இடுகைகள்

ஐஏஎஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

படம்
  ரா ராஜூ (2006) தெலுங்கு கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை. வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான். கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன். எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும

பெரிய அண்ணனைக் கொன்றவர்களை ஒன்றாக சேர்ந்து கொல்லும் குடும்பம்! - கேங்லீடர் - சிரஞ்சீவி, விஜயசாந்தி

படம்
                  960 × 960                         கேங் லீடர் சிரஞ்சீவி, விஜயசாந்தி, கிருஷ்ணா, ஆனந்தராஜ் இயக்கம் விஜயா பாபிநீடு இசை பப்பி லகிரி மூன்று அண்ணன் தம்பிகள். இவர்களுக்குள் உள்ள பாசமும், பின்னாளில் ஏற்படும் முரண்பாடுகளும்தான் கதை. ரகுபதி மட்டுமே ஆபீஸ் வேலைக்கு செல்பவர். ராகவன், குடிமைச் தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருக்கிறார். ராஜாராம் வேறு யார் சிரஞ்சீவிதான். படித்துவிட்டு தனது கேங் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர்கள் மொத்தம் ஐந்து பேர் கொண்டு குழு. இந்த குழுதான் படம் நெடுக வருகிறது. படத்தின் திருப்புமுனையே ராஜாராமின் நண்பர்கள்தான். ராஜாராமைப் பொறுத்தவரை வேலை என்பது கிடைக்கும்போது செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் விட குடும்பம், பெருமை முக்கியம் என நினைக்கிற ஆள். ராகவனின்  தேர்வு செலவுகளுக்காக அவர் அறை ஒன்றை காலி செய்து கொடுக்க போகிறார். அங்குதான் நாயகி அறிமுகம். இவர் யாரென படத்தில் யாருமே கேட்பதில்லை. பெற்றோர் இருக்கிறார்களா, இல்லையா என்று. இறுதியில் அவரே தான் யார் என்று சொல்லுகிறார். அதுதான் முக்கியமான ட்விஸ்ட். நமக்கு அது பெரிய ஆச்சரியம் தருவதில்லை. நமக்

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

ஐஏஎஸ் கனவுக்காக தட்டுவடை விற்கும் மாணவர்கள்!

படம்
  தட்டுவடை செட் பொதுவாக சினிமாக்கார ர்கள்தான் பாலத்தின் அடியில் தூங்கினேன். அக்கா கடையில் கடன் வைத்து இட்லி வாங்கினேன். இப்படி சுதந்திரப் போராட்டமே செய்துதான் படத்தை இயக்கினேன். ஜெயித்தேன் என டிவி பேட்டிகள் முதல் யூடியூப் பேட்டிகள் வரை சொல்லுவார்கள். படிப்பிற்காகவே போராடும் நிலை இன்னும் சமூகத்தில் இருக்கிறது. அதைப்பற்றியதுதான் இந்தக் கட்டுரை.  சேலத்தில் உள்ளது கோரிமேடு. இங்குள்ள சிறிய உணவுக்கடையைச் சுற்றி இளைஞர்களாக நிற்கிறார்கள். அனைவரும் வந்தது தட்டுவடை விற்கும் கடைக்காகத்தான். இதுதான் அந்த கடையின் சிக்னேச்சர் டிஷ். தட்டு வடையை சாண்ட்விட்ச் போல வைத்துக் கொடுக்கிறார்கள். அதில், கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா நிரம்பியுள்ளது. இதை தொட்டுச்சாப்பிட மிளகாய் சட்னி கொடுக்கிறார்கள்.  இதை வி கிஷோர், எம் தனகோடி என்ற இரு 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் நடத்துகிறார்கள். இருவருக்குமே ஐஏஎஸ் தேர்வில் வெல்வதுதான் கனவு. எனவே தங்களுடைய குடும்பத்தை இதற்காக குறை சொல்லாமல் தங்கள் கல்விச்செலவை தாங்களே பார்த்துக்கொள்ள கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிஷோர், திருவேனி கார்டனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்

நான் உண்மையைச் சொன்னால் விபத்தில் கொல்லப்படுவேன்! - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

படம்
              சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்ய வேட்பாளர் , வேளச்சேரி இவர் மாநில அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத் நெட் திட்டத்தில் செய்த முறைகேடுகளை தட்டிக்கேடார் . அரசு எப்போதும் போல பாபுவுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தது . இதனால் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு , கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார் . அவரிடம் பேசினோம் . அரசு பணியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன ? ஊழலுக்கு எதிரான கோபம்தான் அரசுப்பணியை விட்டு விலக வைத்தது . உலகளவில் தரம் கொண்ட தமிழ்நாடு , அரசு அமைப்பு நிர்வாகத்தில் எப்படி சீர்குலைவுக்குள்ளானது என்பதை நீங்களே பார்க்கலாம் . கடந்த இருபத்தைந்து ஆண்டுளளாக எந்த ஒரு அமைச்சரும் தனது துறைசார்ந்து திட்டம் சார்ந்து எந்தவொரு கேள்வியையும் என்னிடம் கேட்டதில்லை . அவர்களுக்கு அக்கறை ஏலம் மற்றும் பணிமாற்றம்தான் . தேசிய சிறந்த நிர்வாக கட்சி என்ற அமைப்பை 2026 இல் தொடங்க திட்டமிட்டிருந்தேன் . ஆனால் அதற்குள் பாரத் நெட் பிரச்னை ஏற்பட்டுவிட்டது . எனவே நான் அரசுபணியை விட்டு விலகி அரசியலுக்கு வர நேரிட்டது . ஊழலுக்கு எதிரான

லவ் இன்ஃபினிட்டி: காதலும் லட்சியமும் ஒன்றாக பயணிக்குமா?

படம்
www.pexels.com எங்கே விட்டோம்... காதல்னா எனக்கு புரியல என்பதில்தானே... இந்த பூபதி வேற Ladies Kho Kho Match அன்னிக்கு வந்தான். நான் கண்டுக்கலை. அவனும் சும்மாதான் இருந்தான். இந்த பூங்கொடி(White) அவனுக்கு கேட்கிற மாதிரி என்னை கூப்பிட்டுட்டே இருந்தா. அது எனக்கு பிடிக்கவேயில்லை. அவன் மட்டும் எனக்கு Future இல் என் husband என்றால் நிச்சயம் ஏற்கமாட்டேன்.  சரி,சரி இனிமே Future பத்தி ஏதும் பேச மாட்டேன். நடப்பது நடக்கட்டும்னு எல்லா விஷயத்திலும் இருக்க கூடாது. படிப்பு, மதிப்பு, பணம் எல்லாத்திலயும். தாமரை எழுதிய சவிதா வயது பதினொன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே ரெண்டும் Super. சவிதா கதை படிக்கையில் உண்மையிலேயே அழுதுட்டேன். தேவையில்லாம அடிக்கடி கண்ணீர் வருது. சின்ன சின்ன ஏமாற்றங்களைத் தாங்க முடியலைன்னா? ஆனா நீங்கல்லாம் எப்படி கட்டுப்படுத்திக்கிறீங்களோ? Revathy Mam என்கிட்ட சொல்லியிருக்காங்க. நீ என்னதான் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது Love பண்ண நினைச்சாலும் அப்பக்கூட நல்லவங்க Lover - ஆ அமைவாங்கன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க. நீ சொன்ன “வயது ஆக ஆக வாழ்க்கை புரியும் ”ங்கிற வார்