இடுகைகள்

தண்டனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா? பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது.  தவறான நினைவுகள் என்றால் என்ன? மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையி...

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...

பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

படம்
           அகிம்சை மொழி 3 பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை! புகழ்பெற்ற கோவிலில் லட்டு, மாட்டு கொழுப்பில் செய்யப்பட்டுள்ளது என கோவில் தலைவர் கூறுகிறார். இந்த வாசகத்தைப் பார்த்தால் அவர் என்ன எதிர்பார்க்கிறார், என்ன வேண்டுகிறார் என்றே தெரியாது. நெய், தாவர நெய்யில் செய்யப்படவேண்டுமா?, மாட்டுக் கொழுப்பில் செய்ததற்காக யாரையாவது தண்டிக்க வேண்டுமா என நிறைய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், எதற்கும் எந்த பதிலும் இல்லை. இவற்றை இழிவான மலிந்த அரசியல் நோக்கங்களை மையமாக கொண்டு கூறப்படும் குற்றச்சாட்டு என கூறலாம். பொதுவாக ஒன்றைக் கூறுவது என எதையும் கூற முடியாது. ஒருவர் ரயில் மெதுவாக போகிறது என சலிப்புடன் கூறுகிறார். அவருடன் அருகில் உள்ள மனைவி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அதே வாக்கியத்தை மூன்று முறை உரக்க கூறுகிறார். உடனே மனைவி, இப்போது நான் என்ன செய்யட்டும்? கீழே இறங்கி தள்ளனுமா என்று கேட்டால், அந்த உரையாடலில் பிழை உள்ளது என்று அர்த்தமாகிறது. கணவர், ரயில் தாமதமாக சென்றால், விமானத்தை பிடிக்க நேரமாகிவிடும் என்பதைக் கூற நினைத்திருக்கலாம். ஆனால், அதை மன...

அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?

படம்
  லாரன்ஸ் கோஹ்ல்பர்க்  lawrence kohlberg ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா?  இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம்.  மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக...

0.1 சதவீத உண்மையைக் கண்டுபிடிக்க போராடும் குற்றவியல் வழக்குரைஞர்!

படம்
  99.9 கிரிமினல் லாயர் ஜே டிராமா  இருபது எபிசோடுகள் - இரண்டு சீசன்கள் குற்றவழக்குகளில் உள்ள உண்மையை கண்டுபிடித்து அரசு தரப்பை அடித்து நொறுக்கு கிரிமினல் வழக்குரைஞரின் கதை. மொத்தம் இருபது எபிசோடுகள். இரு சீசன்களையும் சேர்த்து... ஜப்பானில் கிரிமினல் வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. தப்பிக்கும் ஆட்களின் சதவீதமே 0.1தான். இதைத்தான் வழக்குரைஞர் மியாமா சவாலாக எடுத்துக்கொண்டு சாதிக்கிறார். போலியாக சாட்சிகளை தயாரித்து சரிவர விசாரிக்காமல் குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நீதித்துறைக்கு எதிராக தனியாக நின்று போராடுகிறார். இந்த போரில் மெல்ல மதார்மா நிறுவனத்தையே ஈடுபடுத்துகிறார்.  மதார்மா நிறுவன தலைவருக்கும், மியாமாவுக்கும் பழைய தொடர்பு ஒன்று இருக்கிறது. அது என்னவென்று இருவரும் ஒருகட்டத்தில் அறிகிறார்கள். ஆனால் அதை வெளிப்படையாக கூறுவதேயில்லை. மதார்மா நிறுவன தலைவரே நேரடியாக மியாமாவை தனது நிறுவனத்தில் சேர சொல்லுகிறார். சம்பளமும் கூட அதிகமாக பேசுகிறார். அன்றைய சூழலில் மியாமா வழக்கில் வென்றாலும் சம்பளம் என்பது குறைவாகத்தான் கிடைக்கிறது. அதில்தான...

தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

படம்
  உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது.  1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948...

தன்னை எதிர்ப்பவர்களை பல்வேறு நூதன வழிகளில் ரஷ்யா தண்டிக்கிறது? - என்னென்ன வழிகள் என அறிவோமா?

