ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது



Anatol Lieven.
Scroll.in





நேர்காணல்
பத்திரிகையாளர் அனடோல் லீவன்
தமிழில்: ச.அன்பரசு


இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா?

ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு.

இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? 

இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது.

மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே?

மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனும் இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது இரு நாடுகளுக்கும் நல்லது.


பாகிஸ்தானின் புதிய வாளாக லஸ்கர் இ தொய்பாவை விலக்கி ஜெய்ஸ் இ முகமது அமைப்பு வளர்ந்துள்ளதா?

முதிர்ச்சியற்ற பேச்சு இது. இதன் பின்னணியில் பாக். உளவுத்துறை அமைப்புகள் இருக்கலாம். ஆனால் ஜெய்ஸ் இ முகமது அமைப்பு நடத்திய தாக்குதல் அவர்கள் நினைத்து பார்க்க முடியாத வெற்றியைத் தந்திருக்கிறது என்பது உண்மை.

நன்றி: ஸ்க்ரோல்.இன்(இப்சிதா சக்ரவர்த்தி)