கொரோனா கற்றுத் தந்த பாடங்களை மறக்க கூடாது!
சின்மய் தும்பே சின்மய் தும்பே பொருளாதார பேராசிரியர் ஐஐஎம் அகமதாபாத் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்று்க்கொண்ட விஷயங்களை பின்பற்றுவதுதான் எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை காக்கும் என்கிறீர்கள் . இந்தியா அப்படி பாடங்களை கற்றுக்கொண்டது என நினைக்கிறீர்களா ? ஆம் , இல்லை என இரண்டுவிதமாகவும் இதற்கு பதில் சொல்லலாம் . நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னமே நடவடிக்கை எடுப்பது பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் . 1817 றற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் பெருந்தொற்று ஏற்பட்ட வரலாற்றை இந்தியா அம்னீசியா வந்த து போல மறந்துவிட்டது . இந்த பாதிப்பில் 40 மில்லியன் மக்கள் இறந்துபோனார்கள் . கடந்துபோன பெருந்தொற்றை கவனித்தால் , தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதை எளிதாக கணித்திருக்க முடியும் . சீனாவில் 1911 ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொழிலாளர்களை சிறப்பாக கையாண்டது . அக்காலகட்டத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் பனியில் சிக்கி இறந்தனர் . நாம் நேரடியாக அதனை எடுத்துக்காட்டாக கொள்ளமுடியாவிட்டாலும் கூட அப்பாடங்களை மறக்க கூடாது . கொரோனா முதலில் சீன வைரஸ் என்று கூறப்பட்டது . பின்னாளில்