இடுகைகள்

பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மகிழ்ச்சியை தீர்மானிப்பது எது? லாட்டரியில் பணம் கிடைப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எதுவரை உங்களுக்கு இருக்கும். உங்களைத் தேடி பணம் கேட்டு உறவுகள், நண்பர்கள் வரும்வரை மட்டும்தான். அதேசமயம், விபத்துகள் துரதிருஷ்டங்களை சந்திக்கிற மனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்களாக எதையும் தேடுவது என்றில்லை. அதுவாகவே கூட அவர்களைத் தேடி வந்து போட்டுத்தாக்கும். மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஆரஞ்சுகளோடு சென்று பார்க்கும் நிலையில் ஆண்டு முழுவதும் இருப்பார்கள். இப்படி வாழ்க்கை போட்டு சக்கையாக பிழிந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பிலிப் பிரிக்மன், டான் கோட்ஸஃ, ரோனி ஜேன் ஆப் புல்மன் ஆகியோர் 1978ஆம் ஆண்டு செய்த ஆய்வில் அடையாளம் கண்டுள்ளனர். லாட்டரி விழுந்தவருக்கு எதிர்காலம் பற்றிய மகிழ்ச்சி உள்ளது. விபத்துக்குள்ளானவருக்கு நிகழ்காலம் நரகம்தான். ஆனால் கடந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என யோசித்தார்.  இதெல்லாம் மனம் தொடர்பானது. மும்பையில் பார்ப்பன முதல்வர், மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல...

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...

கல்வி ஒருவற்கு... சீன கல்வி சீர்திருத்தங்கள் புதிய மின்னூல் வெளியீடு

படம்
    https://www.amazon.com/dp/B0FC2V9TT9

தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்தவர், தாவோயிச முன்னோடி வீரராக அடையாளம் கருதப்பட்டால்....

படம்
      டீமன் இன் மவுண்ட் குவா 76 அத்தியாயங்கள்--- மங்காகோ.காம் தீயசக்தி இனக்குழுவைச் சேர்ந்த சியோம் என்பவரை மவுண்ட் குவா இனக்குழுவின் ஹான்வோ தோற்கடித்து சிறைபிடிக்கிறார். பின்னாளில், சியோம் சிறையில் இருக்கிறார் என்பதையே மவுண்ட் குவா இனகுழுவினர் மறந்துவிடுகிறார்கள். சியோம் திரும்ப மவுண்ட் குவா இனக்குழுவின் மூத்ததலைவர் என பொய் சொல்லி ஏமாற்றி, அக்குழுவினரை சக்தி வாய்ந்த இனக்குழுவாக எப்படி மாற்றுகிறார் என்பதே கதை. சியோம், கைதி என்றாலும் தற்காப்புக்கலை கற்றதால் அவர் காயம்பட்டாலும் சாவதில்லை. தற்காப்புக்கலை அழிக்கப்பட்டாலும் அது மீண்டும் உயிர்பெறுகிறது. உடல்பயிற்சி, ஆன்ம ஆற்றல் தியானம்செய்து மீண்டு வருகிறார். வயதான தோற்றம் கூட மெல்ல இளமையாக மாறுகிறது. அதாவது முதிர்ந்தவராக இருந்த தோற்றம் நடுத்தர வயதுகொண்டவராக மாறுகிறது. வயது கூடுவதில்லை. மவுண்ட் குவாவிலுள்ள சிறை, குகையில் உருவாக்கப்பட்டது. மழைபெய்ந்து பாறை அரித்து சிதைவடைகிறது. அதைப் பயன்படுத்தி பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார். வந்து பார்த்தால், அவருக்கு உணவு கொண்டு வந்த பையனே எழுபது வயதானவராக மாறியிருக்கிறார். ஆனால்,...

திவாலாகும் வங்கி!

படம்
        பாயும் பொருளாதாரம் 15 திவாலாகும் வங்கி உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள். அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுத...

பொருளாதாரத்திற்கு உதவும் வேலை!

படம்
             பாயும் பொருளாதாரம் 9 பொருளாதாரத்திற்கு உதவும் வேலை யாருடைய செழிப்பிற்கு வேலை உதவுகிறது என்று உள்நோக்கமாக கேட்டால் பதில் சொல்லமுடியாது. பொதுவாக மனிதர்கள் அனைவருமே வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு, உடை, இருப்பிடம் பெறுகிறோம். இதற்கு மேல் காசு இருந்தால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தலாம். தொழிலாளர்களை தொடக்கத்தில் எந்த அரசும் பாதுகாக்கவில்லை. அவர்களே ஒன்று திரண்டு போராடித்தான் குறிப்பிட்ட எட்டுமணி நேர வேலைத்திட்டத்தை உருவாக்கினர். இன்று அந்த வேலை நேரத்தை மாற்றிவிட சுரண்டல் தொழிலதிபர்களாக சில பைத்தியங்கள் ஊளையிடுகின்றன. இதற்கு பதிலடியாக, வாகனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இப்படியான வேலை நேரத்தை மேல்நிலையில் இருந்து தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார். நிறுவனர், தலைவர், இயக்குநர் வாரத்திற்கு 90 மணிநேரங்கள் வேலை செய்கிறார் என்றால் அவரின் சம்பளம் அதிகம். தொழிலாளர்கள் அதை வாழ்நாளில் நினைத்து பார்த்திர முடியாத தொகை. அப்படியே உழைத்தாலும் உடல்,மனம் கெட்டுப்போவதுதான் மிச்சமாகும். கையில் காசு ஏதும் கிடைக்க...

சீனாவின் பசுமை அரசியல்! - கார்பனை அடிப்படையாக கொண்ட காலனியாதிக்க முறை வளருகிறதா?

படம்
சீனா, ஆசிய அளவில் பெரிய பொருளாதார சக்தி. அதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் அந்நாட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இழிவும் அவதூறும் செய்து வருகின்றன. அதில் முக்கியமானது. மாசுபாடு தொடர்பானது. இந்தியா, கருத்தியல் அல்லது பொருளாதார அளவில் கூட சீனாவின் அருகே நிற்க முடியாத நாடு. ஆனால் தொடர்ச்சியான சீனாவுடன் அதை ஒப்பீடு செய்து தாழ்வுணர்ச்சி கொண்ட ஆய்வாளர்கள் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் கிடைக்குமோ அவர்களது மனதிற்கே தெரியும். இந்தியா தலைநகரான டெல்லியில் கூட மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் மிக குறைவு. சீனாவில் மாசுபாடு பாருங்கள் இதோ என புகைப்படங்கள் எடுத்த மேற்குலகு கூட இப்போது சீனாவில் மாசுபாடு வெகுவாக கட்டுப்பட்டிருப்பதை ஏற்க முடியாவிட்டாலும் நெசந்தானுங்க அய்யா என ஒருவழியாக ஒப்புக்கொள்ள தலைப்பட்டிருக்கிறார்கள். பொறாமையும், வயிற்றெரிச்சலும் மட்டுமே ரு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது. சூழியல், காலநிலை மாற்றம் ன்பன மக்...

மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்

படம்
      4 பாயும் பொருளாதாரம் கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது? மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும். பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறா...

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

பெண்களுக்கான தொழில், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம் பற்றி கேள்வி கேட்கும் வரலாற்று சீனத்தொடர்!

