இடுகைகள்

கரண் தாப்பர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - இன்டர்நெட் ஆர்ச்சீவில்....

படம்
கரண் தாப்பரின் நூல் பற்றிய விமர்சனம். பாட்காஸ்ட் வடிவில்.... https://archive.org/details/sunday-sentiments

பத்திரிகையாளராக ஊடகவியலாளராக கரண் தாப்பர் எதிர்கொண்ட சுவாரசிய அனுபவங்களின் தொகுப்பு - சண்டே சென்டிமென்ட்ஸ்

படம்
                  சண்டே சென்டிமென்ட்ஸ் கரண் தாப்பர் கட்டுரை நூல் பத்திரிகையாளர் கரண் தாப்பர், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். தற்போது தி வயர் இணைய பத்திரிகையில் நேர்காணல்களை எடுத்து வருகிறார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே சென்டிமென்ட் பத்தியை எழுதி வருகிறார். படித்து பட்டம் பெற்றபிறகு, இங்கிலாந்தின் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியவர். பிபிசியில் ஹார்ட் டாக் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். இந்தியாவில் டெவில்ஸ் அட்வகேட் என்ற நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர். குறிப்பாக, இன்றைய இந்தியாவின் ஆட்சித்தலைவர், குஜராத் முதல்வராக இருக்கும்போது அவரிடமே, அவரும் கட்சியினரும் உருவாக்கிய கோத்ரா கலவரம் பற்றி கேள்விகேட்ட தைரியசாலி. அதனால் அந்த பேட்டி ஏழு நிமிடங்களில் முடிந்துபோனது. அந்த பேட்டிக்கு பிறகு பாஜகவினர் எவரும் கரண் தாப்பருக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு இடப்பட்டது. விமர்சனங்களை பொறுக்க முடியாத தரம் தாழ்ந்த கீழ்த்தரமான பாசிச சுயமோக அரசியல்வாதி காரணமாக கரண் தாப்பர், நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சிகள் பாதிக...

காரியத் தடைகளால் நின்றுபோன செயல்கள்!

படம்
  நாளிதழ் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. அவர் மோடியைப் பற்றிய கூறியவைதான் அவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள். என்...

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் ...

பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

படம்
  கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி பத்திரிகையாளர் கரண் தாப்பர்  இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா? இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,   ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர். பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் ...