ஆட்டோ டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்!
டாக்டர் ஹெ்ஸ் ராட்டி நோயியல் மருத்துவர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் பாதுகாப்பானவையா ? சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவின் பொதுவான விருப்பம் . பொதுவாக சிறு நகரங்கள் , கிராமங்களில் இப்படித்தான் சிரிஞ்சுகளை பயன்படுத்துகிறார்கள் . பயன்படுத்திய சிரிஞ்சுகளை மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதும் கிடையாது . இந்த சிரிஞ்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் சந்தையில் விற்கப்படுவது உண்டு . இதனால் ரத்தம் சார்ந்த நிறைய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன . இதற்கு ஒரே தீர்வு மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கவேண்டும் . இப்படி இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மருத்துவமனைகள் பின்பற்றி வருகின்றன . இப்படி என்னென்ன நோய்கள் ஏற்படும் ? எய்ட்ஸ் , மஞ்சள்காமாலை , ரத்தம் தொடர்பான பிற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதற்கு என்ன தீர்வு ? ஆட்டோ டிசேபிள் சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும் . அனைத்து மாநில அரசுகளும் இதனை பயன்படுத்தவேண்டும் . உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு விதிமுறைப்பட