தற்கொலைக்கு தூண்டிய சைக்கோ மனிதர்!
அசுரகுலம் ஹிரோஷி மெயுவெ 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டு அன்று பிறந்தவர் ஹிரோஷி. இவரைப்பற்றி ஏன் எழுதுகிறோம் என்றால் பணத்திற்காக கொலை செய்வது தாண்டி மனநிலையின் அழுத்தம் தாங்காதவர்கள்தான் சமூகத்திற்கு பெரும் சோதனையாக அமைகிறார்கள். இவர்கள், அந்தந்த காலகட்டத்தை நம் மனதுக்கு உணர்த்துகிற சாட்சிகள் கூடத்தான். ஹிரோஷி மூன்று பேர்களைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றுபேரையும் நேரடியாக கொல்லவில்லை என்பதுதான் இவரைப் பற்றி நாம் எழுதக்காரணம். இவரது ஆளுமை மாற்றத்திற்கு மர்ம நாவல்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா? ஆம் கொலை, கொள்ளை நாவல்களை படித்தவர். அதனை பரீட்சித்து பார்க்க முயற்சித்துதான் பெரும் தீவினையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. கான்சாவா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியில் மாணவராக சேர்ந்து படித்தார். அங்கு ஒரு மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சித்து தோற்றுப்போனார். பின், 1988 ஆம் ஆண்டு படிப்பை விட்டு நின்றார். பின் ஏனோதானோவென்று வேலைக்கு சென்று வந்தார். மீண்டும் மனதில் அசுரன் தலைதூக்க, யோசிக்கவேயில்லை. கூட வேலை செய்தவரை தூக்கிப் போட்டு மிதித்தார். போலீசாருக்கு