படம்
  எதிர்த்து நின்றால் மரணம் நிச்சயம் ரஷ்யா எதிரிகளை தாக்கும் விதம் என்பது மாறுபட்டது. நோவிசோக், பொலோனியம் என பல்வேறு வேதிப்பொருட்களை பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை கொல்வது ரஷ்ய அரசின் வழக்கம். அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வரும் ‘வலிமையான தலைவர்’ புதின் அணுகுமுறை இதுதான். அண்மையில் ரஷ்யாவின் ராணுவ கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ஜெட் விமானத்தில் வானில் இருக்கும்போது கொல்லப்பட்டார். இந்த டெக்னிக்கை புதிதாக கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், கிரெம்ளினில் எந்த பதிலும் வராது. அவையெல்லாம் வதந்தி, உண்மையல்ல என்று கூறுவார்கள். ஆனால் ரஷ்யாவில் உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், சொல்பவை   எல்லாமே அரசியல் ரீதியாக அந்த அரசின் கூற்றுக்கு மாறாக இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு விஷம் வைத்துக்கொல்வது சோவியத் காலம்தொட்டே நடந்து வருகிறது. ரஷ்ய விஞ்ஞானிகளின் விஷயம் என்னவென்றால், வாசனை இல்லாத நிறமில்லாத விஷத்தை கண்டுபிடித்து அதை மேம்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். ...

சிறை சென்று திரும்பினாலும் விடாத கொலை வேட்கை

படம்
  சார்லஸ் வில்லியம் சார்லஸிற்கு வயது 31. திருமணமானவர். பியானோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் விவகாரத்து பெற்றவர்கள். தனிமையில் வளர்ந்தவர்.   1966ஆம் ஆண்டு முதல் கொலையை   செய்தார். காவல்துறை சார்லஸின் வீட்டை சோதனை செய்து 25 வயதான சூசன் என்ற பெண்ணின் உடலைக் கண்டறிந்தது. அடித்து, கத்தியால் குத்தப்பட்டு இறந்து போயிருந்தார். செய்த கொலைக்கு தண்டனையாக பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. சிறையில் முன்மாதிரி கைதியாக நடந்துகொண்டார். இதனால் சார்லஸிற்கு 1973ஆம் ஆ ண்டு பிணை வழங்கப்பட்டது. பிணை பெறுவதற்கான அவர் நிறைய நாடகங்களை நடத்தினார்.   ‘’பிணை பெறுவதற்கான எடுத்த சவால்’’ என்று கூட பகிரங்கமாக கூறினார். 1974ஆம் ஆண்டு, க்ரீன்விட்ச் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில் கரேன் என்ற வளர்ந்து வரும் நடிகை நிர்வாணமாக இறந்து கிடந்தார். யார் கொலையாளி என்று அதிகமாக சந்தேகப்படக்கூட இல்லை. ஏனெனில் அருகில்தான் சார்லஸ் வீடு இருந்தது. திரைப்படம் தொடர்பான இதழில் போலியாக விளம்பரம் கொடுத்து கரேனை அங்கு வரவைத்து டையால் கழுத்தை இறுக்கி கொன்றார். சார்லஸை விசாரணை செய்து குற்றத்தை ஒ...

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், ...

ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

படம்
  ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.  மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான். அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம். தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம். அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெ...

குற்றம் செய்பவர்களை அடையாளமறியும் உளவியல் கோட்பாடு!- டிப்ரசன்ஷியல் அசோசியேஷன் தியரி

படம்
  டிஃப்ரன்சியல் அசோஷியேஷன் தியரி   என்ற கோட்பாட்டை சூதர்லாந்த் என்பவர் உருவாக்கினார். 1939இல் எழுதப்பட்ட இக்கோட்பாடு, பின்னாளில் சற்றே மாறியது. இதன் வழியாக குற்றம் நடைபெறுவதற்கான காரணம், எப்படி குற்றம் என்பது நடக்கிறது, அதை செய்பவர் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். குற்ற இயல்பு என்பது கற்றுக்கொள்ளக் கூடியது. குற்றச்செயல்பாடுகளை அதை செய்பவர்களிடமிருந்து எளிதாக கற்கலாம். இப்படி கற்கும் செயல்பாடு நெருங்கிய நண்பர்கள் குழுவில்தான் தொடங்குகிறது குற்றங்களை செய்வதற்கான நுட்பங்கள், பாணிகள், காரணங்கள் மாறுபடக்கூடியவை. குற்றத்தின் காரணங்களைப் பொறுத்து அதற்கான தண்டனை என்பது சட்டத்தின் கீழ் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக அமையலாம். இது, சட்டத்தின் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. ஒருவர் தரும் வாக்குமூலப்படி அவர் சட்டத்தை மீறிய குற்றவாளியாக கருதலாம் அல்லது அவர் கூறும் கூற்றுப்படி சட்டத்தை மீறவில்லை என்றும் முடிவெடுக்கலாம். ஒரு விஷயத்தைக் கற்பது என்ற அடிப்படையில் அவரின் ஆர்வம், ஆழமாக ஆய்வு செய்யும் தன்மை, ஒத்த அலைவரிசை என பல்வேறு அம்சங்கள் மாறுபடலாம். ஒருவர...

மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

படம்
  மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு. நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற...

எனக்கு தெரிந்த நபர் நல்லவர் கிடையாதா? - இருளான பக்கம் கொண்ட மனிதர்கள்

படம்
  கொலையாளிகளை   ஒருவர் புரிந்துகொண்டு அவரைப் பிடிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் உதவி னால் எளிதாக காரியம் முடியும். இதற்கு நாம் அணுக வேண்டியது, கொலையாளிகளின் கூட்டாளிகள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், காதலர்கள், மனைவி என வரையறுக்கலாம். கூடவே கொலையாளியால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களை சரியான படி விசாரித்தாலே குற்றவாளி பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். சிறப்பாக யாரும் அறியாமல் கொலை செய்பவர்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் நிறையவே உண்டு. அதை உடன் இருப்பவர்கள்தான் அடையாளம் கண்டு கொலையாளிகளுக்கு கூறுவார்கள். திருத்திக்கொள்வதற்கல்ல. பொதுவாக மனித மனம் குறிப்பிட்ட பாணியில் இயங்கும். நாம் வாங்கும் பொருட்கள், பழக்கம், செய்யும் செயல்கள் அனைத்தும் குறிப்பிட்ட பாணியில் அமைந்துவிடும். எண்ணங்களை அடிப்படையாக கொண்டதே நமது செயல்பாடுகள். அதன் பிரதிபலிப்பாக நமது உடைகள், தேர்ந்தெடுக்கும்பை, பயன்படுத்தும் பொருட்கள் அமையும்.   தொடர் கொலைகாரர்கள் தங்களின் செயல்பாட்டை பிறருக்கு அதாவது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் செ...

கொலை செய்வதற்கு காரணம் தேவையில்லை! - கொலைகாரர்களின் உளவியல் ரகசியம்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 கொலை செய்வதற்கான காரணங்கள் என்பதை காவல்துறையினர் எப்போதும் தேடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த காரணமும் இல்லை என்று சொல்லும் குற்றவாளிகள் உலகில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கில்மோர். இவர், 1976இல் எரிபொருள் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு பணியாற்றிய மேக்ஸ் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவரும் பணிந்தார். கையில் உள்ள, ட்ராயரில் உள்ள பணத்தைக் கூட தர நினைத்தார். ஆனால் கில்மோர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வில்லை. முட்டிபோட்டு உட்காரவைத்து பின்புறத்தில் இருந்து சுட்டுக்கொன்றவர், அதை தனக்கும் தன்னை விட்டுச்சென்ற காதலிக்குமான நினைவுப்பரிசாக நினைத்தார். இதற்குப் பிறகு அப்படியே சென்றவர், மோட்டல் ஒன்றில் நுழைந்தார். அங்கு இருந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டியவர், அவர் அதற்கு பணிந்தவுடன் அவரையும் கொன்றார். கில்மோரை அவரது உறவினரே காட்டிக்கொடுத்தார். எதற்காக அந்த கொலை செய்தார் என்றால் தான் தொடர்ச்சியாக கொலை செய்யவேண்டும். மிரட்டிய விவகாரம் தெரிந்தால் காவல்துறை அவரை கைது செய்துவிடும் என கில்மோர் நினைத்தார். மூன்றாவது கொலை ...