இடுகைகள்

காய்கறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

படம்
  வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி   மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.   இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு

உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!

படம்
  பொதுவாகவே, எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில் பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில் டீ கடையோடு இணைத்து ஹோட்டல்   ஒன்றை வைத்திருக்கிறார். அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில் பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.   பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார். இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர்.   பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம், கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது. அப்படியிருந்து போட்டி போட்டு   சாப்பிட்டு வந்த சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை. ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க’’ என்று நான் சொன்னதில் இருந்து அவர் இ

உடல் எடையைக் கூட்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! - உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

படம்
  உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தினசரி வாழ்வில் ஊறுகாய் முதல் உப்புக்கண்டம் வரை ஏராளமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மூலம் உடலில் சேர்பவை என்னென்ன? சர்க்கரை, கொழுப்பு, உப்பு (சோடியம்). உண்மையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை முழுக்க தவிர்க்க முடியாது. ஏனெனில், காய்கறி, பழங்களை விட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாற்பது சதவீதம் விலை குறைவானவை. பொருளாதார நோக்கில் பார்த்தால் மக்களுக்கு இப்பொருட்களை வாங்குவது பர்சைக் கடிக்காத விஷயம். ஆனால், ஆரோக்கிய நோக்கில் பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி வரும். உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வந்தால் அதை எதிர்கொள்வது இன்னும் கடினமானது. வெளிநாடுகளில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் பத்து சதவீதம் உண்டபோது, அவருக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்களை விட ஏழு மடங்கு அதிக எடை ஆபத்து உருவானது. வீட்டுச் சமையலில் பயன்படுத்தாத பதப்படுத்தப

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளு

இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

படம்
  அலைன் டுகாசி சமையல் கலைஞர் உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.  இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன? இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன்.  மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா? எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம் பல்வேறு வகைப்பட்டத

ஒப்பந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் லாபம்!

படம்
  விவசாயத்தோடு கைகோக்கும் தொழில்நுட்பம்! 2013ஆம் ஆண்டு ஹரியாணாவின் குர்கானில் பார்த்து வந்த தகவல் தொழில்நுட்ப பணியை விட்டு விலகினார் சச்சின் காலே. அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டனர்.  அப்போது சச்சினுக்கு, அவரின் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. நீ ஏன் பிறருக்காக உழைக்கவேண்டும். உனக்காக உழைக்கலாமே என்ற வாசகத்தை நினைவில் கொண்டு, ”விவசாயம் செய்யப்போகிறேன்” என்றார்.   விரைவிலேயே தனது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்பினார். சச்சினின் குடும்பத்திற்கு சொந்தமாக  24 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் செய்த முதல் ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட தவறுகளை விரைவில் சரிசெய்துகொண்டார். பருவகாலங்களில் நெற்பயிர்,  பிற காலங்களில் காய்கறிகளையும் பயிரிட்டு வென்றார். தனது விவசாய முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு கூற  2014ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.  சச்சின் காலே, ஒப்பந்த முறை விவசாயத்தை பற்றி ஆய்வு செய்து, அதைப்பற்றி விவசாயிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். சச்சினின் செயல்பாட்டால், தற்போது விவசாயிகளின் நிலங்களில் ஆண்டு முழுவதும

பணவீக்கத்தால் பசியில் படுக்கும் ஏழை குடும்பங்கள்!

படம்
  பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வட இந்தியாவில் ரொட்டியுடன் சாப்பிட காய்கறிகள் இல்லாமல் உப்பை மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். இறைச்சி, பால், முட்டை என குழந்தைகளுக்குத் தேவையான எதையுமே அவர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.  பணவீக்கம் காரணமாக பருப்பு, காய்றிகளை மூன்று வேளை உணவில் ஒரே முறை சேர்த்துக்கொள்ளும் படி நிலைமை மாறிவிட்டது. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்சனா. இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த குழந்தைகளுக்கு ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார். இவரது கணவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரின் ஊதியமாக மாதம் 50 ஆயிரம் கிடைத்து வந்தது. அதை வைத்துத்தான் சேமிப்பையும் ஒரு லட்சம் வரையில் உயர்த்த முடிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் உண்டு.  மூன்று குழந்தைகளுக்கும் முதலில் கறி, காய்கறி, பால், முட்டை என கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இடையில் குறுக்கிட்ட லாக்டௌன் காலம் இதுவரையிலான வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. அஃப்சனா சேர்த்து வைத்த சேமிப்புகள் காலியாகிவிட்டன. அடுத்து, அவரின் கணவருக்கு வேலை

அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

படம்
  காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்! மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார்.  மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை.

சிவப்பு இறைச்சி இதய நோய்களை அதிகரிக்கிறது! - பேராசிரியர் வால்டர் சி வில்லெட்

படம்
                  வால்டர் சி வில்லெட் நோயியல் துறை பேராசிரியர் இறைச்சி சாப்பிடுவது பற்றி ஈட் லான்செட் ஆய்வு வெளியாகியுள்ளது . அது எந்த வகையில் உலகிற்கு ஆபத்தானது ? 2050 இல் உலக மக்கள் தொகை பத்து பில்லியனாக உயரவிருக்கிறது . நாம் தற்போது சாப்பிடும் அளவுக்கு இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டால் , காடுகள் நிறைய அழிக்கப்படும் விலங்குகளுக்கான உணவுக்காக நிறைய தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படும் ஆபத்து உள்ளது . பசுமை இல்ல வாயுக்களும் அதிகரிப்பதால் பருவச்சூழல் மாறுபாடுகளும் ஏற்படும் . நாம் இறைச்சியை விட்டு தானியங்கள் , பருப்புகள் , காய்கறிகளை சாப்பிடுவது இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அணுகுமுறை . மக்கள் தங்கள் உடல்நலனுக்கு பொருத்தமான உணவுமுறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம் . இதற்கு நாங்கள் காய்கறி சார்ந்த உணவுமுறையை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம் .    காய்கறிகள் சார்ந்த உணவு எப்படி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் போதுமானவையாகும் ? நீங்கள் உங்கள் உணவுகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் அவற்றை உணவாக கொள்வதை விட பயனளிக்க கூடியதுதா

Whole foods புகழ்பெற்றது எப்படி?

