லவ் இன்ஃபினிட்டி: காதல் இல்லைனா நட்பு தொடரட்டுமே!


Love Card
Pexels.com





லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ரிஷ்வான், மீகா

திங்கட்கிழமை காலேஜ் முடிஞ்சு நானும் முகமதுவும் நேராக பஸ்ஸைப் பிடித்தோம். எந்த இலக்கும் கிடையாது. ஈரோடு போய் நேராக படத்துக்குப் போய்விட்டோம்.

படத்தோட பேரு சொன்னா உனக்கே பிடிக்கும்.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!

படம் Super.

கதை இதுதான். இப்போ நான் உன்னை Love பண்ணினேன். நீ பண்ணலை. அப்பவும் நான் உன்கூட பேசினேன்(ஓகே, கொஞ்ச நாள் கழித்துத்தான்) பழகினேன். முன்பு எவ்வளவு அன்பு உன்மேல் வைத்திருந்தேனோ அதைவிட அதிகமாத்தான் இப்போ இருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். இதுதான் உண்மையான அன்பு. நான் உன்கிட்ட பேசாம பழகாம இருந்தேன் என்றால் இத்தனை நாள் உன்னை Love  பண்ணியதே சும்மா என்றாகிவிடும்.

எதையும் எதிர்பார்க்காம நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன்னை நேசித்து கொண்டிருக்கிறேன் நான். இனி Story க்கு வருவோம். மேலே சொன்னது எக்சாம்பிள்.

ஷாம், ஸ்னேகாவை Love பண்ணுவான். ஷாமின் அத்தைப் பொண்ணு ஸ்னேகா. ஷாமோட பர்த்டேவுக்கு ஸ்னேகாகிட்ட நான் உன்னை Love பண்றேன்னு சொல்றாரு. ஆனா அவ Affection  வேற Love Feeling இல்லை என்று விடுவாள். ஷாமோட friend அவதான் உன்னை love பண்ணலை. நீ ஏன் அவகூட பேசுகிறாய். பழகுகிறாய் என்பார்கள்.

நீ ஒண்ண கொடுத்தா நான் ஒன்ன கொடுக்கிறதுன்னு சொல்ற வியாபாரம் இல்ல.

Love பண்ணலைன்னா என்ன? இதுக்கு முன்னாடி நாங்க எப்படி இருந்தோமோ அப்படித்தான் இனி மேலும் இருப்போம். அப்படின்னுவான். அப்புறம் ஷாம் - ஸ்னேகா Marriage பண்ணிக்குவாங்க. காதல்ல தோத்துட்டா தம், தண்ணி தற்கொலை அதுக்கு தீர்வல்ல. கடைசிவரை காதலோட இருக்கிறதுதான்.

நல்லா இருக்கா? Theme எனக்கு. பிடிச்சிருக்கு. ஏன்னா நான் அப்படியேதான். பழைய மோகனாக இருக்கிறேன்.

புதன் கவி பர்த்டே (17.6.2002). நான் க்ரீட்டிங் அனுப்பிப்பிட்டேன். உன் பேரையும் போட்டுத்தான். இப்படி மோகன் - மைதிலி எழுதினா ஓக்கேவா?

இனிமேல் நீ Lr  கொடுக்காத. நேர்ல பேசலாம்னு சொல்லியே ஒரு வருஷம் போயிருச்சு. இந்த வருஷமும் அப்படியே போயிருமோ? மீரா கவிதை புக் படி. இன்னிக்குத் தந்த புக், கவிதை எல்லாத்தையும் நான் சொல்றப்போ ஒரு கவர்ல போட்டுத் தா. ஓகே.  நல்லாப் படி. நல்லா சாப்பிடு. முடிஞ்சவரைக்கும் மனசை சந்தோஷமாக வெச்சுக்கோ.

(காதல் மணம் வீசும்)