இடுகைகள்

ஃபால்கன் 9 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் ராக்கெட்டுகள் முன்னேறுவது அவசியம்!

படம்
எலன் மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட், 28 டன்கள் பேலோடுகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம்தான் நாசா, விண்வெளி வீரர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிலவுக்கு அனுப்பவிருக்கிறது. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் மிக மெதுவாக செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ பாகுபலி என அழைக்கும் ஜிஎஸ்எல்வி எட்டு டன்களை மட்டுமே விண்ணுக்கு கொண்டு செல்லும் திறன் உடையது. இதனை வைத்துக்கொண்டு எப்படி 2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்புவீர்கள். இதே கேள்வியை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், நடுப்பக்க கட்டுரையில் எழுப்பியிருந்தார். நிலவு கடந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் இன்னும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை கோருகிறது. ஆனால் இந்தியாவிடம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி தாண்டி வேறெதுவும் சாத்தியமான ராக்கெட்டுகள் இல்லை. 2008 ஆம் ஆண்டு இலகுவான பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1380 கி.கிதான். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரயான் 2, 3,850 கி.கி எடையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி எனும் ராக்கெட்டுகளை இஸ்ரோ ஆட்களே