பாஜகவின் வெறுப்பு அரசியல் நாட்டையே அழித்துவிடும்!- மம்தா பானர்ஜி
பாஜகவிற்கு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பவர் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகளை சமாளிப்பதோடு சவாலான மத்திய அரசையும் அரும்பாடுபட்டு சமாளித்து வருகிறார். உங்கள் வாழ்க்கையில் ஏராளமான சவால்களை சந்தித்திருக்கிறீர்கள். அதுவும் சிறுவயதிலேயே. இதுவரை சந்தித்ததில் மிக கடினமான சவால் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்? என் வாழ்க்கையில் போராட்டம் என்பதும் ஒரு பகுதி. எனது தந்தை இறந்தபோதுகூட நான் யாரிடமும் உதவி கோரி நிற்கவில்லை. கல்லூரியில் படித்துவந்த காலகட்டம் தொடங்கி இடதுசாரிகளின் ஆட்சியின் சிரமங்களை அனுபவித்து வந்தோம். மொத்தம் 34 ஆண்டுகள். இவை தவிர உடல்ரீதியிலான சிரமங்கள். தலைமுதல் வயிறு வரைக்கும் ஆறுக்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு உயிர்பிழைத்துள்ளேன். இக்காலகட்டங்களில் எங்கும் அணுவளவும் பயப்பட்டதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிப்பது மிகச்சிரமமான போராட்டங்களில் ஒன்று என கூறலாமா? நாங்கள் மாணவப்பருவத்திலிருந்து இன்றுவரை 34 ஆண்டுகளாக அவர்களோடு போராடி வருகிறோம். மோசமான இடதுசாரிகளின் ஆட்சியால் மாநிலத்தில் எந்த