இடுகைகள்

மின்னல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைனோசர் காலத்து மூட்டைப்பூச்சி - உண்மையா? உடான்ஸா?

படம்
உண்மையா? உடான்ஸா? மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன!  உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி.  வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்! உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000!  உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குறிப்பிட்ட வகை

உலகில் அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும்!

படம்
  மில்லியன் வோல்ட் மின்சாரம்! உலகிலேயே அதிகளவு மின்சாரத்தை எங்கு தயாரிக்கலாம்? நீரில், காற்றில், சூரிய ஒளி  என்கிறீர்களா?. இப்பதில்களை ரப்பர் கொண்டு அழியுங்கள். மின்னல் மூலம்தான் அதிகளவு மின்சாரத்தை நாம் பெற முடியும்.  ஜேம்ஸ் ஃபிராங்கிளினுக்கும் கூட இது தெரியும். ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மின்னலிலிருந்து பெறும் ஆற்றலை அளவிட முயற்சித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக சென்சார்களை வைத்து முயன்றும் கூட மின்னல்களை சரியான முறையில் கவனிக்க முடியவில்லை.  ஊட்டியில் ஆராய்ச்சியாளர்கள் செய்த புதிய ஆய்வு குறித்த செய்தி பிஸிகல் ரிவ்யூ லெட்டர்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிச.1 அன்று ஊட்டியில் நடந்த இடிமின்னல்கள் அளவிடப்பட்டன. பதினெட்டு நிமிடங்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் 1.3 ஜிகாவோல்ட்ஸ் மின்சாரம் கடத்தப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வட அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை விட பத்து மடங்கு அதிக அளவு ஆகும்.  ”இதையொட்டியே மழைமேகங்கள் ஆபத்தானவை என்கிறோம். இதில் வெளிப்படும் வெப்பத்தை நீங்கள் எதில் வெளியேற்றினாலும் அது பேரழிவாக மாறும் ” என்கிறார் டாடா அடிப்படை ஆராய்ச்சி மைய

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல

மின்னலால் ஏற்படும் ஆபத்து! - காடுகளிலுள்ள தொன்மை மரங்கள் வேகமாக அழிந்து வரும் ஆபத்து!

படம்
  cc       மின்னலால் ஏற்படும் ஆபத்து ! உலக நாடுகளில் மின்னல் தாக்குதலால் ஏராளமான தொன்மை மரங்கள் அழிந்து வருகின்றன . காடுகளிலுள்ள மரங்கள் மக்களின் பரவலால் அழிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள் . அதைப்போலவே பல்லாயிரம் மரங்கள் இயற்கையாகத் தோன்றும் மின்னலால் அழிந்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா ? அமெரிக்காவின் கென்டக்கி நகரைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டீவ் யானோவியாக் இதுபற்றி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் . ஆண்டுதோறும் நடைபெறும் ஏராளமான மின்னல் தாக்குதல்களால் உலகமெங்கும் உள்ள பருவக்காடுகளிலுள்ள தொன்மையான மரங்கள் அழிந்து வருகின்றன . அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவுடன் இணைந்து , உலகமெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் . காட்டுத்தீ , பசுமை இல்ல வாயு , மரங்களின் அழிவு என நிறைய பாதிப்புகள் இதனால் உண்டாகிறது . மின்னல் எப்படி உருவாகிறது ? வெப்பமான பரப்பிலிருந்து ஈரப்பதம் நிரம்பிய காற்று உருவாகிறது . இக்காற்று குளிர்ந்து தூசி , உப்பு , புகை ஆகியவற்றை உள்ளடக்கி மேகங்