வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!
வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது. இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு