இடுகைகள்

அறிகுறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல் ஆளுமை பிறழ்வு வரலாறு

படம்
  இருப்பதிலேயே வரம் என்றும் சாபம் என்றும் மனிதர்கள் பெற்ற ஒரு அம்சத்தைச் சொல்லலாம். அதுதான் நினைவுகள். இவைதான் நமக்கு நல்ல விஷயங்களையும், தவறான விஷயங்களையும் கற்றுத் தருகிறது. அதுதான் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் நீதியை உணர்த்தவும் அறிவுச் சேகரமாகவும் உள்ளது. அவை சில காயங்களை கு்ணப்படுத்துகிறது. வரலாற்றில் கருப்பின அடிமைத்தனங்களைப் பற்றிய அறியவும் உதவுகிறது. பல தலைமுறைகளுக்கு நினைவுகளைக் கடத்தி கவனமாகவும் நாம் இருக்க உதவுகிறது.  சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் அனுபவங்கள், ஆளுமை பிறழ்வு அனுபவங்களை மனங்களில் உருவாக்குகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது.  இந்த ஆளுமை பிறழ்வு சிக்கலும் கூட வலியான நினைவுகளை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக்கொள்வதால்தான் நேருகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற பாதிப்பு அதிகம் வெளித்தெரியாத ஒன்று. இன்று இந்த பாதிப்பை நோயாளிகள் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அதற்கான சிகிச்சையும் பெறுகிறார்கள். வலியும், வேதனையும் நினைவுகளாக மூளையில் பதிந்துவிடுகிறது. இதில்தான் அத்தனை நல்லவைகளும் அல்லவைகளும் உருவா

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதி

தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

படம்
            தடுப்பூசியால் ரத்தம் கட்டினால் என்ன அறிகுறிகள் ஏற்படும் ? 1. கடுமையான தலைவலி ஏற்படும் . இதற்கு நீங்கள் வலிநிவாரணி பயன்படுத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது . 2. தூங்கும்போதும் , உட்கார்ந்திருக்கும் தலைவலியின் கடுமையை பொறுத்துக்கொள்வது கடுமையாக இருக்கும் . 3. இதுமட்டுமல்ல . தலை கிறுகிறுப்பு , குமட்டல் , பேசுவதில் தடுமாற்றம் , பார்வை மங்கலாவது ஆகியவை உபரி விளைவாக ஏற்படும் . 4. நெஞ்சு வலி , மூச்சு விடுவது குறைவாகும் . அடிவயிற்றில் வலி தோன்றும் , கால்கள் நடக்கமுடியாமல் தடுமாறும் . இப்போது என்ன செய்வது ? கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் மேற்சொன்னது போல தோன்றினால் சொன்ன நேரத்தில் அடுத்த தடுப்பூசியையும் போடவேண்டும் . நான்கு நாட்கள் முதல் நான்கு வாரம் அதாவது ஒருமாதம் வரை அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவேண்டும் . பெண்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவது உண்மைதான் . ்ஆஸ்ட்ராஸென்கா வகை ஊசியைப் போட்ட ஏராளமான பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை . இங்கிலாந்தில் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்களில் 41 சதவீதம் பேர் மு