படம்
pixabay மிஸ்டர் ரோனி முழுமையான உணவு என்று ஒன்று உண்டா? முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான். முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது. இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா? தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பிடச்

ஆண்களுக்கான சூப்பர் விட்டமின் மாத்திரை பிராண்டுகள்!

படம்
pixabay ஆண்களுக்கென்றே பல்வேறு விட்டமின் மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் விற்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம். Rainbow Light Men’s One Multivitamin காய்கறிக்கலவை, புரோபயாட்டிக் உள்ளிட்டவற்றால் ஆனது. இதயம் மற்றும் புரோடஸ்டேட் சுரப்பி ஆகியவற்றைக் காக்கிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பால், பருப்பு, மீன் விஷயங்கள் இதில் கிடையாது.  Smarty Pants Men’s Complete சூயிங்கம் போல சுவைத்து சாப்பிடும் விட்டமின் மாத்திரை. 13 ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. போரடிக்காமல் இதனை சாப்பிட ஆறு வகையான சுவையில் வெளியாகிறது. விட்டமின் பி12 சத்து கொண்டது.  இதுவும் மரபணு மாற்றம் தவிர்த்த பொருட்கள் ஆனது. அலர்ஜியை ஏற்படுத்தும் பால், கோதுமை, பருப்பு, மீன் ஆகிய பொருட்களை தவிர்த்து இந்த மாத்திரைகள் உருவாகியிருக்கிறது.  Smarty Pants Men’s Complete தினசரி சாப்பிட வேண்டிய விட்டமின் மாத்திரை. ஆற்றல் தரும், மன அழுத்தம் போக்கும் மாத்திரை இது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரை. வீகன், வெஜ் ஆட்களுக்கு ஏற்றாற் போல, விலங்குப் பொருட்களிலிருந்து எந்த பொருட்களையும் சேர்க்கவில்லை.  Garden of

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!

படம்
டாப் 5 கேள்விகள்  மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி? காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா? பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா? ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை. ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா? இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா? சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாதிரிய

2014- 2019 மாற்றங்கள் என்ன?

படம்
pinterest/creative gaga 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் விரைவில் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விலைவாசி உயர்வு என்பது பொதுவான ஒன்று. அதில்லாமல் பிரிவினைவாதம், அரசைக் கேள்விகேட்கும் நெஞ்சுரம் குன்றியது, அரசு அமைப்புகளின் நம்பிக்கை உடைந்துபோனது, வெற்றுப் பேச்சுகள், அநாகரிக செயல்கள், சுயநலன் அரசியல், போலி தேசபக்தி நாடகங்கள் என பல பாதிப்புகள் நேர்ந்திருக்கின்றன. பெட்ரோல் உயர்வு 71.56(2014) , 72.24(2019) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.3         -  70.6 சென்செக்ஸ் 24,217 - 35,867 பிஎஸ்இ - 9,206  - 14, 196 ஏற்றுமதி (ஏப்-ஜூன்) பில்லியனில் 264   170 கழிவறை உருவாக்கம் 38%   98% காய்கறிகள் விலை(டெல்லி, கி.கி) உ.கிழங்கு 25 15 தக்காளி 15  34 வெங்காயம் 23   20 உள்ளூர் விமானப்பயணிகள்(கோடிகளில்) 6.7    13.6 நுகர்வோர் நம்பிக்கை 117.1 128.9 மாசுபாடு 8 வது இடம் 3 வது இடம் மொபைல் டேட்டா பயன்பாடு 33 எம்.பி - 8.3 ஜி.பி நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

அல்கலைன் உணவுகள் உடலை பாதிக்குமா?

படம்
Pexels.com அல்கலைன் உணவுகள் உடல்நலனைப் பாதிக்குமா? இயற்கையில் கிடைக்கும் உணவுப்பொருட்கள் அனைத்திலும் சிறிய அளவு நச்சுத்தன்மை உண்டு. அவற்றை நாம் குறிப்பிட்ட விதமாக நீக்கி சாப்பிடுகிறோம். குறிப்பிட்ட டயட் வகையை கடைப்பிடிக்கும்போது குறிப்பிட்ட வகை அமிலங்கள், சத்துக்கள் உடலில் அதிகம் சேரும். ஆனால் கவலை வேண்டாம் உடல் தன் பிஹெச் அளவை சரி செய்து நம்மைக் காக்கும். நாம் செய்யவேண்டியது அது உழைக்கத்தேவையான நேரத்தை வழங்குவதே. பழங்கள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றில் அல்கலைன் அதிகம் என்றாலும் இவை உடலில் அமில அளவை அதிகரிக்கும் என பயப்படவேண்டாம். உடல் அதனை சரி செய்துகொள்ளும். டீ, காபி உள்ளிட்ட காஃபீன் பொருட்களை குறைத்துக்கொண்டாலே உடலுக்கு நல்லது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் - எம்மா டேவிஸ்