இடுகைகள்

சங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100(2024) - சுகாதாரத்தில் இனவேறுபாடு தொடங்கி கருத்தரித்தல் ஆராய்ச்சி வரை - நான்கு சாதனையாளர்கள்

படம்
    டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் சுகாதாரத்தில் இனவேறுபாட்டை எதிர்ப்போம் ரேச்சல் ஹார்டேமன் rachel hardeman அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் இனவெறி சார்ந்து இயங்குபவர்களால், கருப்பின பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதைக் கூற தயங்கினாலும் ரேச்சல் தைரியமாக உண்மையைக் கூறி அதற்கான தீர்வைத் தேட முயன்று வருகிறார். இனவெறியை எதிர்த்து செய்யும் ஆராய்ச்சி சார்ந்து சுகாதாரத்துறையில் உள்ள ஆழமான பிரச்னைளை அடையாளம் கண்டு மக்களுக்கு கூறுகிறார். அவர் உருவாக்கியுள்ள மாம்னிபஸ் மசோதா மூலம் கர்ப்பிணிகள் இனவேறுபாடின்றி பயன் பெற முடியும். குழந்தை பிறப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் இதில் வழியிருக்கிறது. லாரன் அண்டர்வுட் 2 போராட்டம் வழியாக நன்மை - ஷான் ஃபைன் shawn fain கடந்த ஆண்டு செப்டம்பரில் மிச்சிகன் நகரில், யூஏடபிள்யூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர், ஷான் ஃபைன். முறையான ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதே உழைப்பாளர்களின் வாதம். சங்கத்தில் உறுப்பி...

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து...

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்பட...

நேரு பல்கலையில் உயர்த்தப்பட்ட கட்டணம்!- என்ன பிரச்னை?

படம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் இன்றைய பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள் என இருக்கிறார்கள். காரணம், அங்கு பாடங்களைத் தாண்டி சொல்லித்தரப்படும். தற்போது அங்குள்ள விடுதி வாடகை ஏற்றப்பட்டு உள்ளது.  தெரிஞ்சுக்கோ! டில்லி நேரு பல்கலையில் பயிலும் மாணவர்களின் 40 சதவீத குடும்பங்களின் மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் உள்ளது என்கிறது அவர்களின் மாணவர் சங்கம். விடுதியில் உயர்த்தப்பட்ட தொகை 1700. இதனால் வாடகைத் தொகை 2 ஆயிரம் முதல் 2500 வரை அதிகரித்திருக்கிறது. திருப்பித்தரும் காப்புத்தொகை 5500 முதல் 12000 வரை அதிகரித்துள்ளது. மாதம் ரூ.20 என்று இருந்த மாணவர்களின் அறை வாடகை ரூ.600 ஆக மாறி உள்ளது. இரண்டு அறைகள் வாடகை ரூ.10லிருந்து 300 ரூபாயாக மாறியுள்ளது. மாணவர் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் 50 ஆயிரம் முதல் அறுபதாயிரம் வரை எகிறியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை 27,600 முதல் 30 ஆயிரம் வரை. இதனால் அதிக விலை வசூலிக்கும் பல்கலைக்கழகமாக தற்போது பெயர் வாங்கியுள்ளது. 19 ஆண்டுகளாக பல்கலையின் விடுதி, மெஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ப...