இடுகைகள்

மருந்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளது என்று சொல்லலாம் . மாரடைப்புக்கு

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா

கொரோனாவை ஒழிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உதவுமா?

படம்
கொரோனாவுக்கு பல்வேறு மருந்துகள் கண்டறிய உலகம் முழுக்க ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். வைரஸ்களின் டிஎன்ஏ மாற்றிக்கொள்ளும் இயல்பால் அதனை அழிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. எந்தெந்த வேதிப்பொருட்களை சேர்த்தால் வலிமையான மருந்தாக உருவாக்க முடியும் என சூப்பர் கணினியை நம்புகின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம், சுமித் எனும் சூப்பர் கணினியை தங்களது ஆய்வுக்காக அணுகியுள்ளது. ஐபிஎம்மின் சூப்பர் கணினி எழுபதிற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை ஒன்றாக கலந்து கொரோனாவிற்கான மருந்தை கூறியுள்ளது. சாதாரணமாக ஆய்வகங்களிலேயே மருந்துகளை கண்டுபிடிக்காமல் ஏன் கணினி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள்? காரணம், சாதாரணமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். வேதியியல் மற்றும் இயற்பியல் தெரிந்த நிபுணர்கள் மூலம்தான் நாங்கள் கணினிக்கான தகவல்களை உருவாக்கியுள்ளோம். வெறும் புரதங்களை மட்டும் கணினி கூறாமல் எந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூட கணினி வரிசைப்படுத்தியுள்ளது என்கிறார் ஐபிஎம் கணினியைச் சேர்ந்த டேவ் துரக். நன்றி - டிஜிட்டல் டிரெண்ட்ஸ்

இந்தியாவை மிரட்டும் தொழுநோய்!

படம்
இந்தியாவுக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. ஆம் வேதனையான பெருமைதான். உலகில் 58 சதவீத தொழுநோய் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். ஹான்சன்ஸ் என குறிப்பிடப்படும் இந்த நோய் மைக்ரோபாக்டீரியம் காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கண்கள், மூக்கு, கை, கால்கள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதை ஓராண்டு மல்ட் டிரக் முறையில் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியும்.  தோலில் ஏற்படும்போது உணர்ச்சியற்ற தன்மை உருவாகும். பின்னர் மெல்ல பல்வேறு உறுப்புகளுக்கு பரவி, அதன் செயல்பாடுகளை பாதிக்கும். கண்களில் தொற்றும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு தொழுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு முற்றிலும் போகவில்லை. இதனை எளிமையாக ஒழித்துவிட்டோம் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொன்னாலும் இதனை முற்றிலும் கணிக்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம். உடல் உறுப்புகளின் உணர்வு குறைவது, வலியற்ற குடல் புண், ஆகியவை ஏற்படும். முன்னமே மருத்துவர்களைக் கண்டு நோய்க்கு மருந்து சாப்பிடாதபோது, நோய் பாதிப்பு இன்னும் கூடுதலாகும். நோய்த்த

மன அழுத்தம் போக்கும் மருந்துகளை மக்கள் நம்புவதில்லை. காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி மன அழுத்தம் போக்கும் மருந்துகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏன்? இன்று மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. வான்டட் ஆங்கிலப் படத்தில் மெக்அவி அடிக்கடி மன அழுத்தப் பிரச்னைக்காக மாத்திரைகள் சாப்பிடுவார். அது இயல்பானதாக இன்று மாறியுள்ளது. காரணம் உணர்ச்சிகளை நாம் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத இயலாமை உள்ளது. இவை இரவில் நம் மனதில் குத்தல் கொடுக்க, மூளையில் கனவுகள் உருவாகின்றன. பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது செரடோனின் சுரப்பைக் குறைக்கும் புரோஸாக், சிட்டலோபிராம் ஆகிய மாத்திரைகளைத்தான். மன அழுத்தம் உங்களுக்கு எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் மருந்துகளின் டோஸ்களை முடிவு செய்வார். எனவே அவசரப்படாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது மூளையை அமைதிப்படுத்தி பதற்றம் குறைக்கும். சாதாரணமாக ஒருவரோடு உட்கார்ந்து பேசினாலே மனம் லேசாகும். இதைத்தான் உளவியல் மருத்துவரும் செய்கிறார். நன்றி - பிபிசி

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்

ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள்

படம்
ஒற்றைத் தலைவலிக்கு இன்று விக்ஸ், அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங், ஜண்டு பாம் , டைகர் பாம் என விதவிதமான தீர்வுகள் உண்டு. ஆனால் அன்று ஒரே தீர்வு, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும் கைமருந்துகள்தான். இல்லை ஆயா சொல்லும் பச்சிலை மருந்துகள்தான். ரத்தம் வெளியேறினால் தலைவலி நிற்கும் ஆம். நவீன மருத்துவம்  வரும் முன்பு உடலிலிருந்து  குறிப்பாக மூக்கிலிருந்து சிறிது ரத்த த்தை வெளியேற்றினால் தலைவலி குறையும் என ஊர் என்ன உலகமே நம்பியது. பின்னர் ஸ்விஸ் நாட்டு மருத்துவர், சாமுவேல் அகஸ்டே தலைவலிக்கான மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தினார். பூண்டு பேய் வந்தால் பூண்டைக் காட்டி தப்பிவிடலாம் என பேய் சீரியல்களை தூர்தர்ஷனில் பார்த்து நம்பிய அப்பாவி நான். ஆனாலும் பூண்டை தலைவலிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியபோது பெரிய ஆச்சரியமில்லை. வாயு சமாச்சாரத்திற்கு இதனைப் பயன்படுத்தும்போது வலி சமாச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதா? என சமாதான சகாவு ஆனேன். 11 ஆம் நூற்றாண்டு அபு அல் காசிம் எனும் மருத்துவர் பூண்டை தலைவலிக்கான சூப்பர் மருந்தாக பரிந்துரைத்தார்.  கையில் காயம் செய்து அதில் பூண்டைப் புதைத்து விநோத வைத

தூங்கும்போது ஜெர்க் ஏற்படுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது திடீரென கீழே விழுவது போல தோன்றுகிறதே ஏன்? உலகிலுள்ள 70 சதவீதம் பேருக்கு நடைபெறும் இக்குறைபாட்டு பிரச்னைக்கு ஹைப்னிக் ஜெர்க் என்று பெயர். என்னுடைய நண்பர் தூங்கும் முதல் பத்து நிமிடம் உடல் மெல்ல துடிக்கத்தொடங்கும். பின் மெல்ல தூக்கத்தில் ஆழ்வார். இதுகுறித்து அவரிடம் விழித்தெழுந்தபின் கேட்டேன். கீழே விழுவது போன்று தோன்றியது என்றார். இதற்கு முக்கியக்காரணம், மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு சரியான வித த்தில் இல்லாத தே. இதனால் மூளை சோர்ந்துபோய் விட்டுர்ரா ங்கொய்யால எனும்போது உடல் நோ நோ நாளைக்கு நிறைய வேலை இருக்கு என உடல் இழுத்துப் பிடித்தால் அன்று இரவு தூக்கம் உங்களுக்கு சரியாக வராது. அளவுக்கு அதிகமான காஃபீன் பொருட்கள் மற்றும் அட்டரால், ரிடாலின் ஆகிய மருந்துகளைச் சாப்பிட்டாலும் இதுபோல தூங்கும்போது ஜெர்க் வரும் . இதனைக் குறைத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கேரண்டி. நன்றி: க்யூரியாசிட்சி

குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?

படம்
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா? ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு. மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது. முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில்  இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது. நன்றி: பிபிசி

புற்றுநோய் ஆராய்ச்சியின் உண்மை என்ன தெரியுமா?

படம்
மீடியம்.காம் புற்றுநோய்க்கு தீர்வு கிடையாதா? அடிக்கடி அறிவியல் தளங்களில் நாம் பார்க்கும் செய்திதான். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு: இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை. சிகிச்சை வந்துவிட்டது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் என்பதெல்லாம் படித்து சலித்திருப்பீர்கள். முடியாது என்பது கிடையாது. ஆனால் முயற்சிகள் போதாது. நியூயார்க் போஸ்ட் முதல் ஃப்யூச்சரிசம் வரை புற்றுநோய்க்கு மருந்து என்றாலும் இது சாதாரணமாக முடியாது. உலகில் ஐந்தில் இரண்டுபேரும், நூறில் 40 சதவீதம் பேரும் புற்றுநோய் அபாயத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த கம்பெனியான AEBi புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் விளம்பரத்திற்காக உண்மையில் ஏதேனும் சிகிச்சையில் மாற்றம் உள்ளதா? மூத்திரச்சந்தில் விரைவீக்கம், விந்து முந்துதல்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் போல புற்றுநோய் மருத்துவர்கள் மாறி வருகின்றனர். என்ன மஞ்சள் நோட்டீஸ் கிடையாது. முழுப்பக்க டைம்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்கள். பின்னே அந்தஸ்து முக்கியம் அல்லவா? இஸ்ரேல் கம்பெனியும்