இடுகைகள்

மிஸ்டர் ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்சீமர் நோயின் அறிகுறிகள்!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன? ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது. புற்றுநோயின் வகைகள் என்னென்ன? கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? 85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். நன்றி சயின்ஸ் ஹேண்டி புக்

விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆபத்தான நாய் இனங்கள் எவை? பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது. நாய்கள் ஊளையிடுவது எதற்காக? அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும். மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன? மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது. குரைக்காத நாய் இனம் எது? பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம். விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது? நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினை...

பறவைகள் வலசை செல்வதன் காரணம்!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி எறும்பால், எவ்வளவு எடையை தூக்க முடியும்? பத்து முதல் இருபது மடங்கு எடையைத் தூக்க முடியும். இதை அதன் எடையோடு ஒப்பிட வேண்டும். சில எறும்பு இனங்கள், தனது எடையை விட ஐம்பது மடங்கு அதிகமாக தூக்குவதும் கூட உண்டு. எறும்புகள் எடையை தூக்கிக்கொண்டு மரத்தில், அல்லது பாறையில் செங்குத்தாக ஏறுவதையும் அதன் திறமையின் பங்காக சேர்த்துக்கொள்ளுங்கள். முதுகில் டாடா நானோ காரை கட்டிக்கொண்டு உலகின் உயரமான மலைச்சிகரத்தில் நீங்கள் ஏற முடியுமா? யோசித்துப் பாருங்கள். சுறாக்களின் பற்கள் பற்றி கூறுங்கள். சுறாக்களுக்கு, அதன் வாழ்நாளில் முளைக்கும் பற்களின் எண்ணிக்கை இருபது ஆயிரம். ஆறு முதல் இருபது வரிசையில் பற்கள் இருக்கும். முன்னே உள்ள பற்கள் இரையை பிடித்து கடித்து துண்டாக உதவுகிறது. மீன்களின் வயதை எப்படி அறிவது? அதன் செதில்களை வைத்து அறியலாம். மரங்களின் வயதை எப்படி அறிகிறோம். அதன் உட்புறத்திலுள்ள வளைய வடிவம் உதவுகிறது அல்லவா? அதே உத்திதான் இங்கும் உதவுகிறது. மீன்கள் செல்லும் திசையை சட்டென மாற்றிக்கொள்வது எப்படி? அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் சட்டியில் குழம்பாக கொதித்துக்கொண...

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...

தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அமெரிக்காவின் தேசிய மலர் எது? 1986ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ரோஜா, அமெரிக்காவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது? ஜோசப் காட்லெப் கோல்ராய்டர் என்ற ஆராய்ச்சியாளர், தேனீ மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையை 1761ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவர்தான், செடிகள் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை செய்வதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தவர். லில்லி விக்டோரியா அமேசானிகா என்ற தாவரத்தின் சிறப்பு அம்சம் என்ன? பிரமாண்டமானது. அமேசான் ஆற்றில் வளரக்கூடியது. இதன் இலைகள் ஆறு அடி நீளம் கொண்டவை. இலைகளில் சிறிய குழந்தையைக் கூட வைத்துக்கொள்ளலாம். வளர்ச்சி அடைந்த இலைகள் நாற்பத்தைந்து கிலோ எடையைத் தாங்கும். பூக்கள், முப்பது செ.மீ. அளவு கொண்டவை. இரண்டு இரவுகள் மட்டும்தான் மலர்ந்து பூக்கள் இருக்கும். முதலில் வெள்ளையாக இருந்து இரண்டாவது இரவில் ரோஸ் நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காட்சியளிக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு இரவுகளுக்கு பிறகு பூக்கள், நீரில் மூழ்கிவிடும். ஆரஞ்சு மரத்தின் ...

தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது? கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன? காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை. மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்? லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும்....

உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பி53 என்ற மரபணுவின் பயன் என்ன? இந்த மரபணு, டிஎன்ஏ சேதமாகும்போது செல்கள் புதிதாக உருவாவதை தடுத்து புற்றுநோய் அபாயத்தை முற்றாக தடுக்கிறது. அதேசமயம் இந்த பி53 மரபணு ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகும்போது, புற்றுநோய் ஆபத்து ஏற்படும். இந்த மரபணு பற்றி அறிந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க இதை பயன்படுத்திகொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். பி53 மரபணு, 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மரபணுவியலின் தந்தை என கிரிகோர் மென்டல் கருதப்பட காரணம் என்ன? அவர் பதினொரு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களை ஆராய்ந்து அதன் இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைத்தார். மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் துறவி. தனது தோட்டத்தில் உள்ள பட்டாணியை ஆராய்ந்து மரபணு பற்றிய உண்மைகளை உலகிற்கு சொன்னார். வில்லியம் பேட்சன் என்ற ஆராய்ச்சியாளர், மெண்டலின் ஆய்வை அறிவியல் உலகிற்கு கொண்டு வந்தார். மரபணுவியல் என்ற பதத்தையும் வில்லியம் அறிமுகப்படுத்தி வைத்தார். டார்வின், மெண்டல் என இரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் அறிவார...

காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா? ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள். உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது? பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ்  என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்? பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்ற...

மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி டைனோசர்களின் வாழ்நாள் பற்றி கூறுங்களேன். டைனோசர்கள் குறைந்தது எழுபத்தைந்து தொடங்கி முந்நூறு ஆண்டுகள் வரை வாழும். நீண்ட ஆயுள் காலம் என்பதால் அதன் முதிர்ச்சி பெறும் நிலையும் மிக மெதுவாக நடைபெறும். மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட, தென் அமெரிக்காவில் வாழ்ந்த விலங்கு. மூன்று மீட்டர் நீள உயரத்தில் கம்பளி போன்ற அடர்த்தியான முடிகளைக் கொண்டது. முப்பத்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருந்தது. இதற்கு நேராக வளர்ந்த தந்தங்களும் உண்டு. டைனோசர்கள் அழிந்துபோனதற்கு காரணம் என்ன? அவை அழிந்து அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. காலநிலை மாற்றம், பிற உயிரினங்களோடு போட்டியிட முடியாத நிலை, முட்டைகளை பிற உயிரினங்கள் அழித்தது, இயற்கை பேரிடர் என நிறைய காரணங்கள் உள்ளன. இவை எல்லாமே ஊகங்கள்தான். எவையும் உறுதியானவை அல்ல. அழிவின் விளிம்பில் , அச்சுறுத்தல் நிலையில் என்று கூறப்படுவதற்கு என்ன பொருள்? அழிவின் விளிம்பில் உள்ளதை கவனிக்கவேண்டும். அந்த பட்டியலில் உள்ளதை ...

டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...

வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஐரோப்பாவில் ரோஜர் பாகோன் என்பவர் வெடிமருந்துக்காக சூத்திரத்தை எழுதினார். ஜெர்மனைச் சேர்ந்த துறவி பெர்த்தோல்ட் ஸ்வார்ட்ஸ் என்பவர், வெடிமருந்தை உருவாக்கினார். போரில்லாத காலங்களில் வெடிமருந்தை சுரங்கம் கட்டுமான பொறியியலுக்கும் பயன்படுத்தினர். பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், கரி ஆகியவை வெடிமருந்தை தயாரிக்க உதவுகின்றன. இந்த சூத்திரத்தில் வெடிமருந்தை சீனர்கள் தயாரித்தனர். வெடிமருந்தை மூங்கிலில் நிரப்பி, மூங்கில் தோட்டா என்ற பெயரில் போரில் பயன்படுத்தி புத்திசாலிகள் சீனர்கள். டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்? ஆய்வாளர் ஆல்பிரட் நோபல். இவரது பெயரில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நைட்ரோ கிளிசரினை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் அஸ்கனியோ சோபிரிரோ கண்டுபிடித்தார். ஆனால், இதை பராமரிப்பது கடினமாக இருந்தது. நைட்ரோகிளிசரினை போரசுடன் சேர்த்தால், அதை கட்டுப்படுத்தலாம் என ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட டைனமைட்டை தயாரித்தார். டைனமைட் காரணமாக ஏராளமான மக்கள் இறந்த...

