இடுகைகள்

சுரேந்தர் ரெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாரும் புரிந்துகொள்ள முடியாத வினோதமான அடியாள் - ஊசரவல்லி - டோனி

படம்
  ஊசரவல்லி - டோனி ஊசரவல்லி - டோனி  ஊசரவல்லி (தெலுங்கு) டோனி (ஜூனியர் என்டிஆர் ) இயக்குநர் - சுரேந்தர்ரெட்டி   ஊசரவல்லி படத்தில் வரும் டோனி பாத்திரத்தை யாருமே புரிந்துகொள்ள முடியாது. இதற்காகவே முரளி சர்மா, பிரபாஸ் சீனுவின் தொடக்க காட்சியை வைத்திருக்கிறார்கள். இதில் டோனி என்பவன் எறும்புக்கும் தீங்கு நினைக்காதவன். அதேசமயம் தனக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்க என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய, அதற்கு தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடியவனாக அறிமுகப்படுத்தி பேசுவார். படத்தின் தெலுங்கு தலைப்பின் பொருள் பச்சோந்தி. ஜூனியர் என்டிஆரின் சிறந்த அறிமுக காட்சிகளில் ஊசரவல்லியும் ஒன்று. டோனியைப் பொறுத்தவரை தனக்கு காரியம் ஆகுமென்றால் எப்படியென்றாலும் மாறக் கூடியவன். விதிகளை அழித்து மீண்டும் எழுதினாலும் அதையும் அழித்துவிட்டு தனக்கு பிடித்ததுபோல காரியங்களைச் செய்பவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாத   குணம் கொண்டவன். டோனி, கூலிக்கு பிறரை அடித்து மண்டையைப் பிளக்கும் அடியாள். மும்பையில் வாழ்ந்து வந்தவரின் தந்தையும் டான் ...

செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

படம்
  கல்யாண் -கிக் (தெலுங்கு) ரவிதேஜா இயக்குநர் – சுரேந்திர ரெட்டி வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,   அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண். கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே? வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவ...

அமைதியான மெக்கானிக்கை அடங்காதவனாக மாற்றும் தங்கை பாசம்! - அசோக் - சுரேந்தர் ரெட்டி

படம்
      Director: Surender Reddy Produced by: Valluripalli Ramesh Writer(s): Surender Reddy, Vakkantham Vamsi, Gopimohan  அசோக் 2006 சுரேந்தர் ரெட்டியின் படம். இவர் முதலில் உருவாக்கிய படம் அதனொக்கடே. இதுதான் தமிழில் ஆதி என விஜய் நடிப்பில் வெளியானது.  அசோக் படத்தின் முதல் காட்சியே சண்டைதான். ஜூனியர் என்டிஆர் வில்லன்களை புரட்டி எடுக்கிறார். அதேநேரத்தில் போலீஸ்கார ர்களை கூட்டிக்கொண்டு பிரகாஷ்ராஜ் வருகிறார். அவர் வரும்போது அவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் எலும்புகள் நொறுங்கி கிடக்கிறார்கள்.  ஜூனியர் என்டிஆர் யார், பிரகாஷ்ராஜூவுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது படத்தின் நெகிழ்ச்சியான கதை.  மெக்கானிக்காக வேலை செய்யும் என்டிஆர் எப்போதும் நண்பர்களுடன்தான் இருக்கிறார். ராஜீவ்தான் அவருக்கு நெருக்கமான தோஸ்த். கோபப்படும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் நண்பன். அப்பா வீட்டை விட்டு விரட்டுவதால் நண்பர்களுடன் தங்கியிருக்கும் என்டிஆர்,  குடும்பத்துடன் சேர்வதையே முக்கியமாக நினைக்கிறார். அதேசமயம் ஜாலியாக ஆடிப்பாடுபவர் அங்கு சமீராவை பார்க்கிறார். பார்த்தவுடனே மனம் ஓகே சொல்ல ...

பச்சோந்தியாக குணம் மாறினாலும் காதலை மறக்காதவன்தான் டோனி! - ஊசரவெலி - சுரேந்தர் ரெட்டி

படம்
            ஊசரவெல்லி   காஷ்மீரில் என்டிஆர் ஜூர்(டோனி), தமன்னாவை(நிகாரிகா) சந்திக்கிறார். தீவிரவாதிகள் ஒவ்வொருவராக பிடித்து வைத்துள்ளவர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்டிஆர், தான் இன்னும் காதல், முத்தம், கல்யாணம் என எதுவுமே செய்யவில்லை என ஆதங்கப்பட அவருக்கு நச்சென முத்தம் கொடுத்து வாழ்க்கையை பூரணமாக்குகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். பின்னர் இருவரும் சந்திக்கிறார்கள். டோனி நிகாரிகாவை காதலிக்க தொடங்குகிறான். அது அவளது தோழிக்கு  வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் டோனிக்கு முன்பாகவே மந்திரியின் மகன் நிகாரிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுவிடுகிறான். ஆனால் டோனியைப் பொறுத்தவரை அதனால் என்ன என்று பதினைந்து நாள் டைம் கொடுங்கள் என்று நிகாரிகாவிடம் நேரம் கேட்டு காதலிக்கிறான். படத்தில் என்னதான் கதை என இந்த இடத்தில் நிறையப் பேர் பொறுமையிழந்து விட வாய்ப்பு அதிகம்.    ஆனால் இது சுரேந்தர் ரெட்டியின் படம். எனவே படத்தின் பின்பகுதி அழுகையான கதைக்கு முன்னதாகவே நிறைய காமெடி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை அத்தனையும் பிரமா...