மூளையில் ஏற்படும் தவறான சிக்னல்களே ஆளுமை பிறழ்வுக்கு காரணம்!
பொய்கள், ஏமாற்றுவது ஆகியவற்றுக்கு காலாவதி காலம் என்று ஒன்றுண்டு. எனவே, தங்களது பொய்கள் பிறருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என சைக்கோபாத்கள் , வேறு வேறு நகரங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி செல்லும் பயணத்தில்தான் காதலும், உடலுறவும், அடுத்த தலைமுறையும் உருவாகின்றனர். சீனு வைட்லாவின் படத்தின் பாத்திரங்கள் போல தாங்கள் உருவாக்கிய பொய் உலகத்தில் அவர்களே மாட்டிக்கொள்ள நேரிடும்போது, உடனே அதிலிருந்து விலகி காணாமல் போய்விடுகின்றனர். வேறு நகர், வேறு நண்பர்கள். நட்புக்குழுக்கள், காதலிகள், திருமணங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதில் சில கோட்பாடுகளைச் சொல்லுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்களுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதி முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை.இதனால்தான் அவர்களால் அவர்கள் பெற்ற குழந்தையைக் கூடன வளர்க்க முடிவதில்லை. மேலும் அவர்களின் தூக்கம் குறைவு என்பதால் மூளையின் வளர்ச்சியும் மிக குறைவாகவே உள்ளது என வாதிடுகிறார்கள். இதை தன்முனைப்பு அதிகம் கொண்ட, கோபம் கொண்ட குழந்தைகளுக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். இயல்பு, ஊக்கம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை பலரும் கு