இடுகைகள்

சிபிஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

மணல் மாஃபியா தலைவனை கைது செய்ய முயலும் சிபிஐ அதிகாரி!

படம்
  மஃப்டி - கன்னடம் மஃப்டி (கன்னடம்) சிவராஜ்குமார், ஷான்வி, ஶ்ரீமுரளி ரோகணூர் என்ற ஊரில் உள்ள பாரதி ரத்தினவேல் என்ற மாஃபியா தலைவனை பிடிக்க அரசு முயல்கிறது. இதற்காக ஜனா என்ற சிபிஐ அதிகாரி, அண்டர்கவராக செல்கிறார். அவருக்கும் பாரதி ரத்னவேல் குழுவுக்குமான உறவு எப்படி அமைந்தது என்பதே கதை. மணல், மண், கனிமங்கள் என அனைத்தையும் அள்ளி வணிகம் செய்து ரோகணூர் என்ற ஊரில் பெரும் மாஃபியா தலைவனாக இருப்பவர் பாரதி ரத்னவேல். அவரை பிடிக்க அரசியல் கட்சிகள் அழுத்தம் தர சிபிஐ களமிறங்குகிறது. ஆனால், இந்த முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். எனவே, சிபிஐயே திணறுகிறது. இந்த நேரத்தில் ஜனா என்ற அதிகாரியை   நியமித்து அண்டர்கவராக இரு என்று கூறுகிறது. அவரும் மெல்ல பாரதி ரத்னவேலின் மாஃபியா குழுவில் சேர்ந்து மெல்ல உயர்கிறார். துறைமுகத்தில் ரவுடியாக இருப்பவர், மெல்ல பாரதி ரத்னவேலின் ரோகணூர் பகுதிக்கு செல்கிறார். அங்கு சென்று அவரைப் பற்றி ஆதாரங்கள் சேகரிக்கத் தொடங்குகிறார். அதாவது, அவர் செய்யும் குற்றங்கள், தொழில்கள் பற்றியவை. பாரதி

சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

படம்
    சிபிஐ விளையாட்டு !     மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு , முதல்வர் , அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை . சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா ? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது . 1946 ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது . இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது . இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது . சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட , ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது . அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம் . இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல . இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்