இடுகைகள்

நாயகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கலாசார இயல்பில் சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்!

படம்
  சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்! டில்லியைச் சேர்ந்த சௌரப் அகர்வால், அரசுப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் வகுப்புகளை நடத்தி வந்தார். வகுப்பில் ஒருமுறை, "உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ யார் ?" என  பள்ளி மாணவர்களிடம் கேட்டார். அப்போது மாணவர்கள் உடனே ஸ்பைடர் பேன், சோட்டா பீம் என பதில் சொன்னார்கள். ஆனால் மாணவிகள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர். 2019ஆம் ஆண்டு மாணவிகளுக்கான பதிலாகவே, பெண் நாயகிகளைக் கொண்ட காமிக்ஸ் நூல்களை சௌரப் உருவாக்கினார். இவர், அமெரிக்காவின் ஹார்வர்ட், ஐஐடி (காரக்பூர்)  ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர். கேல் பிளானட்(Khel planet) பௌண்டேஷன் தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு  திறன்களைக் கற்றுத்தந்து வருகிறார்.  தபங் கேர்ள், சூப்பர்கேர்ள் அவ்னி, பர்பிள் ஃபிளேம் ஆகிய காமிக்ஸ் நாயகிகள், அனைவருமே சமூக பிரச்னைகளைப் பேசுபவர்கள் என்பதே முக்கியமானது.    தபங் கேர்ள் (தாரா), பள்ளி மாணவர்களுக்கு உதவும் பாத்திரம். சூப்பர்கேர்ள் அவ்னி (மாயா), டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பவர். இதில் மாறுபட்டது, பர்பிள் ஃபிளேம்தான். இந்த பாத்திரம், டி

கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி

படம்
                  காயத்ரிதேவி பாகீரதி சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது . தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம் . அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும் . ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார் . கடன் , காப்பீடு , வங்கிக்கணக்கு புத்தக பதிவு , ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார் . இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று . இப்பணிகளை இவர் அக்டோபர் 2016 முதல் செய்துவருகிறார் . கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு , கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர் . வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை .