இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!
இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்! இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில், குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9 ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர். மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. ”ஏரி அல்லது ஆற்று மீன்களைப் பற்றி