"கவர்னருக்கு எதிராக துப்பாக்கியை நாங்கள் தூக்கமுடியுமா?"
நேர்காணல் தர்ணாவை விடுத்து நாங்கள் துப்பாக்கியையா தூக்க முடியும்? மனிஷ் சிசோடியா , துணை முதல்வர் , டெல்லி . தமிழில் : ச . அன்பரசு டெல்லியில் கவர்னர் மாளிகையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மனிஷ் ஆகியோர் செய்த ஒரு வாரகால உண்ணாவிரத தர்ணா இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது . ஐஏஎஸ் அதிகாரிகள் பணிசெய்யவில்லை என்பதே டெல்லி முதல்வரின் தர்ணாவுக்கு காரணம் . அர்விந்த் கெஜ்ரிவாலின் பழைய பாணி தர்ணா போராட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே ? அமைதிவழி போராட்டத்திற்கு சாதாரண மனிதனிடம் வேறு என்னதான் வாய்ப்பிருக்கிறது , சொல்லுங்களேன் ? உங்களை எப்படி பொதுமனித ராக அடையாளப்படுத்துவீர்கள் ? எங்களுக்கு வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை . நாங்கள் துப்பாக்கியை தூக்க முடியுமா ? கவர்னரை சந்திக்க நேரம் கேட்டோம் . சந்திக்க மறுத்ததோடு காத்திருப்பு அறையிலிருந்த எங்களை தொடர்ந்து புறக்கணித்தார் . விக்டோரியா ராணி காலத்தில் சுதந்திரப் போராட்டக்காரர்களைக்கூட கவர்னர் சந்தித்திருக்கிறார் . இப்போது எங்களை