இடுகைகள்

காளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

படம்
  ரா ராஜூ (2006) தெலுங்கு கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை. வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான். கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன். எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும

தெரிஞ்சுக்கோ - காளி!

படம்
giphy காளி இந்துக்கடவுள். இந்த வரையறையைத் தாண்டி காளி என்றால் அழிவு சக்தி. இன்றும் இதற்காக பல்வேறு மனிதர்களை கொன்று நரபலி செய்பவர்கள் உண்டு. பெண் தெய்வ வழிபாட்டை சாக்தம் எனும் மதமாகவே இந்தியாவில் வளர்த்தெடுத்தார்கள். இன்று இந்த பாரம்பரியம் கேரளத்திலும், கோல்கட்டாவிலும் உள்ளது. இதைப்பற்றிய சில தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். கடவுள் என்பது தோன்றியபோது, மகாவித்யா எனும் பத்து பெண்கள் உருவாகின்றனர். இதில் காளிதான் முதல் இடத்தைப் பிடிக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கும் காளி நான்கு முதல் பத்து கரங்களைக் கொண்டிருப்பார். இந்தியாவில் 3 கோடிகளுக்கும் அதிகமான பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும் வழிபாட்டில் உள்ளனர். இதில் பொங்கல் தின்கிற கடவுள் முதல் கள்ளு குடித்து கருவாடு தின்னுகின்ற கருப்பண்ணசாமி வரை அடக்கம். மேற்கு வங்கம், அசாமில் காளி பூஜை விழாவன்று அரசு விடுமுறையே உண்டு. காளியின் கழுத்தில் கிடக்கிற மண்டையோட்டை பார்த்திருப்பீர்கள். அதனை வர்ணமாலா என குறிப்பிடுகிறார்கள். இந்தியில் உள்ள எழுத்துக்களை குறிப்பது என்பது சிலரின் கருத்து. கடவுள்களை துதித்து அருள்பெற அவர்க