இடுகைகள்

அனுபவ் சின்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை புரிந்துகொண்டால்தான் மக்களின் உணர்வோடு இணையமுடியும்! - ஆயுஷ்மான் குரானா

படம்
அனுபவ் சின்கா, ரா ஒன் படம் மூலமாக இந்தியா முழுக்க பிரபலமானார். ஆனால் இது ஃபேன்டசி படம். அதற்குப் பிறகு அவர் எடுத்த முல்க், ஆர்டிக்கிள் 15, தப்பட் ஆகிய படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு சிக்கல்களை அலசின. இயல்பான நடிப்பு, நாம் ஏற்கமுடியாத நிதர்சன உண்மை ஆகியவற்றை மையமாக கொண்டே அனுபவ் சின்கா படம் எடுத்துவருகிறார். இவர் எடுக்கும் படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளரும் கூட. அதனால் தான் தைரியமாக பிறர் சொல்லத் தயங்கும் விஷயங்களை சொல்ல முடிகிறதோ என்னவோ, இப்போது வடகிழக்கு இந்தியா பற்றிய படமான அனெக்கை எடுத்துள்ளார். இதில் நடித்துள்ளவர், ஆயுஷ்மான் குரானா.  ஆயுஷ்மான் குரானா இந்தி சினிமா நடிகர்  அனெக் படம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? நாங்கள் இதுவரை பேசாத விஷயத்தை அனெக் படத்தில் பேசியுள்ளோம். இந்த நிலப்பரப்பும் கூட புதிது. ஆர்டிக்கிள் 15 படத்தில் நான் நடித்துள்ளேன். அது எனக்கு முக்கியமான படம். மாறுபட்ட குரலை பிரதிபலிக்கும் ஆளுமையாக அனுபவ் சின்கா உள்ளார். நான் அவரை நம்புகிறேன்.  கதை சொல்லுவது, சொல்லும் விஷயத்தின் உண்மை ஆகியவற்றில் யாரும் அனுபவ் சின்கா அளவுக்கு நியாயம் செயதிருக்க முடியாது.  வடகிழக்கு பற்