இடுகைகள்

ஜான் டக்ளஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் சீரியல் கொலைகாரர்களைப் பிடிக்க தனிப்பிரிவைத் தொடங்கியவரின் போராட்டம்!

படம்
  மைண்ட் ஹன்டர் நூல் மைண்ட் ஹன்டர் ஜான் டக்ளஸ்   அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான் டக்ளஸ், பிஹேவியர் சயின்ஸ் என்ற பிரிவை எப்படி தொடங்கி சீரியல் கொலைகாரர்களைப்பிடித்தார், அதற்கு அவர் உடல், மன ரீதியாக கொடுத்த விலையைப் பற்றி நூல் நெஞ்சிற்கு நெருக்கமாக நின்று பேசுகிறது. ஜான் டக்ளஸ் என்ற அதிகாரி, குவான்டிகோ காவல்துறையில், புரொஃபைல் செய்யும் ஆய்வுப்பிரிவில் தனி நபராக வேலை செய்து பின்னாளில் அதில் நாற்பது ஆட்கள் வேலை செய்யுமளவு சூழலை மாற்றுகிறார். இந்த முன்னேற்றத்திற்கான பயணம் எப்படி இருந்தது என்பதை அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகடியாக விளக்கி கூறுகிறார்.   தொழிலில் ஆர்வம் கூடிய காரணத்தில் பள்ளி ஆசிரியையான மனைவியை விவாகரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதையும் அவர் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் மனம் முழுக்க குற்றவாளிகளைப் பற்றிய நினைவுடன்தான் வாழ்ந்திருக்கிறார். இது, தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என அனைவரையும் வளர்த்தெடுத்தது அவரது மனைவி பாம்தான். ஜான் டக்ளஸ் முழுக்க குற்றவாளிகளை பிடிக்கவெனவே தனது ஆற்றலை அற