இடுகைகள்

எழுத்தாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இ

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

படம்
  அமிதவ் கோஷ் எழுத்தாளர் தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது.  மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா? சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் என்றார். மக்களி

பெருமைக்காக மனிதர்களைக் கூட விற்கலாம்! - கடிதங்கள்- வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? பனியின் குளிர் அதிகாலையில் எழ விடுவதில்லை. இந்த சூழலிலும் கூட பக்கத்து அறையிலுள்ள ஐயர், ஹோமங்களை செய்ய நேரமே எழுந்து குளித்துவிட்டு சென்றுவிடுகிறார். நேற்று அலுவலகத்திற்கு, கிரைம் கதை எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார்.  வரும்போதே கையிலுள்ள பிளாஸ்டிக் டப்பாவில் சாக்லெட்டுகளை வைத்திருந்தார். ஏதோ வினோதமாக பட்டது. எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மீனா என்ற பெண்மணிதான் அவரை அழைத்திருந்தார். வந்த  டக்இன் எழுத்தாளர் சேரில் நன்கு அழுத்தி உட்கார்ந்து கொண்டார்.  தன் முகத்தில் உள்ள மாஸ்கை கழற்றும் முன்னரே சாக்லெட்டை விநியோகிக்க சொன்னார். சாக்லெட்டை பெற்றவன், சரி, அவருக்கு மகள் வயிற்று பேரன், பேத்தி பிறந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பிறகு உதவி ஆசிரியரான மீனா எங்கள் அருகில் வந்து பெயர், போன் நம்பரை பெற்றார். எதற்கு, சும்மாதான் என்றார். பிறகுதான் சாக்லெட் அங்கிள், எழுதும் வாய்ப்புக்காக வாட்ஸ்அப் வழியே செய்தி அனுப்பினார் என சக உதவி ஆசிரியர்கள் பேசிக் கொண்டனர். சாக்லெட் எதற்கு என இப்போது தெரிந்துவிட்டது அல்லவா?  இந்த மீனா என்கிற லூசு பெண்மணிக்கு தனது பெ

மனது சொன்னதைக் கேட்டால் தொழிலில் வெற்றிபெறலாம்! - சித்திரம் பேசுதடி - ரஷ்மி பன்சால்

படம்
  சித்திரம் பேசுதடி ரஷ்மி பன்சால் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் எழுத்தாளர் ரஷ்மி பன்சால் இந்த நூலில் மொத்தம் இருபது தொழில்முனைவோர் உள்ளனர். இவர்கள் யாரும் எம்பிஏ படிக்கவில்லை. அனைவருமே மனதிலுள்ள வேட்கை காரணமாகவே தங்களது தொழில்துறையில் வெற்றியை சந்தித்துள்ளனர்.  இதில் நிறைய சவால்களும் உண்டு. ஆனாலும் அதனை எதிர்கொண்டு சாதித்துள்ளனர். வணிக நூலை சுவாரசியமாக எழுதுவது கடினம். ஆனால் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் லஷ்மி விஷ்வநாதன்.  நூலில் மொத்தம் இருபது தொழில் முனைவோர் உள்ளனர். இவர்களுக்கு பொதுவாக உள்ள விஷயம். முறைப்படியான வணிக நிர்வாக படிப்பை இவர்கள் படிக்கவில்லை. தொழிலில் கடைப்பிடித்த அனைத்து விஷயங்களையும் தன்னார்வமாக கற்றுக்கொண்டனர். மேலும், அனுபவ பூர்வமாக கற்ற விஷயங்களை வைத்து தங்களது வாழ்வாதாரத்தை சரிவர அமைத்துக்கொண்டனர். பிறகு சமூகத்திற்கும் அதனை வழங்கியுள்ளனர்.  மேலோரோ கீழோரோ எல்லாம் அவர்களின் செயல்களில் உள்ளது மேலோரிடம் கீழ்மையும், கீழோரிடம் மேன்மையும் கூட காணக்கிடைக்கும் என்பார்கள்.  அதுபோல இந்த நூலில் உள்ள தொழில் முனைவோர் அனைவரிடம் உள்ள சாதிக்கும் வே

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இத

சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

படம்
  எழுத்தாளர் அமிஷ் இஷ்வாகு குலத்தோன்றல் அமிஷ் தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன்  வெஸ்லேண்ட் ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம்.  கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார்.  கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது.  தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டு