நீரில் மூழ்கும் மரக்கட்டை!

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தது யார்? அமெரிக்காவைச் சேர்ந்த எல்வுட் ஹைனஸ் என்பவர், 1911ஆம்ஆண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தார். இவர், பல்வேறு உலோகங்களை ஒன்றாக கலந்து ஆராய்ச்சி செய்யும்போது இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது. ஐக்கிய ராஜ்யத்தைச் சேர்ந்த ஹாரி பிரர்லி, ஸ்டீலை மேம்படுத்தினார். அதற்காக புகழும் பெற்றார். 1913ஆம் ஆண்டு, ஸ்டீலில் குரோமியம் சேர்த்தால், அதில் அரிப்பு ஏற்படாது என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். இவர்கள் இல்லாமல் பிரடெரிக் பெக்கெட், பிலிப் மொன்னார்ஸ், டபிள்யூ போர்ச்சர்ஸ் ஆகியோர் ஸ்டீலை மேம்படுத்திய பெருமைக்கு உரியவர்கள். டெக்னெட்டியம் என்றால் என்ன? யுரேனியத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளே டெக்னெட்டியம். இதை மருத்துவத்துறையில் நோயை கண்டறியும் சோதனையில் பயன்படுத்துகிறார்கள். கதிரியக்க தனிமம். 1937ஆம் ஆண்டு, கார்லோ பெரியர், எமிலியோ செக்ரே ஆகிய இருவரும் தனிமத்தை தனியாக பிரித்து சாதித்தனர். அமெரிக்காவிலுள்ள நாணயங்கள் எந்த உலோகத்தினால் ஆனவை? செம்பு, துத்தநாகத்தினால் ஆனவை. காலனிய காலகட்டத்தில் அதாவது ...

முட்டாளின் தங்கம்!

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி கியூபிக் ஸிர்கோனியம் என்றால் என்ன? 1937ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர்கள் எம் வி ஸ்டாக்ஹெல்பர்க், கே சுடோபா ஆகிய இருவரும் கியூபிக் ஸிர்கோனியத்தை கண்டுபிடித்தார்கள். 1970ஆம் ஆண்டு, சோவியத் யூனியனில் உள்ள லெபடேவ் இயற்பியல் ஆய்வகத்தில் கனிமங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதை மேற்பார்வை செய்தவர், விவி ஓசிகா என்ற அறிவியலாளர். அப்போது அந்த வட்டாரத்தில் ஸிர்கோனியம் புகழ்பெற்றதாக விளங்கியது. ஸிர்கோனியம் ஆக்சைடு, இட்ரியம் ஆக்சைடு என இரு வேதிப்பொருட்கள் கலந்து ஸிர்கோனியம் உருவாகிறது. மதிப்பு மிகுந்த உலோகம் என்னென்ன? தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களை மதிப்பு மிகுந்த உலோகங்களாக கூறலாம். மதிப்பிற்குரியது, அரியது என்ற வகையில் பிளாட்டினத்தைக் கூறலாம். இருபத்து நான்கு கேரட் என்பதற்கான அர்த்தம் என்ன? இருபத்து நான்கு கேரட் என்பது, நகையில் உள்ள தங்கத்தின் தூய்மை அளவைக் குறிப்பிடுகிறார்கள். பதினெட்டு கேரட் என்றால், தங்கத்தின் தூய்மை அளவு எழுபத்து ஐந்து சதவீதம் என புரிந்துகொள்ளலாம். வெள்ளை தங்கம் என்றால் ...

முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு!

படம்
      அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு? அமெரிக்கா. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று டிரோஸ் 1 என்ற தட்பவெப்பநிலை செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிடைத்த புகைப்படங்கள் அந்தளவு துல்லியமாக இல்லை. ஆனால், மேகங்கள், புயல்களைப் பற்றிய படங்கள் கிடைத்தன. மொத்தம் எழுபத்தேழு நாட்கள் மட்டுமே செயற்கைக்கோள் இயங்கியது. பிறகு, ஏற்பட்ட மின் விபத்தால் செயலிழந்துபோனது. தட்பவெப்பநிலை பற்றிய முதல் செய்தி லண்டனின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. ஆண்டு 1850. தட்பவெப்பநிலை பற்றிய ஒளிப்பரப்பு, விஸ்கான்சின் பல்கலைக்கழக நிலையத்தில் இருந்து 1921ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. பாரோமீட்டரை கண்டுபிடித்தது யார்? கிரேக்க வார்த்தையிலிருந்து பாரோமீட்டர் வார்த்தை வந்தது. இதன் பொருள், எடை. ராபர்ட் பாயல் என்பவர், பாரோமீட்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாயல் பாரோமீட்டரின் வடிவத்தை மாற்றி அமைத்தார். ராபர்ட் ஹூக் என்பவர், எளிதாக அதன் டயலை பார்க்கும்படி அதை மேலும் மேம்படுத்தினார். 1644ஆம் ஆண்டு பாரோமீட்டரை இவாங்கெலிஸ்டா டோரிசெல்லி என்பவர் கண்டுபிடித்தார். இவர் கலில...

புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

படம்
            அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹரிகேன் என்ற சொல்லின் மூலம் என்ன? மாயன் இனக்குழுவின் கடவுளான ஹூராக்கன் என்பதிலிருந்து ஹரிக்கேன் என்ற சொல் உருவானது. இக்கடவுள் விடும் மூச்சுக்காற்றே அதிக ஆற்றல் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? 1950ஆம் ஆண்டு தொடங்கி, சர்வதேச வானிலை அமைப்பு மூலம் கலந்துரையாடல் சந்திப்புகள் நடத்தப்பட்ட புதிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. இப்பெயர்களுக்கு கலாசாரம், நிலப்பரப்பு சார்ந்த தன்மை உண்டு. இவை, அட்லாண்டிக், கரீபிய, ஹவாய் பகுதியைச் சேர்ந்தவை. பருவக்கால புயல் மணிக்கு அறுபத்து மூன்று கி,மீ. வேகத்தைத் தாண்டினாலே அதற்கு தேசிய புயல் மையம், பெயர் சூட்டுவதற்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள். க்யூ, யு, எக்ஸ், ஒய், இசட் ஆகிய எழுத்துகளில் பெயர்கள் குறைவு என்பதால் இந்த எழுத்துகள் விலக்கப்படுகின்றன. புயல்களின் பெயர்களை நீக்குவது உண்டா? புயல்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஆறு ஆண்டுகள் ஆயுள் உண்டு பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்படுத்திய புயல்களின் பெயர்களை நாடுகள் விண்ணப்பம் செய்தால் சர்வதேச வானிலை அமைப்பு, நீக்கிவி...

புயல்களை துரத்திச் செல்வதன் பயன்?

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹபூப் என்றால் என்ன? மணல், தூசி கலந்த புயல் என்று ஹபூப்பைக் குறிக்கலாம். இதன் வேர்ச்சொல் அரபி மொழியில் இருந்து வந்தது. ஆப்பிரிக்காவின் சகாரா, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பாலைவனங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா ஆகியவற்றில் தீவிரமான புயல் வீசுவதைக் காணலாம். விண்ட் ஷியர் என்றால் என்ன? ஷியர் என்றால் காற்று மாறுபாடு என்று கொள்ளலாம். குறுகிய தொலைவில் காற்று வேகமாக சட்டென திசையில் மாறுபட்டு வீசும்.இடியுன் கூடிய மழையில் காற்று திடீரென திசை மாறி வீசுவதைக் காணலாம். அதேநேரம், விமானம் இச்சூழ்நிலையில் பயணிக்க நேர்ந்தால் ஆபத்து நேருவதற்கு வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலை முன்னரே உணர்ந்து விமானிகளை எச்சரிக்க, விமானநிலையங்களில் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. மைக்ரோ கிளைமேட் என்றால் என்ன? பெரிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பகுதியில் மட்டும் தட்பவெப்பநிலை, வீசும் காற்று, கருமேகங்கள் சூழ்வது என சூழல் மாறுவதை மைக்ரோகிளைமேட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  கடற்கரைப்பகுதியில் இப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்க...

வெப்ப அலை என்றால் என்ன?

படம்
        அறி்வியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெப்ப அலை என்றால் என்ன? 1935-1975 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதலில், பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் இறந்துபோனார்கள். எண்பதுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரத்து ஐந்நூறு பேர் இறந்துபோனார்கள். சூரிய வெப்பம் நாற்பது அல்லது நாற்பது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்வதே வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம். காற்றோட்டமான இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் அதிக மரணங்கள் ஏற்படாது. அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் முதியோரே வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெப்பஅலை பாதிப்பை அரசு அறிவித்துவிட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பநிலை தொகுப்புபட்டியல் என்றால் என்ன? சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது, காற்றின் வெப்பநிலை மாறும். வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸ் என அதிகரிக்கும்போது, மனிதர்களுக்கு நீர்ச்சுருக்கம், வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவது ஆகிய சிக்கல்கள் ஏற்படும். இதைக் கணிக்க பயன்படுவதே வெப்பநிலை தொகுப்புபட்டியல். 1816 என்ற ஆண்டை கோடைக்...

தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி   கான்கஷன் என்றால் என்ன? தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம். தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும். முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும். சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும் எப்போதும் உடலில் களைப்பு இருக்கும். மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும் பழக்கம் மாறும் மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும். வாந்தி வருவது போல தோன்றும் கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும். ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும் வாசனை, சுவையறியும் திறன் இழப்பு காதில் ஓலி கேட்கத் தொடங்கும் இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா? ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் ...

எந்த விளையாட்டில் வீரர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படுகின்றன?

படம்
             அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி      எந்த விளையாட்டில் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன? கால்பந்து, கூடைப்பந்து என இரு விளையாட்டுகளிலும் வீரர்கள் முழங்கால் வலி, காயங்களை அதிகளவு அடைகிறார்கள். இரண்டில் கால்பந்து முன்னிலை பெறுகிறது. அவசர உதவி தேவைப்படும் விளையாட்டு காயங்கள் என்றால் கூடைப்பந்து, சைக்கிள் ஆகிய விளையாட்டு போட்டிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் கால்பந்து உள்ளது. பேஸ்பால் விளையாட்டைப் பொறுத்தவரை 5 முதல் 14 வயதிலான சிறுவர்கள் காயமுற்று இறந்துபோவதே உண்டு. கதிர்வீச்சால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இயற்கையாக பல்வேறு பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. அதெல்லாம் மனிதர்களின் திசுக்களை அழிக்கும் அளவுக்கு வலிமையானதில்லை. ஆனால், மனிதர்கள் உருவாக்கிய அணு உலைகளில் பயன்படுத்தும் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை மனிதர்களின் மரபணுக்களை பாதித்து அதை மாற்ற முயல்கின்றன. இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு மரணத்தை சந்திக்கிறார்கள். இந்தியா போன்ற கல்வி அறிவு குறைந்த மூடநம்பிக்கை...

ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது. வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளித...