இடுகைகள்

பரிணாமவளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

கலாப்பகோஸ் தீவு ஆச்சரியகரமானது! - வில்லியம் ஹெச் துர்ஹாம்!

படம்
  நேர்காணல் வில்லியம் ஹெச் துர்ஹாம்  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கலாப்பகோஸ் தீவில் உள்ள உயிரினங்கள் பற்றிய ஆய்வு செய்து வருகிறார்.  கலாப்பகோஸ் தீவு மனித வாழ்க்கையோடு எந்த விதத்தில் இசைவாக உள்ளது? கலாப்பகோஸ் தீவு, மனித வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் தனித்துவமான இடம். மனிதர்களின் பலம், திறன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை பிற உயிரினங்களிடமும் காணலாம். நாம் பெரும் உயிரினங்களின் இனக்குழுவில் ஒரு அங்கம். தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவையும் நமக்கு உறவினர் போலத்தான். இதை உணர்ந்தாலே இயற்கை சூழலை கையாளும் முறைகள் மாற வாய்ப்புள்ளது.  காலநிலை மாற்றத்தால் கலாப்பகோஸ் தீவு பாதிக்கப்பட்டுள்ளதா? தீவில் உள்ள உடும்பு (Marine iguana), நீளமானது. காலநிலை மாற்றத்தால் அதன் நீளம் தற்போது குறைந்து வருகிறது. இம்மாற்றம் 1905 தொடங்கி 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றம், வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது கடலிலுள்ள பாசிகளை அழிக்கிறது. கடல் பாசிகளை உடும்புகளின் முக

கருவுறாத முட்டை செல்களிலிருந்து கரு உருவாவதைப் பற்றி கூறியவர் - ஆஸ்கர் ஹெர்ட்விக்

படம்
பயா(லஜி) டேட்டா ஆஸ்கர் ஹெர்ட்விக் (Oscar Herwig 1849-1922) ஜெர்மனியின் ஹெசன் நகரில் பிறந்தார். பெற்றோர், கார்ல் ஹெர்ட்விக், எலிசெ டிராப்.ஜெனா பல்கலைக்கழகத்தில் படித்தார். உடற்கூறியல் மருத்துவர் எர்னஸ்ட் ஹெக்கல், ஆஸ்கருக்கு வழிகாட்டினார்.  ஆஸ்கர், முதலில் கரு மேம்பாடு பற்றி படித்தவர், பிறகு கருவுறுதலின் செயல்முறைகளைக் கற்க ஈடுபாடு காட்டினார். 1875ஆம் ஆண்டு ஹெக்கலோடு மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு சென்றார். அங்கு முள்ளெலிகளின் இனப்பெருக்கும் பற்றிய ஆய்வைச் செய்தார். தனது ஆய்வை ஆவணமாகவும் பதிவு செய்தார்.  1890ஆம் ஆண்டு நட்சத்திரமீன் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதில், கருவுறாத முட்டை செல்லில் இருந்து கரு உருவாவதைப் பற்றி முதன்முதலில் தகவல் அறிந்து ஆவணப்படுத்தியவர் ஆஸ்கர்தான். இதற்கு, பார்த்தினோஜெனிசிஸ் (parthenogenesis) என்று பெயர்.உடற்கூறியல் - உயிரியல் கழகத்தின் தலைவராக 1888 - 1921 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.  சாதனை 1916ஆம் ஆண்டு, டார்வினின் பரிணாமவளர்ச்சி கோட்பாட்டை எதிர்த்து “The Origin of Organisms: a refutation of Darwin’s theory of chance” என்ற நூலை எழுதினார்.    https://www.bbvaopen

இந்தியாவில் முஸ்லீம்களின் இடம் என்ன? - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம்! லீவிங் இஸ் நாட் தி ஹார்டஸ்ட் திங் லாரன் ஹியூ ஹாசெட் ரூ.699 லாரனின் வாழ்க்கையைப் பேசும் கட்டுரைகள் இவை. அமெரிக்க விமான சேவையில் வேலை செய்தவர், ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பில் பௌன்சராக இருந்திருக்கிறார். கேபிள் இணைப்பு கொடுப்பவராக வேலை செய்திருக்கிறார். பால்புதுமையினராக ஒருவர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பதிவு செய்திருக்கிறார் லாரன். மிட்நைட் டோர்வேய்ஸ் உஸ்மான் டி மாலிக் ஹாசெட் ரூ.499 இந்த நூலில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்திலும் நட்பு, காதல், நெகிழ்ச்சி, துரோகம், அநீதி என ஏராளமான உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.  தி ரெசிலியன்ட் சொசைட்டி மார்க்கஸ் பிருன்னர்மெய்யர் ஹார்பர்கோலின்ஸ் ரூ.699 பெருந்தொற்றுக்கு பிறகு உலகம் பொருளாதார பிரச்னையிலிருந்து இப்போதுதான் மீள்கிறது. உலகமயமாக்கலை எப்படி சவால்களை எதிர்கொண்டு நடைமுறைப்படுத்துவது என்பதை ஆசிரியர் சொல்லுகிறார்.  அன்மாஸ்கிங் இண்டியன் செக்குலரிசம் ஹாசன் சரூர் ரூ.295 இந்தியாவில் இந்துகள் பெரும்பான்மையான உள்ள நிலையில் முஸ்லீம்களின் இடம் என்ன, மதச்சார்பற்ற தன்மை சாத்தியமா என்பதை நூலில் ஆசிரியர் விளக்கியிருக்க