இடுகைகள்

அன்புள்ள அப்பாவுக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்று சகிப்புத்தன்மையை யாரும் விரும்புவதில்லை! அன்புள்ள அப்பாவுக்கு

படம்
பிக்சாபே 11 அன்புள்ள அப்பாவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நான் எனது ஜாதகம் பற்றி சில விஷயங்களை சோதித்துப் பார்த்தேன் . எனக்கு பெரும்பாலும் ராசிபலன்களிலேயே நல்ல பலன்கள் கிடைத்தது கிடையாது . இதில் ஜாதகத்தில் என்ன கிடைக்கப்போகிறது ? அப்படித்தான் நண்பர் ஜனாவும் சொன்னார் . அவர் இதனை நம்புகிறார் . நான் அதனை அறிவியல் முறையாக ஏற்கிறேன் . அதாவது கணக்கீடுகள் . நடக்கும் அனைத்திற்கும் முன்னோர் வினைதான் காரணம் என்று வருத்தப்பட்டு உட்கார்வதால் என்ன கிடைக்கும் ? உண்மையிலேயே பணம் என்பதை பொருட்டாக எடுக்காமல் சோதிடர் ஒருவர் ஜாதகம் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம் . பூமியும் சுற்றுகிறது . பூமியிலுள்ள நாமும் அதன்படியே இயங்குகிறோம் . எனவே ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை கண்டறிவது கடினம் . அப்படியும் சரியாகச் சொல்லிவிட்டால் , நமக்கு நேரும் துயரங்களைத் தடுக்க முயற்சிக்கலாம் . நீங்கள் பேசும் திருமணம் சாதாரண காரியமல்ல . நிறைய சோதனைகள் , நெருக்கடிகள் உள்ளன . ச . அன்பரசு 26.5.16 12 அன்புள்ள அப்பாவுக்கு , வணக்கம் . வாழிய நலம் . திருமண வாழ்க்கை நீ

அன்புள்ள அப்பாவுக்கு... மின்னூல் தரவிறக்க முகவரி!

படம்
அன்புள்ள அப்பாவுக்கு மின்னூலை  நீங்கள் எளிதாக தரவிறக்கிக் கொள்ள முடியும். அதற்கான வலைத்தள இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பீடிஎப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/hnhihfe9mrs4psm/AA.pdf/file இ பப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/n4sybn548xu9j3c/aa_bk.epub/file

திருமணம் ஏற்படுத்திய அதிர்ச்சி! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 10 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக   இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது. செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது. திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள். அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உங்களுக்கு சகோதரரிடம் நிறைய பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட. நன்றி! ச.அன்பரசு 7.5.16

உடலை குலைக்கும் நோய்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 9 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நான் இங்கு நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெயில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் காய்கிறது. பருத்தி உடையைத் தவிர வேறெதுவும் அணிய முடியவில்லை. பருத்தியானாலும் பதினைந்து நிமிடத்தில் நனைந்து வியர்வை வாடை மூக்கைத் துளைக்கிறது. இந்த ஞாயிறு எங்கும் வெளியில் செல்லவில்லை. அறையில் ஜனா சமைத்தார். இரவில் உள்ளே படுக்க முடிவதில்லை. கடுமையான புழுக்கம். மழை, வெயில் இரண்டையும் அப்படியே இந்த அறை அப்படியே கண்ணாடி போல பிரதிபலித்துவிடுகிறது. சில நாட்களாக மாடியில்தான் தூக்கம். நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். முத்தாரத்திற்கு எந்த விளம்பரமும் வருவதில்லை. இதனால் இதற்கு விற்பனையும் கிடையாது. மஞ்சள் காமாலைக்காக கீழாநெல்லி மருந்தை தினசரி குடித்து வருகிறேன். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே உடல் சரியாகிவிடும். முழு உடல் பரிசோதனையை நீங்கள் செய்யப்போவதாக அம்மா சொன்னார். இதற்கான சோதனைகளை மருத்துவமனைக்கு மருத்துவமனை மாற்றிச் சொல்லுகின்றனர். பொரித்தல், வறுத்தல் இல்லாத

கூட்டத்தில் தனியாக சிந்திக்கும் ஒருவன்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 8 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? விபத்தினால் ஏற்பட்ட வலி இன்னும் உங்களுக்கு தொடையில் இருக்கும். நீங்கள் நலம்பெற பெருமாளை பிரார்த்திக்கிறேன். விபத்து என்பது தற்செயலானது என்பதால் அதில் நமது கட்டுப்பாடு எதுவும் கிடையாது. விபத்து ஏற்படுவதற்கு முன்னர் முதல் அறிகுறி நேரும். நமது கவனம் குலைந்துபோவதுதான், அது. இதற்கு நமது ஜாதகத்திலுள்ள பிரச்னைகள் முதல் காரணம். அடுத்து, நம்மைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் பாதிப்பும் உண்டு. இந்த விளைவுகளை நமக்கு காட்டுவது நாம் வளர்க்கும் கால்நடைகள், செல்லப்பிராணிகள்தான். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கடுமையைக் குறைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். நான் சாமி கும்பிடும்போது வணங்குவது மட்டுமே செயலாகவும் எண்ணமாகவும் இருக்கிறது. எந்த வேண்டுதல்களையும் சரியாக நினைத்து சாமி கும்பிட்டதாக எனக்கு நினைவில்லை. உறவுகள் தமக்கான லாப, நஷ்டக்கணக்குகளை போட்டுக்கொண்டு வலம் வரும்போது இறைவனை மட்டுமே நம்ப முடியும். அறிவுக்கான சரியான துணையாக மனைவி அமையாதபோது ஆண் முழுக்க தனிமையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுக்க நேரிடும

நம்பிக்கை அளிப்பது காசு மட்டும்தான்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 7 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலம் வாழ இறையை வேண்டுகிறேன். நான் இங்கு நலமாக இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை. மஞ்சள் காமலைக்கான டெஸ்ட் எடுக்க பர்மிஷன் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியுள்ளது. அதை எடுத்துவிட்டால் அம்முடிவுப்படி மருந்துகளை சாப்பிடும்படி இருக்கும். ஒரு ரூபாய் ஆலோசனைக் கட்டணமாக வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். உடனே நமக்கு இவர்களை பாராட்டத் தோன்றும். ஆனால் கவனமாக நோயாளிகளைக் கவனித்துப் பார்ப்பதில்லை. இலவச மருத்துவமனை என்றாலே அங்கு பணிபுரிபவர்களுக்கு உடலிலும் மனதிலும் சுண்டுவிரல் அளவுக்கு அலட்சியம் முளைத்து விடுகிறது. வேலைகள் கூடியுள்ளதால், உடல் நலிவை மூளைச்சோர்வு இன்னும் கூட்டுகிறது. நீங்கள் அடிக்கடி இருமல் மருந்துகளை வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா? அதனை மத்திய அரசு தடைசெய்து உள்ளது. அதில் ஆபத்தான வேதிப்பொருட்கள் ஏதேனும் இருக்கலாம். தேனை மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமலுக்கு பயன் கிடைக்கும்.   உணவையும் கறாராக உண்டால் பிரச்னை இல்லை. மயிலாப்பூருக்கு ரூம்