இடுகைகள்

மக்களவைத் தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தே மாதரமா? வந்தே ஏமாத்துறோம்! - தேர்தல் 2019

படம்
தேர்தல் நாளில் என்ன செய்யலாம்? தேர்தலில் நேராக வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென பள்ளிக்குச் சென்று ஓட்டு போட்டுவிட்டு வந்து டிவி பார்ப்பது புத்திசாலித்தனமல்ல. தேர்தல் தொடர்பான சில சிக்கல்களை சந்தித்தால் அதனை எப்படி சமாளித்து தீர்வு காண்பது என்பதையும் யோசிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  49(P) சர்க்கார் விஜய் நமக்கு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒருவிரல் புரட்சி செய்தார் இல்லையா? அதேதான். நீங்கள் துபாய், அமெரிக்கா ஏன் பக்கத்து ஊரிலிருந்து கூட உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொண்ட பள்ளிக்கு வருகிறீர்கள். உள்ளே நுழைந்து சோதிக்கும்போதுதான் தெரிகிறது. உங்கள் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டு ஓடிவிட்டனர். என்ன செய்வீர்கள்.  நீங்கள்தான் குறிப்பிட்ட நபர் என புகைப்படம், ச்சீ அதைப் பார்த்தால் நம் குடும்பத்தினரே நம்ப மாட்டார்கள். எனவே பிற அடையாள ஆவணங்களை கொட்டாவி விடும் ஆபீசரை ஆறுதல் படுத்தி காட்டினால் 49 பி சட்டப்படி காகிதம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதில் உங்கள் ஓட்டைப் பதிவு செய்து இந்தியக் குடியரசின் மகுடம் கீழே  விழாமல் காப்பாற்றிவிட்டு நெட்ஃபிளிக்ஸில் இணையலாம்.  1

தேர்தலின் கதை!

படம்
Wishesh தேர்தலின் கதை! 1951 - 52 காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார். 1957 இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1962   இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர். 1967 நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் ச