பனிரெண்டு முறை நிராகரிக்கப்பட்டு சாதித்த குழந்தை எழுத்தாளர்! - ஜே.கே. ரௌலிங்

படம்
  ஜே.கே. ரௌலிங் ஜே.கே. ரௌலிங் எழுத்தாளர் ஜோன்னா ரௌலிங் என்று கூட இந்த எழுத்தாளரை அழைக்கலாம். 1965ஆம் ஆண்டு இங்கிலாந்தின் யேட் என்ற நகரில் பிறந்தார். இவரை எதற்காக இங்கே எழுதுகிறோம்? எழுதியே சம்பாதித்து இன்று கோடீஸ்வரராக இருக்கிறார். அந்த தில்லுக்குத்தான் எழுதுகிறோம். ஹாரிபாட்டர் தொடர்கதைகள் நூலாக மிகச்சிறப்பாக விற்றன. அதை வார்னர் பிரதர்ஸ் திரைப்படமாக எடுத்தபோது ஜே.கோ. ரௌலிங்கின் புகழ் இன்னும் மேலே போய்விட்டது. நூலும் , திரைப்படங்களும் இன்றும் வெறித்தனமாக விற்றுக்கொண்டிருக்கிறது.  500 மில்லியன் நூல்கள், 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்றுள்ளன என்று கணக்கு சொல்கிறார்கள். கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக 200 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை ஹாரிபாட்டர் நூல்கள் வசீகரித்துள்ளன.  ஜே.கே. ரௌலிங் தனது பள்ளிப்படிப்பை புனித மைக்கேல் தொடக்கப்பள்ளியில் படித்தார். பிறகு, பிரெஞ்சு மற்றும் செவ்வியல் படைப்புகள் பற்றிய படிப்பை எக்ஸ்செடர் என்ற பல்கலையில் நிறைவு செய்தார். தொண்ணூறுகளில் போர்ச்சுக்கலுக்கு சென்று ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்து வந்தார். பணியோடு காதலும் வந்தது. போர்ச்சுக்கீசிய பத்திரிக்கையாளர

உலக நாடுகள் வெளியேறியவுடனே மாற்றுப்பாலினத்தவரை வேட்டையாடுவதே தாலிபனின் திட்டம் ! - நேமத் சதத்

படம்
                நேமத் சதத் அமெரிக்க எழுத்தாளர் .      ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் . தனது ஓரினச்சேர்க்கை தன்மையை வெளிப்படையாக அறிவித்த முதல் ஆப்கானியவர் இவர்தான் . 2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் என்று உண்மை தெரிந்ததால் உடனே ஆசிரியர் பணியை விட்டு விலக்கப்பட்டார் . தற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எப்படி உதவப்போகிறீர்கள் ? நான் ஆப்கனிலுள்ள 125 மாற்றுப்பாலினத்தவர்களை பட்டியல் போட்டு வைத்துள்ளேன் . அவர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தருவதற்கான விசாக்களை ஏற்பாடு செய்து தரவுள்ளேன் . இதனை இரு வழிகளில் செய்ய உள்ளேன் . முதலாவது ஆப்கனிலுள்ள தன்னாரவ தொண்டு நிறுவனத்தில் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களை அங்கிருந்து அனுப்பி வைப்பது . மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினர் , ஸ்காட் பீட்டர் மூலம் சட்டத்துறையில் பேசி மாற்றுப் பாலினத்தவர்கள் பாதுகாப்பாக மீட்பது என முடிவு செய்துள்ளேன் . இரண்டு வாரங்களில் அத்தனை பேர்களையும

புதிய எழுத்தாளர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும் சுயபதிப்பு வலைத்தளங்கள்! - இங்கிட், வாட்பேட், கிரிட்டிக் சர்க்கிள், பிரதிலிபி

