இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை

படம்
மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜோதிபாய் பரியாடத்து தமிழில் - சுகுமாரன் எதிர் வெளியீடு விலை ரூ. 55 நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர். இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு நிறைவுப்பகுதி - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
யாரும் உங்களை நம்பிக்கையாளராக கூறுவதில்லை. படத்தில் சரஜீவோ காப்பகம் சார்ந்த இவோலெவி கூறுவதாக ‘ ‘ நீங்கள் ஏற்றுக்கொண்டு செய்யும் பயணமானது ஒரு துண்டு படச்சுருளுக்கானது. இதில் முழுக்க நம்பிக்கை கொள்ளலாம். அல்லது முழுக்க விரக்தியுள்ள நிலைமையில் வீழலாம் ’’ என்று கூறுகிறார். இந்த நயமற்ற காட்சி வரும் நூற்றாண்டின் இறுதியில் விரக்தி அல்லது நம்பிக்கை என எதனை இக்காட்சி குறைந்தபட்சம் வெளிப்படுத்துகிறது?             நான் இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமகாலத்தின் மீதான நேர்மையான பதிவுகளைத்தான் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு என்றும் முதுகு காட்டியே நிற்கின்றனர். நம்புகின்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தவறான காரணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் இறுதி முடிவாக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது. எனது படத்தின் இறுதியில் கதாபாத்திரங்களின் பயணம் முடிவுறாது தொடர்கிறது என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் அவர்கள் தொடர்ந்து தமது வீட்டைத் தேடுவார்கள் என்

நூல்வெளி 2: புகழ்பெற்ற சிறுகதைகள்

உலகம் உங்கள் கையில் உலகப்புகழ் சிறுகதைகள் பேரா.கி.நடராஜன் பாவை பப்ளிகேஷன்ஸ் விலை ரூ. 70 இந்நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. அதனை டால்ஸ்டாய் செகாவ், மாப்பசாந், டாஸ்டாவ்ஸ்கி, சோமர்செட்மாம், ஓ ஹென்றி, ஆஸ்கார் வைல்ட், ஜேம்ஸ் தர்பர்,ஆர்.கே. நாராயணன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.  முதல் கதையான மூன்று துறவிகள் கதை அனைவருமே வாசித்திருக்கக்கூடிய கதைதான். சடங்குகளை ஒழித்து தூய மனதோடு இறைவனை நினைத்திருந்தால் போதும் என்னும் டால்ஸ்டாய் எழுதிய கதை. தன்னலமிக்க அரசன், மேகிக்களின் அன்பளிப்பு போன்றவற்றை நீங்கள் நிச்சயம் உங்களது ஆங்கில துணைப்பாடத்திலேயே வாசித்திருக்கலாம். அதைப்பற்றி மாங்கு மாங்கு என்று பரீட்சையிலே விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டதால் அக்கதைகள் குறித்து புதிதாக சொல்ல ஏதும் இல்லை. புள்ளிபோட்ட வளையம் - ஆர்தர் கானன்டாயில், நகைகள் - கைடி மாப்பசாந், தாயார் - சோமர்செட் மாம், ஜோஸியக்காரனின் வாழ்க்கையில் ஒரு நாள் - ஆர்.கே. நாராயணன்  என இக்கதைகள் புதிதான வாசிப்பனுபவத்தை அளித்தன என்று கூறமுடியும். புள்ளி போட்ட வளையம் கதையில் சுவாரசியம் என்னவென்றால் ஷெர்லாக் ஹோம்ஸ் அக

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
லெனினின் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலமானது உலகில் மதம் குறித்த பெரும் விஷயங்களைக் குறிக்கிறது. கம்யூனிச மதம் வீழ்ந்தது ஒருபுறமிருக்க, விவசாய குடியானவர்கள் லெனின் சிலையுடன் கம்பீரமாக ஆற்றைத்தாண்டி வருகிறார்கள் என்பது  ஒருபுறம் நிகழ்கிறது. விரக்தியுற்ற விவசாயிகள்  மதம் தேவை என்பதை அறிந்தும் ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறியாது இருக்கிறார்களா?       மதம் குறித்த விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வளம் குன்றிய விவசாயிகளுக்கு எரிச் ப்ரோம் கூறுவது போல மாய உதவி என்று மதம் குறித்து கூறலாம். ஒரு சிறு கப்பலில் பெரிய சிலையை துண்டுகளாக்கி செல்லும் காட்சியை நானே கண்டும் இருக்கிறேன். சிறு படகு ஒன்று கரும்கடலில் ரோமானிய துறைமுகமான கான் ஸ்டன்னாவினை கடந்து செல்கிறது. பேரளவிலான அழகற்ற லெனினின் உடைத்து போடப்பட்டிருக்கிற சிலைத்துண்டுகளை பார்க்கும் ஒருவன் திகிலடைந்து போகிறான். அவனைப்பார்த்து தானாக தன் நெஞ்சருகே படகோட்டும் பெண் சிலுவைக்குறி போட்டுக்கொள்கிறாள். இது போன்ற நிகழ்வுகளில் சிலுவைக்குறி போட்டுக்கொள்வது இயல்பானதாகவே உள்ளது. உங்களது அண்மைய படங்களில் நிகழ்காலத்தி

