இடுகைகள்

நான்காம் காட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான்காம் காட்சி - லாய்ட்டர் லூன்

நான்காம் காட்சி :     சத்தம் எழுப்பாத குக்கூ                                                               கரட்டுப்புலி குக்கூவின் கதை பார்வையற்ற ஆண், பெண் இருவரின் காதல் சேர்ந்ததா இல்லையா என மனம் பதற வைக்கும் திரில் ராமெடி கதை. நகரத்தில் பாதிப்பேர் பார்த்த பார்வையற்றோரின் வாழ்வை எதுக்கு பாஸ்! சோகமாக காட்டிக்கிட்டு என ராஜூ முருகன் முடிவெடுத்து எல்லாப்பயவளுக்கும் புது சொக்காய் எல்லாம் போட்டுவிட்டு பளாபளா என்று கேமராவில் ஓளி ஓவியம் வரைய முயன்றிருக்கிறார். ஆனால் என்ன பண்ணுவது? ரொம்ப அவசரத்துல வரைஞ்சதால பாதி கிறுக்கலா போயிருச்சி.      அழகாக இருக்கும் காட்சிகளிலெல்லாம் ஆழமில்லாது போய்விடுகிறது. காவல்துறை பற்றிய சித்தரிப்பு இயக்குநரின் மனக்கசப்பை சொல்கிறதோ! ஒரு நிருபரின் பாணி படத்திலும் வந்து சோதிக்கிறது.      எளிய மனிதர்கள் விகடன் சாரதிதம்பி, குருமாவேலன் எழுதும் அரசியல் பேசுகிறார்கள். விகடனை உள்ளே கொண்டுவந்துவிட்டார்கள். நிச்சயம் அதற்கென்றே மார்க் அதிகம் போட்டுவிடுவார்கள் அப்பத்திரிக்கையில்.      எங்கேயோ பார்த்த திரைப்பட சம்பவங்களை நினைவுபடுத்துகிறது பல காட்சிகள். இய