இடுகைகள்

பெண் கொலையாளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்!

படம்
இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்! மூலம்: விக்ரம் சர்மா ஆபூர்வா சுக்லா ஆண்கள் பெண்களுக்காக, சொத்துக்காக கொலை செய்து வந்தனர். கடந்த பத்தாண்டுகளாக அதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் எந்த உறுத்தலுமின்றி அரசியல், சொத்து ஆகியவற்றுக்காக கணவரை, மகளை கொலை செய்து வருகின்றனர். இதில் ஆபத்தானது, தான் செய்த செயல் குறித்த எந்த வித குற்றவுணர்வும் இன்றி இருப்பதுதான். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வரான என்டி திவாரியின் மகன் கொலையான வழக்கு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்கொலையைப் பற்றிய பின்னணி பத்திரிகையில் வந்ததை விட ஆழமான இருளைக் கொண்டது. 2017 ஆம் ஆண்டு அபூர்வா சுக்லா என்ற பெண்மணி, ரோகித் சேகரைச் சந்தித்தார். சந்திப்பு நிகழ்ந்தது, அறிமுகம் அனைத்தும் மேட்ரிமோனியல் வலைத்தளத்தில்தான். பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துப்போனது. ஆனால் ரோகித்துக்கு அபூர்வாவின் எதிர்கால பேராசைகள் ஏதும் அப்போதைக்கு தெரியவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர், ஏம்பிஏ படித்தவரான அபூர்வா சுக்லா, ரோகித் சேகரை பெருமையுடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மே.12 அன்று நடைபெற்