ரெட் ஏஜெண்டுகளின் அலட்சியத்தால் நேத்ராவின் நண்பனும் தங்கையும் பலியாகிறார்கள். இதற்கு காரணமான பிளாக் ஈகிள், அவனது மகன் ஏஜெண்ட் க்யூ இருவரையும் நேத்ரா என்ன செய்தான், அவனை வெறித்தனமாக காதலிக்கும் தொழிலதிபர் பூஷணத்தின் மகள் அம்சரேகா, சந்தேகிக்கும் வளர்ப்பு மகள் சுவர்ணரேகா, இவர்களின் காதலை பொறாமையோடு பார்க்கும் பிரதிமா ஆகியோரின் காதல் பகுதிகளும் நூலில் உண்டு. தேசப்பற்று போதிக்கும் கதை. எளிதாக நம்மை வாசிக்க வைப்பதில் எண்டவீரி வென்றுவிடுகிறார். கதை விறுவிறுவென செல்கிறது. இதில் காமெடி அத்தியாயங்களை சக பெண் சீக்ரெட் ஏஜெண்ட் பிரதிமா மற்றும் அவரது பாட்டி பார்த்துக்கொள்கிற...

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை...