புற்றுநோய் ஆராய்ச்சியின் உண்மை என்ன தெரியுமா?



மீடியம்.காம்






புற்றுநோய்க்கு தீர்வு கிடையாதா?


அடிக்கடி அறிவியல் தளங்களில் நாம் பார்க்கும் செய்திதான். புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு: இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை. சிகிச்சை வந்துவிட்டது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் என்பதெல்லாம் படித்து சலித்திருப்பீர்கள்.

முடியாது என்பது கிடையாது. ஆனால் முயற்சிகள் போதாது. நியூயார்க் போஸ்ட் முதல் ஃப்யூச்சரிசம் வரை புற்றுநோய்க்கு மருந்து என்றாலும் இது சாதாரணமாக முடியாது. உலகில் ஐந்தில் இரண்டுபேரும், நூறில் 40 சதவீதம் பேரும் புற்றுநோய் அபாயத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.


தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த கம்பெனியான AEBi புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் விளம்பரத்திற்காக உண்மையில் ஏதேனும் சிகிச்சையில் மாற்றம் உள்ளதா?


மூத்திரச்சந்தில் விரைவீக்கம், விந்து முந்துதல்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் போல புற்றுநோய் மருத்துவர்கள் மாறி வருகின்றனர். என்ன மஞ்சள் நோட்டீஸ் கிடையாது. முழுப்பக்க டைம்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்கள். பின்னே அந்தஸ்து முக்கியம் அல்லவா? இஸ்ரேல் கம்பெனியும் ஒரு ஆண்டுக்குள் புற்றுநோய்க்கு கல்லறை கட்டுவோம் என பேசியுள்ளனர். மருந்துகளை டெலிவரி செய்வது, புற்றுநோய் ஆராய்ச்சி என பரபரப்பாக இயங்கி வரும் கம்பெனி 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கம்பெனியின் புற்றுநோய் அக்கறை மீது பிரச்னையில்லை. ஆனால் தவறு எங்கே நடக்கிறது?

மனிதர்களின் மீது 5 சதவீதம் மட்டுமே புற்றுநோய் சோதனைகளை நடத்துகின்றனர். பூனை, எலிகள் மீது மருந்துகளை முதல்நிலை சோதனைகளை நடத்திவிட்டு உடனே தந்தி மாதிரி பேப்பரை கூப்பிட்டு பேட்டி தட்டி விடுகின்றனர். அப்புறம் மார்க்கெட்டில் கம்பெனி பங்குகள் விற்பனையில் எகிறும். பிளான் சக்சஸ் ஓகே. ஆனால் புற்றுநோய் நோயாளிகள் எப்படி பிழைப்பார்கள்?



நன்றி: மீடியம்