இடுகைகள்

இனிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!

படம்
  பொதுவாகவே, எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில் பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில் டீ கடையோடு இணைத்து ஹோட்டல்   ஒன்றை வைத்திருக்கிறார். அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில் பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.   பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார். இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர்.   பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம், கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது. அப்படியிருந்து போட்டி போட்டு   சாப்பிட்டு வந்த சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை. ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க’’ என்று நான் சொன்னதில் இருந்து அவர் இ

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட

திருடித் தேன் குடிக்கும் கரடிகள் - உண்மை என்ன?

படம்
கரடிகளுக்கு தேன் மிகவும் பிடித்தமானதா? கரடிகள் வின்னி தி பூ சீரிஸ் எல்லாம் பார்ப்பதில்லை. அவை தேன் மட்டும் சாப்பிடுவதில்லை. தேன்கூட்டிலுள்ள தேனீக்களின் லார்வாவையும் உண்ணுகின்றன. காரணம், அதிலுள்ள புரதச்சத்து. அதற்காக தேனீக்கள் கரடிகளை விட்டு வைப்பதில்லை. கடிக்கும்தான். கரடியின் அடர்த்தியான முடி, தேனீக்களின் கடியிலிருந்து பெருமளவு காப்பாற்றுகிறது. கடந்த ஆண்டு  ஃபின்லாந்தில் கரடி, 370 பல்வேறு தேனீ பண்ணைகளுக்குள் புகுந்து வேட்டையாடின. இதன் விளைவாக விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடு வழங்கியது. இதற்கான தொகை  1 லட்சத்து 43 ஆயிரம் டாலர்கள். காட்டில் உணவின்றி கரடிகள் பண்ணைகளுக்குள் புகுகின்றன. மின்சார வேலி என்பது தற்காலிகமானதே. பசி வரும்போது, வீட்டில் இருப்பதை வைத்து நீங்களே சமைப்பீர்கள். அல்லது எதையாவது எடுத்துப்போட்டு சாப்பிடுவீர்கள். அதேதான் கரடி விஷயத்திலும்  நடந்தது. அது சாப்பிட்டது போக மீதியை நாம் எடுத்துக்கொள்வதே சரியானது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்

மயிலாப்பூர் டைம்ஸ் - அப்லோடை விட டவுன்லோடு முக்கியம்!

படம்
பிரம்மானந்தம் நாயக் படத்தில் ஜிலேபியாக.... மயிலாப்பூர் டைம்ஸ் -- இனிப்பு பரிதாபங்கள்! ஆபீஸ் செல்வது பெரிய சிரமம் இல்லை. புதன்கிழமை தாண்டினால் போதும். விகடன் வியாழன் வரும். படித்து சமாளித்தால் வெள்ளி குங்குமம். அதில் ரத்தமகுடம் குஜாலாக படிக்கலாம் என்பதுதான் பெரும்பாலான நேர நினைப்பு. ஆனால் நடப்பது அப்படியே தலைகீழாக இருக்கும். வாசிப்பு வெறி, ஐலைக் காமிக்ஸ் வலைத்தளத்தில் கூட முடியும். ஆனால் ஸ்நாக்ஸ் வெறி இருக்கிறதே? சென்னகேசவா காப்பாற்று என்றாலும் நாக்கு அத்தனை தந்திரங்களையும் வீணாக்கிவிட்டது. வீக் எண்டில் முளைத்த வில்லங்கம், என்னுடைய வயிற்றை களேபர பூமியாக்கியது. நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மண்டையன் கடையை நெருங்கும்வரை. பஜார் தெருவிலுள்ள புகழ்பெற்ற கடைதான் அது. லட்டு, மிக்சர், பாதுஷா என மனசைக் கலைக்க அப்படியே நின்றேன். படியேறினால் கடை ஓனருக்கு என் முகம் தெரியும். ஏறினேன். லட்டு கால்கிலோ குடுங்க என்றேன். புன்சிரிப்புடன் பார்த்தவர், ஒருமணிநேரம் கழிச்சு வாங்கிக்கலாமே என்றார். என்னடாது, லட்டு கண்ணு முன்னால வெச்சுக்கிட்டு எதுக்கு ஒருமணிநேர