புள்ளி விவரங்கள் ஏன் நாட்டிற்குத் தேவை?
புள்ளி விவரங்கள் ஏன் நாட்டிற்குத் தேவை? ராமமூர்த்தி அய்யாவு தொகுப்பு: விளாதிமீர் வான்யா · புள்ளிவிவரம் திட்டமிடல் · புள்ளிவிவரத்தன்மை · புள்ளிவிவர சேகரிப்பு சிக்கல் நாட்டின் எந்தப்பகுதிக்கு எந்த மக்களுக்கு தேவை என்பது சரியான புள்ளி விவரங்களின் மூலம் மட்டும் தெரிய வரும். பொருளாதாரத்திலே மூன்று அடிப்படை பிரச்சனைகள் உண்டு அதாவது, என்ன உற்பத்தி செய்வது, யாருக்கு உற்பத்தி செய்வது, எப்படி உற்பத்தி செய்வது என்பதைப்போல பொருளாதாரத்திட்டமிடலுக்கும் சரி அரசின் எந்த புதிய திட்டங்களுக்கும் சரி புள்ளி விவரங்கள்தான் அடிப்படை ஆதாரம். அப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் உண்மையானதாக இருக்கும்போதுதான் நாட்டின் வருமான பகிர்ந்தளிப்பு என்பது நல்ல விளைவை ஏற்படுத்தும். குறைந்த பட்சம் புள்ளி விவரங்கள் உண்மைக்கு அருகிலாவது இருக்கவேண்டும். No data is better than wrong data என்று சொல்லுவார்கள். தவறான தகவலை கொடுப்பதற்கு, கொடுக்காமலே இருக்கலாம். தவறான தகவல்களான புள்ளிவிவரம் என்பது நாட்டுக்கு செய்வது துரோகம் மட்டுமே. புள்