படம்
            இலக்கிய தளத்தை சுயபதிப்பு வலைத்தளங்கள் மாற்றியமைத்துள்ளனவா ?   இன்று ஒருவருக்கு எழுதும் ஆர்வமும் வேக மும் இருந்தால் போதும் . அவர் இலக்கிய சன்னிதானங்களிடம் ஆசி பெற்று நூலை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை . ஏராளமான இணையத்தளங்கள் இதற்கெனவே உருவாகியுள்ளன . பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஆ்ர்வம் கொண்டவர்கள் இதில் பங்கேற்று எழுதி வருகின்றனர் . நன்றாக எழுதும் திறன் கொண்டவர்களின் நூல்களை புகழ்பெற்ற பதிப்பகங்கள் வாங்கி பதிப்பித்து வருகின்றன . இதற்கு வலைத்தளங்களே களம் அமைத்துக் கொடுக்கின்றன . அமெரிக்க எழுத்தாளர் அன்னா டாட் இப்படித்தான் எழுத தொடங்கினார் . ஆப்டர் என்ற நாவலை தொடராக வாட் பேட் தளத்தில் எழுத தொடங்கினார் . இந்த நாவல் ஒன் டைரக்ஷன் இசைக்குழுவை அடியொற்றியது . இந்த தொடர் வாசகர்களிடையே பெரும் புகழ்பெற்று 1.5 பில்லியன் வாசகர்களின் பார்வையைப் பெற்றது . பிறகு சைமன் ஸ்சஸ்டர் பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்பிரதியாகி 11 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளது . இணையம் இன்று அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை ஒன்றாக இணைத்துள்ளது . அவர்களின் வாசிப்பு பழக்கமும் முன்னேறி இணையத

இலங்கை சிற்றிதழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் பயணம்! - மல்லிகை சிற்றிதழ்

படம்
                அனுபவப் பயணம்  டொமினிக் ஜீவா  நாவிதராக தொழில் செய்யும் ஒருவர் இலங்கையில் இலக்கிய இதழை நடத்தி வந்தார். அவர் பெயர்தான் டொமினிக் ஜீவா. இலங்கையில் சாகித்திய பரிசை முதன்முதலாக வென்ற எழுத்தாளர் இவரே. மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தனது அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.  தனது தொழில் சார்ந்து நிறைய லாபம் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு எழுத்தை தொழிலாக மாற்றிக்கொண்டு படாதபாடு பட்டிருக்கிறார். இதனை ஏன் எழுதவேண்டும் என்பதையும் நூலில் தெரிவித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள், அவதூறுகளை தனது கவனத்தில் கொண்டே எழுதியிருக்கிறார். மேலும் இதனை குறிப்பிட்ட அவதூறு எழுத்தாளரின் விழா மேடையில் தெரிவிக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட எழுத்தாளராக ஜீவா இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.  நூலில் நிறைய இடங்களில் தனது பெருமைகளை சொல்லுவது போல இடங்களை அதிகமாகிவிட்டன. சாதிரீதியான பாகுபாடு கொண்ட மனநிலை இப்படி ஜீவாவை பேச வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழகம் வந்து பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்சன், ஜெயகாந்தன் ஆகிய எழ

மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு

படம்
எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன் மாலன் அந்திமழை மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது. வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர். இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண

உளவியல் ரீதியாக அகதிகளை மேற்கு நாடுகள் வதைத்து வருகின்றன- அகதியின் குரல்!

படம்
நேர்காணல் இரானிய குர்தீஸ் எழுத்தாளர்  பெருஸ் பூசானி ஆஸ்திரேலியாவிலுள்ள மானுஸ் முகாமில் வசித்து வருகிறார் பெருஸ் பூசானி. அங்குள்ள வாழ்க்கையை தொடர்ச்சியாக உலகின் பார்வைக்கு கொண்டு வருவதில் இவர் முக்கியமானவர். பெரும்பாலான அகதிகளை நாடுகள் குற்றவாளிகள் போலவேதான் நடத்துகின்றன. நீங்கள் என்ன அனுபவங்களைப் பெற்றுள்ளீர்கள்.  சிறையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கென அங்கு சில உரிமைகள் உண்டு. மேலும் எத்தனை நாட்கள் அங்கிருப்பீர்கள் என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. அகதிகள் முகாமில் அதற்கான வாய்ப்பு இல்லை. போன் பேசக்கூட அனுமதி பெறவேண்டும். இங்கு பல்வேறு உரிமைகள் உங்களுக்கு அளிக்கப்படாது. நேரம் இங்கு செல்வதே கடினம். தீவிரமான உளவியல் பாதிப்பை நீங்கள் எதிர்கொள்வதாக இருக்கும். எப்படி நிலைமையை சமாளிக்கிறீர்கள்? இங்கு நடக்கும் அநீதிகளுக்கு இரண்டு வகையில் பதிலளிக்கலாம். ஒன்று போராட்டம். இரண்டு அதனை எழுத்தாக்குவது. இங்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளோம். இது பொதுவான முறைதான். உடலை ஆயுதமாக்கி போராடுவது புதிதா என்ன? 2015 முதல் 2017 வரையில் நாங்கள் அதிகாரிகளால் நா

நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!

படம்
அசுரகுலம் நோரியோ நகாயாமா எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. 1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட