இடுகைகள்

கலப்பு விலங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி