எனக்கு கிடைத்த மறக்க முடியாத நண்பர் நீங்கள்! கடிதங்கள்
அன்பு நண்பர் கதிரவனுக்கு , நலமா ? உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நலமாக இருப்பார்கள் என நினைக்கிறேன் . பெருந்தொற்று காலகட்டத்தில் வேலையை காப்பாற்றிக்கொள்வதே கடினமாக உள்ளது . இதழ்களில் விளம்பரங்கள் கிடைப்பது வெகுவாக குறைந்துவிட்டது . பொதுவாக அனைத்து தொழில்களும் தள்ளாடி வருகின்றன . பொதுமுடக்கம் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது . நீலகண்ட பறவையைத் தேடி என்ற நாவலின் சில பகுதிகளை படித்தேன் . வங்கதேச முஸ்லீம்களின் வாழ்க்கையை பேசும் நூலில் 60 பக்கங்கள் நிறைவு பெற்றுள்ளன . இப்போதுள்ள நிலையில் மனநிலையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையை செய்வது கடினமாக உள்ளது . படங்கள் பார்ப்பதை விட யூட்யூபில் டிவி தொடர்களை பார்த்து வருவதே எனது பொழுதுபோக்காக மாறிவிட்டது . கொரிய டிவி தொடர்களில் புதிய ஐடியாக்கள் , பாத்திரங்கள் , இந்திய மனநிலை , மதிப்புகள் என நிறைய விஷயங்களை அழகாக பேசுகிறார்கள் . பேரிளம் பெண்ணின் அழகிய வனப்பும் வளங்களும் , குழந்தையின் மனமுமாக கொரிய டிவி தொடர் பெண்கள் காட்டப்படுவது புதுமை . சீரியல் கொலைகாரர்களின் மனநிலை பற்றிய நூல்களை படித்து வருகிறேன் . இதனை எதிர்வரும் நாட்களில