இடுகைகள்

டெல்லி அரசு - மொபைல் சகாயக்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடு தேடி வரும் டெல்லி அரசு!

படம்
வீடு தேடிவரும் அரசு சேவை! – அண்மையில் டெல்லி மாநில அரசு, 40 அரசு சேவைகளை மக்களின் வீடு தேடி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ரூ.10 கோடி   ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் சமூகநலத்திட்டங்கள், வருவாய், போக்குவரத்து, உணவுப்பொருட்கள், தொழிலாளர் துறை, குடிநீர் வாரியம் ஆகியவற்றுடன் நூறுவித அரசு சேவைகளை இவ்வாண்டுக்குள் வழங்க முயற்சித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சொல்லும் திட்டத்தின் ஐடியா, மக்களிடமிருந்து பிறந்திருக்கிறது.   அரசு அலுவலகங்களுக்கு கையெழுத்து வாங்க, பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு என அலைந்து, லஞ்சம் கொடுத்த நொந்துபோன இருபது லட்சம் மக்கள் அரசுக்கு கொடுத்த புகார்மனுக்கள்தான் ஹோம்சர்வீஸ் சேவைகள் தொடங்கப்பட காரணம். பிறப்பு சான்றிதழ்கள் தேவையெனில், 1076 என்ற ஹெல்ப்லைனுக்கு அழைத்து எந்த துறையில் உதவி வேண்டுமோ அதனைக்கூறவேண்டும். உங்களுக்கு தனி எண் செயல்படுத்தப்பட்டு உடனே மொபைல் உதவியாளர்களுக்கு (சகாயக்) முகவரி, சேவை விவரம் சென்றுவிடும். அவர்கள் டேப்லட்டுடன் உங்கள் வீட்டுக்கு வந்து ஆவணங்களை புகைப்படம் எடுத்து சரிபார்த்து அடுத்தடுத்த அலுவலக விசிட்களுக்க