இடுகைகள்

இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ர

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இ

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்

படம்
  எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் சு வேணுகோபால் எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆங்கில திரைப்பட உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும், அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை   எழுதி எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.   தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம் அணைக்க தயாராக இருக்கிறார்கள்.  இயக்குநர்கள் ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம். எழுத்தாளர் இமையம் ‘’ஒரு நாவலின் எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின் கட்டமைப்பும் வேறுப

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மகத்தான இலக்கிய எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்!

படம்
  ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அவரின் பல்வேறு நாடகங்கள்,கதைகளை வைத்து ஆங்கிலப் படங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது பார்க்கப்போவது அவரைப்பற்றித்தான்.  1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஷேக்ஸ்பியர் பிறந்தார். ஜான் மற்றும் மேரி ஷேக்ஸ்பியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ட்ராபோர்ட் கிராமர் பள்ளியில் படித்தார். தனது பதினெட்டு வயதில் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சூசன்னா, ஜூடித் , ஹாம்னட் என்பதுதான் பிள்ளைகளின் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதற்குள்ளாகவே அவருக்கு கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருந்தது.  இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் ஜூலியஸ் சீசர், ஐந்தாம் ஹென்றி, ஓத்தெல்லோ, மெக்பத், ஆகியவை முக்கியமானவை. நகைச்சுவை நாடகங்களான ஏஸ் யு லைக் இட், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், காதல் நாடகங்களான ரோமியோ ஜூலியட், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகியவையும் முக்கியமானவை.  ஷேக்ஸ்பியர் கிளாசிக்கான எழுத்தாளர். இன்றும் கூட அவர் தேர்ந்தெடுத்த பாத்திர

சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

படம்
  விக்டர் ஹியூகோ விக்டர் ஹியூகோ இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான்.  இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார்.  ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார்.  பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் டி டிஐலாண்டே என்ற பெயரில் வெளி

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே

வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி மனோரஞ்சன் பியாபாரி மேற்கு வங்க எழுத்தாளர் உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே? இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.  ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா? நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்படி வசைகளை

இருவேளை உணவுக்காக நான் ஏராளமான வேலைகளை செய்துள்ளேன்! - எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி

படம்
  மனோரஞ்சன் பியாபாரி எழுத்தாளர், அரசியல்வாதி இமான் என்று வெளியாகியுள்ள நூல் நீங்கள் எழுதிய வரிசையில் 25ஆவது நூல்தானே? இல்லை 26 ஆவது நூல். வங்காளத்தில் இந்த நூலை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். சீரா சீரா ஜீபோன் என்பது அதன் பெயர். இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இமான் என்றாகியுள்ளது.  அருணாவா சின்காவின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்துள்ள அருணாவாவின் பணி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன்.  அவர் என்னுடைய தேர் ஈஸ் கன்பவுடர் இன் தி ஏர் என்ற நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை வாசித்தவர்களுக்கு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். நூலின் அடிப்படை உணர்ச்சிகளை உள்வாங்கி மொழிபெயர்க்கும் திறன் கொண்டவர்.  நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? நான் மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன்.  வங்காள மொழியில் மட்டும் முதலில் உங்கள் நூல்கள் வெளியாகின. இப்போது மொழிபெயர்ப்பு காரணமாக பிற மொழிகளிலும் வாசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருணாவா அவர்களுக்குத

சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்

படம்
          அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது . பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது . கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது . தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன் . எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன் . படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் . ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன் . தமிழில் பார்க்க முடியும் . புனைவு கலந்த தொடர் . போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் . தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார் . சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது , அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார் . அவனை பிடிக்கும் நினைக்கும்போது , எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார் . இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது . போலீஸ்காரராக இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது . இவரும் வேலை பார்ப்பது , இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்

இலங்கை சிற்றிதழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் பயணம்! - மல்லிகை சிற்றிதழ்

படம்
                அனுபவப் பயணம்  டொமினிக் ஜீவா  நாவிதராக தொழில் செய்யும் ஒருவர் இலங்கையில் இலக்கிய இதழை நடத்தி வந்தார். அவர் பெயர்தான் டொமினிக் ஜீவா. இலங்கையில் சாகித்திய பரிசை முதன்முதலாக வென்ற எழுத்தாளர் இவரே. மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தனது அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.  தனது தொழில் சார்ந்து நிறைய லாபம் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு எழுத்தை தொழிலாக மாற்றிக்கொண்டு படாதபாடு பட்டிருக்கிறார். இதனை ஏன் எழுதவேண்டும் என்பதையும் நூலில் தெரிவித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள், அவதூறுகளை தனது கவனத்தில் கொண்டே எழுதியிருக்கிறார். மேலும் இதனை குறிப்பிட்ட அவதூறு எழுத்தாளரின் விழா மேடையில் தெரிவிக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட எழுத்தாளராக ஜீவா இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.  நூலில் நிறைய இடங்களில் தனது பெருமைகளை சொல்லுவது போல இடங்களை அதிகமாகிவிட்டன. சாதிரீதியான பாகுபாடு கொண்ட மனநிலை இப்படி ஜீவாவை பேச வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழகம் வந்து பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்சன், ஜெயகாந்தன் ஆகிய எழ

நினைவெனும் பாற்கடலை தோண்டியபோது...- பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்

படம்
            பாற்கடல் லா.ச.ராமாமிர்தம் மதுரை புராஜெக்ட் ப. 284 இந்த நூல் இலக்கியம் சார்ந்த தன்மை கொண்டதல்ல என பலரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. படிக்கும்போது கூட வாசகருக்கு அப்படி தோன்றலாம். ராமாமிர்தத்தின் சுயசரிதை என்று தாராளமாக சொல்லலாம்.  நூலில் ராமாமிர்தத்தின் குடும்ப உறுப்பினர்களின் வினோதமான குணங்கள் பற்றி பகடியாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த குடும்பத்திற்கு இந்தளவு கஷ்டமாக எனும்படி நெகிழ்ச்சியாக உள்ளது.  இதில் நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம் தரும்படி லா.ச.ராவின் அம்மா பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. நூலைப் படித்து முடிந்தாலும் கூட அம்மா பற்றி குணம், காட்சி வர்ணனைகள் மனதை விட்டு நீங்கவில்லை. எழுத்துகளில் அதிக விவரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவரின் குணத்தை தராசில் இட்டு நிறுப்பது போல கூறும் இடம். உணவு பற்றி எழுதும் இடங்களில் எழுத்து வசீகரம் கொள்கிறது. இது வாசிப்பவரகளுக்கு நேரும் மாயமா, எழுத்தாளருக்கு பிடித்த விஷயம் என்பதால் தனித்துவமாக அந்த பத்தி தெரிகிறதா என்று அறியமுடியவில்லை. எதுவானாலும் வாசிக்க நன்றாக இருக்கிறது. அம்மன் கோவிலிலுள்ள ஈட்டியில் செருகி வைக்கப்

நான் எழுதியுள்ள தீமையின் உருவமான கதாபாத்திரம் இறப்பே இல்லாதது! - எழுத்தாளர் டேனியல் கேஹ்ல்மன்

படம்
versopolis எழுத்தாளர் டேனியல் கேஹ்ல்மன் ஜெர்மன் நாட்டுப்புறக் கதையில் பிரபலமாக உள்ள கதாபாத்திரம் டைல் உலன்ஸ்பிஜெல். குழந்தைகளின் இலக்கியத்தில் மிகப் பிரபலமாக உள்ள தீமையைச் சொல்லும் கதாபாத்திரம் இது. இதனை நவீனத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் டேனியல். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது உங்களது எழுத்தை பாதித்ததாக சொல்கிறார்களே? அவர் பதவிக்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அத்தோடு அமெரிக்காவில் ஜனநாயகம் முடிவுக்கு  வந்ததாக நினைத்தது உண்மை. டைல் என்ற கதாபாத்திரத்தின் செயல்பாடுகளை எழுதிக்கொண்டிருந்ததால் உடனே என்னால் எழுத்தை நிறுத்தமுடியவில்லை. என்னால் முக்கிய கதாபாத்திரத்தின் எடுத்துக்காட்டை சொல்லாமல் எழுத முடியாதோ என்று நினைத்து பயந்தேன். இந்து புராணங்களை அறிவீர்களா?உங்களது கதையில் வரும் டைல் சில நேரம் மனிதனாக, சில நேரம் புனைவு கதாபாத்திரமாக வியக்க வைக்கிறது. சுதந்திரம் வேண்டி விலங்குகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைக்கிறது. இந்த பாத்திரத்தை கலாசார வேறுபாடுகள் கடந்து வாசகர்கள் எப்படி பார்க்கவேண்டுமென நினைக்கிறீர்கள்? நான் இதுவரை டைல் போன்ற இறவாத கதாபாத்திரத்த

பழமொழியைக்கூட கவனித்து எழுதி வருகிறேன்!

படம்
benyamin/indian express எனக்கு கிடைத்த விருது பிராந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பென்யாமின் , மலையாள எழுத்தாளர் . பென்யாமின் எழுதிய அல் அரேபியன் நாவல் ஃபேக்டரி , ஜாஸ்மின் டேஸ் ஆகிய இரு நாவல்களும் வாசகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன . ஒன்றின் தொடர்ச்சியாக நீளும் இரு நாவல்களிலும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரேபிய வசந்தம் எனும் போராட்டம் பற்றிய மையத்தைக் கொண்டுள்ளன . 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நூல் 2018 ஆம் ஆண்டு ஜேசிபி எனும் இலக்கிய விருதைப் பெற்றது . இதன் மையம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி , வன்முறை , மக்கள் போராட்டத்தைப் பற்றியது . இதனை இந்தியாவுக்கும் கூட நினைத்துப் பார்க்கமுடியும் . ஏனெனில் இங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொரோனாவை விட தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் . தற்போதைய இந்திய அரசியல் பொருளாதார சூழல் உங்களுக்கு எழுதுவதற்கு உதவுகிறதா? இன்று இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமை பற்றிய நூல்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் வெளிவரும் . நான் தற்போது கேரளத்திலிருந்து மலேசியாவிற

முக்கியமான எழுத்தாளர்கள்!

படம்
giphy உலகில் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் அணிவரிசை இது.  21ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர்கள் இவர்கள். இசபெல் அலாண்டே  1982ஆம் ஆண்டு இசபெல் அலாண்டே எழுதிய ஹவுஸ் ஆஃப் ஸ்பிரிட்ஸ் என்ற நாவல் இவரின் பெயரை உலகிற்குச் சொன்னது. மேஜிக்கல் ரியலிசம் என்ற வகையில் தாத்தாவுக்கு பேத்தி எழுதும் கடிதமாக நாவல் விரியும். இந்த வடிவத்தில் சிலியின் வரலாற்றை இந்த நூல் பேசியது.  இதற்கடுத்து 2002இல் வெளியான சிட்டி ஆஃப் பீஸ்ட் என்ற நாவல் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற நூலாகும். மார்க்கரேட் அட்வுட்  கனடிய எழுத்தாளர் மார்க்கரேட் கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவர். இவரது புகழ்பெற்ற நூல்கள்  " Oryx and Crake " (2003), "The Handmaid's Tale" (1986), and "The Blind Assassin" (2000).  ஜொனாதன் ஃபிரான்சன் குடும்ப உறவுகள், சமூக விமர்சனம் என்றே இவரது நாவல்கள், கட்டுரைகள், நியூயார்க்கரில் எழுதும் பத்தி எழுத்துகள் அமைந்துள்ளது. தி கரக்ஷன்ஸ் என்ற நாவல் 2001ஆம் ஆண்டு தேசிய புத்தக விருது வென்றது. இயான் மெக்ஈவன் இவர் எழுத