இதழாளர்களின் பைபிள் : நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
இதழாளர் கையேடு சிவந்தி ஆதித்தனார் ராணிமுத்து பதிப்பகம் விலை ரூ. 20 நூலின் பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது எது மாதிரியான நூல் என்று. அதேதான். ஆனால் மிக எளிமையான கையேடாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தினத்தந்தி நாளிதழை வாங்கி நீங்கள் வாசித்து பார்க்கலாம். ஆமாம். தினந்தந்தியை நிறுவி அந்நிய மாநிலத்தவர்கள் பலருக்கும் தினமும் ஐந்து ரூபாயில் தமிழ் பழக வாய்ப்பளிக்கும் பத்திரிகையை தொடங்கியவர் ஆதித்தனார்தான் புத்தகத்தின் ஆசிரியர்.  நூலில் கூறப்படும் விதிகளை அனைத்தையும் தன் வாழ்நாளில் அவர் பெற்ற அனுபவங்களின் வழியேதான் கூறுகிறார் என்பதை நூலின் பின்புறம் இருக்கும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்பை வாசிப்பவர்களுக்கு எளிதாக புரிந்துவிடும்.  இன்றும் தினத்தந்தி பல இணையதளங்கள், தொலைக்காட்சிகள் வந்தாலும் தினமும் ஒருகோடி வாசகர்களை பெற்று  எளிய மக்களின் செய்தி பத்திரிகையாக  முன்னணியில் நிற்க காரணம் ஆதித்தனார் சொன்ன விதிகளை அந்நிறுவனத்தார் தொடர்ந்து பின்பற்றி வருவதுதான் காரணம் என்று நிகழ்கால உதாரணமே காட்டமுடியும்.  கா

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 2: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
ப்ளோரினா பகுதி வரும் படத்தின் முன்பகுதி நம்பகத்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. குறிப்பிட்ட பகுதியின் தேவாலய ஆயர் தங்கி இருக்கும் அவர் தன் முழு செல்வாக்கைப் பயன்படுத்தி நாரையின் தடுக்கப்பட்ட பாதை படத்தினை திரையிடுவதை தடுக்க முயற்சிக்கிறார். படம் எடுக்கும்போது பொருட்படுத்த வேண்டியதல்லாத ஒரு நிகழ்வு அதற்கு காரணமாகிறது. மேம்பாடு தேவைப்படும் திரையரங்கு ஒன்றில் படத்திரையிடல் நடைபெறுகிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கிறார்கள். காட்சி ஒன்றில் தேவாலய மணி ஒலிக்கும் ஒலி அவர்களை தொந்தரவு செய்ய அதனை கவனிக்கிறார்கள். கிரீஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் திரையிடுதலை ஊக்குவிப்பது போல இதிலும் நீங்கள் கலந்து கொண்டு உள்ளீர்கள். ஒரு திரைப்பட இயக்குநருக்கு அடிப்படையாகவே வணிகரீதியான அம்சங்களில் இன்றைய காலகட்ட சினிமா தேவைகளுக்காக தனிப்பட்ட ஆர்வம் தேவைப்படுகிறதா?       முதலில், திரைப்படங்களுக்கான பிரச்சனைகள் மற்றும் உண்மையிலே அவற்றினை எதுவென அடையாளம் கண்டிருக்கிறோம். பல்வேறு ஆண்டுகளாக நான் பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், சந்திப்புகள் போன்றவற்றில் நவீன சினிமாவின் சிதைவுக

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
13 மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு – யுலிசெஸ் கேஸ் டேன் ஃபைனாரு – 1996 ஆங்கில மூலம்: டேன் ஃபைனாரு தமிழில் லாய்ட்டர் லூன் எளிமையான கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்தக்கதையின் மூலம் என்ன?       புதிய திரைப்படம் குறித்துப் பேச வழக்கம் போல் வடக்கு இத்தாலிய கிராமத்தில் வாழும் டொனினோ காவரா வினை சந்தித்து இந்தமுறை ஒடிஸி குறித்து படம் எடுக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அற்புதமான யோசனை என்று கூறிய அவர் அதை எப்படி செய்யப்போகிறாய்? என்று ஒடிஸி குறித்து நாம் முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றவர் வீட்டிலிருந்து வெளியே போய் இத்தாலிய பதிப்பான ஒடிஸி ஒன்றை வாங்கி வந்து ஒரு பத்தியை படித்துக்காட்டினார். யுலிசெஸ் வீடு திரும்புகிறான் ஆனால் பெனலோப்பிற்கு அவனை அடையாளம் காணமுடியவில்லை என்ற பகுதியை கேட்டபோது எனக்கு அது சிறப்பான பகுதி என்பதாக தோன்றியது. அப்போது ஒரு பெண் என்னிடம் வந்து தான் மன்சூ அமைப்பிலிருந்து வருவதாகவும்(சிற்பி ஜியாகோமா மன்சூ) கடிதம் ஒன்றினையும், பரிசுப்பொருள் ஒன்றினையும் தந்தார். பரிசு என்னவென்றால் யுலிசெஸின் தலைதான். கூடவே மன்சூவின் மகள் எழுதிய கடிதமும் இருந்தது

தேசியக்கலாச்சாரம் தனிப்பட்ட பார்வை நிறைவுப்பகுதி -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குறியீடுகளின் மரபு குறித்த பகுதி பல குறியீடுகள் ஒன்றிணைந்ததாக உள்ளது. தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்வு போல ஒன்றிணைந்ததாகவே அது உள்ளது. ஐன்ஸ்டீன் சிந்திப்பது போல உலக சினிமா சிந்திக்கிறது என அப்படங்கள் மீதான ஈர்ப்பை நாம் கூறுகிறோம். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும்  ஒத்தமைவு தொகுப்பு குறித்தவற்றை கிரிபித்திடமிருந்து பெற்றிருக்கிறோம். மான்டேஜ் – இடைவெட்டில்லாத தொடர்ச்சியான காட்சி என்பதை நான் காட்சிக்குள் இருக்கும் ஒன்றாகவே காண்கிறேன் இது ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கிறது.       என்னுடைய படங்களில் தொடர்ச்சியான காட்சி என்பது உயிர்ப்பாக இருப்பதை அதனை வெட்டுவது என்பதோடு தொடர்புடையதல்ல. இயக்கத்தோடு தொடர்புடையது ஆகும்.  தொடர்ச்சியான காட்சி என்பது படமாக்கப்படும் காட்சிகளில் உள்ள நேரம் இயக்கம் அதோடு இடைவெளியும் தொடர்புடையனவாகும். இயக்கம் மற்றும் இசை என இரண்டிற்கும் இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.  முழுமையான விளைவு என்பதை ஏற்படுத்தும் வகையில் அவை முக்கியமானவை ஆகும். என்னுடைய படத்தின் காட்சிகள் முழுமையடைந்தனவாக உள்ளன. அவற்றின

தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 3 -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
ஆண்கள் இதை ஒப்புக்கொள்வார்களா?       நிச்சயமாக இல்லை (சிரிக்கிறார்). என்னுடைய முதல் படமான மறுகட்டமைப்பு படத்தினைப் பாருங்கள். பெண்ணின் பார்வையில் கதையினைக் கூறி, மனைவி கணவனை ஏன் கொன்றாள் என்று கதை அவளது பார்வையில் பயணிக்கும். பயணிக்கும் வீரர்கள் படத்தில் தன் முன் உடையைக் கழற்றும் ஆணைப் பார்த்து பெண் சிரிப்பாள். இப்படி காட்சிகளை உருவாக்கியதால் நான் பெண்ணியவாதி என்று அர்த்தம் அல்ல. பாரம்பரியமான கருத்தியல்களுக்கு நான் எதிராக இருக்கிறேன். ஆண், பெண், கருப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் என இவர்களை ஊக்கப்படுத்தி மூளைக்கும் உடலுக்குமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பல திரைப்பட இயக்குநர்கள் தொலைக்காட்சி, காணொளி மற்றும் கணினியின் யுகத்தில் தனிப்பட்ட இயக்குநர்கள் என்பவர்களின் படங்களுக்கான நேரம் இனி இல்லை; அவை முடிந்துவிட்டது; சினிமா என்பதற்கான காலமே இறந்தகாலம் ஆகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்களே?       இல்லை. உலகத்திற்கு சினிமா என்பது எப்போதையும் விட இப்போது அதிகமாகவே தேவைப்படுகிறது. நாம் வாழும் உலகம் அடையும் சீர்கேட்டிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்கான இறுதி பாதுகாப்பு வடிவம் எ