படம்
        நியூ லைப் பிகின்ஸ் சீன தொடர் ஆறாவது இளவரசர், தனது துணைவியை அதிகாரப்பூர்வ மனைவியாக மாற்றிக்கொள்ள என்னென்ன செய்கிறார், அவரது துணைவியின் திறமைகள் எப்படி இளவரசரின் நிர்வாக பணிகளுக்கு உதவியாக உள்ளன என்பதே கதை. பொதுவான சீன தொடர்களில் ஆண்கள், பெண்களை காதலுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த தொடரில் வரும் இளவரசர் பாத்திரம் தனது மனைவியை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். அவரது மனைவியும், கணவரின் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், பெண்களுக்கான வேலை, சுயமரியாதை, முன்னேற்றம் என்பதில் தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டதை ஷின் மாகாணத்தில் செயல்படுத்துகிறார். இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் ஷின் மாகாணம், பிற ஒன்பது மாகாணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு. அன்றைய காலகட்டத்தில் பெண்களை சந்தைப்பொருளாக அரசியலில் பயன்படும் காய்களாக மக்கள் எண்ணினர். இதனால், பிற மாகாண மக்கள் தங்களது செல்வாக்கு, அதிகாரத்திற்காக இளம்பெண்களை மனைவி அந்தஸ்தில், அல்லது அதிகாரப்பூர்வ மணமின்றி துணைவியாக இருக்க அனுமதித்தனர். இது சமூகத்தில் உள்ள ஆண்களின் ...

வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!

படம்
            வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே! சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது. சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவ...

ஊடகச் செல்வாக்கில் இந்தியாவை முந்திச்செல்லும் சீனா!

படம்
              ஊடக செல்வாக்கில் கொடிகட்டிப் பறக்கும் சீனா! அற மதிப்பீடுகள், பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் குழுக்கள், ஆன்மிகம், மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது, நல்லிணக்கம், அறிவு, நேர்மை, விசுவாசம் ஆகிய அம்சங்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பொதுவானவை. இவற்றின் அடிப்படையில்தான் இவ்விரு நாடுகளிலுள்ள அதிகாரம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு வாழ்கிறது. இந்தியாவில், உலகம் என்பது ஒன்று என்ற கொள்கையில் தனது வேர்களைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்களின் பொறுப்புணர்வு, கடமைகள் கூறப்படுகின்றன. சீனாவில் உலகம் என்பது ஒரே குடும்பம் (தியான்ஷியா யிஜியா) என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆர்வம், விருப்பம், மனிதகுலத்தின் பாதை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இதில், நமக்கு ஏற்படும் சவால்கள் பொதுவானவை, அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. சீனா, கலாசார ரீதியாக மேம்பட்டது என பிரசாரம் செய்யப்படுகிறது. அதன் பாதை, அமைப்புமுறை, கோட்பாடு என்பதற்கு அடிப்படையாக சோசலிசம் இருக்கிறது, ஆனால், ஜனநாயகம் என்று வரும்போது, இக்கொள்கைகள் பொருந்துவதில்லை. அமெரிக்கா, ...

தலைவர், நம்பிக்கைக்குரியவராக தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்பவராக இருக்கவேண்டும்!

படம்
        பில் ஃபோர்ட் எக்சிகியூட்டிவ் சேர்மன்,போர்ட்மோட்டார் கோ. நீங்கள் நிறைய நிறுவனத் தலைவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன? நீங்கள் நம்பும் விஷயங்களை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள வேண்டும். செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்க தயங்கவே கூடாது. சிறந்த தலைவராக இருக்க இந்த அம்சங்கள் முக்கியம். மின்வாகனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் நிறுவனத்திற்கு உள்ள எதிர்காலம், போட்டி ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள். மின்வாகனங்களை வாங்குபவர்கள், இன்னொரு மின்வாகனத்தை வாங்கவேண்டுமென நினைக்கிறார்கள், இதற்கான சார்ஜிங் மையங்கள் கூடும்போது, கார்களின் விலை குறையலாம். நாம் சில விஷயங்களை திட்டமிட்டு இயங்கலாம். ஆனால் நிறைவேறும் காலத்தை உறுதியாக கூற முடியாது. நம் அனைவரிடமும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மின்வாகன விற்பனை நிறுவனமாக உள்ளோம். கலப்பு வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களையும் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். மின்வாகனங்கள் தொடர்பான அரசியல் விவாதங்களை...

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத...