இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த சாதி மாப்பிள்ளை கிடைத்தாரா- எவரிக்கி செப்போது படம் எப்படி?

படம்
எவரிக்கி செப்போது - தெலுங்கு இயக்கம் பசவா சங்கர் ஒளிப்பதிவு - விஜய், தேஜா, சத்யஜித் இசை - சங்கர் சர்மா கதை - சாதிதான். உடனே நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். நாங்களும் அப்படித்தான் ரியாக்ஷன் கொடுத்தோம். முதுகெலும்பை உடைத்து விட்டார்கள். ஆஹா நாயகி ஹாரதி - கார்கேயி யெல்லப்பிரகடா. படம் முழுக்க இவர் கொடுக்கும் ரியாக்சன்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பிரமாதப்படுத்தி இருக்கிறார். காதலனை பொது இடத்தில் சாதிகேட்டு கத்துவதும், தன் சாதியில்லை என்றதும் லவ் செஞ்சால் டைம் வேஸ்ட் என பேசும் வசனத்தில் முத்திரை பதிக்கிறார். இதற்கு இணையாக ஹரி - ராகேஷ் நடித்திருக்கிறார். காதலி ஒவ்வொரு முறை கோபத்தில் எரிமலையாகும்போதும் அன்டார்டிக் ஐஸாக குழைந்து பேசி கூல் செய்து நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக கதையை நடத்தி செல்பவர் ஹாரதியின் தந்தை. சாதிப்பித்து பிடித்தவராக, மகளின் பள்ளி நண்பர்களை கூட சொந்த சாதியில் தேடச்சொல்லி மிரட்டுகிறார். ஐயையோ கதைதான். கான்செஃப்டை நன்றாக பிடித்தவர்கள், அதை சொல்லும்போது இப்படியா இழுப்பது. படம் பார்க்கும்போது நாலு லைட்ஸ் பற்ற வைத்து விட்டு வந்தால

அன்பைக் கற்றுக் கொடுங்கள்- டாடிஸ் ஹோம் 2

படம்
டாடிஸ் ஹோம் 2 இயக்கம் சீன் ஆண்டர்ஸ் கதை சீன் ஆண்டர்ஸ், ஜான் மோரிஸ் இப்பாகத்தில் பிராட், டஸ்டி இருவரும் தங்களது குழந்தைகளை பொறாமையின்றி பராமரிக்க முயல்கின்றனர். ஆனால் விதி விளையாட, பிராட், டஸ்டியின் இரு தந்தைகளும் கிறிஸ்துமஸைக் கொண்டாட வருகின்றனர். இப்போது டஸ்டிக்கு தனி குடும்பம் இருக்கிறது. அவரின் மனைவியின் குழந்தை டஸ்டியை ஏற்க மறுக்கிறது. இதனை டஸ்டி எப்படி சமாளிக்கிறார் என்பதோடு, வரும் தந்தைக்கும் டஸ்டிக்கும் ஏழாம் பொருத்தம். இவர்கள் எப்படி ஒன்றாகிறார்கள், குழந்தைகளிடம் இருக்கும் ஏக்கம் எப்படி தீருகிறது என்பதுதான் கதை. மெல் கிப்சன், டஸ்டியான மார்க் வால்பெர்க்கின் தந்தையாக வந்து பிராடையும் அவரது தந்தையும் ஏக்கமாக பார்க்கிறார்கள். வாழ்க்கையை சிறிது காமெடியாக அணுகும் படம் என்பதால், அனைத்து காட்சிகளும் அப்படியே இருக்கிறது என கூறமுடியாது. பிராடின் தந்தையை அவரது மனைவி விவாகரத்து செய்த விஷயம் அனைவருக்கும் தெரிய வருவது சங்கடமான காட்சி. அமெரிக்காவின் குடும்ப அமைப்பு முறை திரும்ப நம் கண் முன் விரிகிறது. இதில் பிராட் எப்போதும் நிதானமாக அகிம்சை முறையில் பிரச்னைகளை அணுக

கடல் தங்கத்தை மீட்கிறாரா ப்ரூனோ பிரேசில் - லயன்காமிக்ஸ்

படம்
சாக மறந்த சுறா லயன் காமிக்ஸ் ரூ.60 ஓவியர் - வில்லியன் வான்ஸ் - கதை க்ரெக் ப்ரூனோ பிரேசில் அதிரடிக்கும் கதை. அட்டைப்படத்தில் ஹீலியம் பலூன் அதிலிருந்து இறங்குவது போன்ற படம் இருந்தாலும் கதையில் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் இல்லை. நாஜி ஜெர்மனி போரில் ஈடுபட்ட காலத்திற்கு கதை செல்கிறது. போரில் ஈடுபட்ட கப்பல் ஒன்று தங்கத்துடன் கடலில் குறிப்பிட்ட இடத்தில் கவிழ்ந்துவிடுகிறது.அதில் நாஜிப்படையினர், பெட்டி பெட்டியாக தங்கத்தை வைத்திருக்கின்றனர். அது பற்றி செய்தியை ஒருவர் கசியவிட உலகநாடுகள் அனைத்தும் உளவுத்துறையை உசுப்புகின்றன. கடலில் கிடக்கும் தங்கத்தை எடுக்கும் முயற்சிகள்தான் கதை. அமெரிக்காவில் நடக்கும் கார் விபத்து இதற்கு தூண்டுதலாகிறது. விபத்தில் காரில் பயணிக்கும் இருவர் பேருந்தோடு மோதி அங்கேயே இறந்து விடுகின்றனர். அதில் தப்பிப்பவர் முன்னாள் நாஜி தளபதி. இதுபோதாதா ப்ரூனோ பிரேசில் இந்த விவகாரத்தில் உள்ளே நுழைய? கதை தொடங்குகிறது. அங்கு உள்ள உளவுத்துறையினர் போட்டியைத் தவிர்க்க பிற நாட்டு ஆட்களை போட்டுத்தள்ளத் தொடங்குகின்றனர். அதில் முதல் முயற்சியில் தப்பிக்கும் ப்ரூனோ பிரேசில்,

எனக்கென தனி கொலை உலகம் - டீன் கோரல் கோரதாண்டவம்!

படம்
ராணுவத்தில் டீன் கோரல் அசுரகுலம் டீன் கோரல் இளைஞர்களை செக்சுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த டீன் கோரல், மொத்தம் 27 பேரை வைகுண்டம் அனுப்பி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். பிள்ளைகள் காணாமல் போனால் போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி வருகிறதா? அங்கிருந்த போலீஸ் எண்ணிக்கை மிக குறைவு. இருபது லட்சம் மக்களுக்கு 2,200 போலீசார்தான். எனவே,  காணவில்லையா கண்பிடிப்போம் என எதிர்கால வார்த்தைகளைப் போட்டு பதில் சொல்லி பெற்றோர்களை அனுப்பிவிட்டு ரெகுலர் வேலைகளைப் பார்த்தனர். அவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், முதலிலேயே ஹென்லியை பிடித்திருக்கலாம். நிறைய பேர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். இப்போது நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? கோரலின் கதையைப் பார்ப்போம். டெக்சாசின் மேற்குப்பகுதியிலுள்ள ஹூஸ்டனில் வாழ்ந்த டீன் கோரல் நேர்த்தியான ஆள். தனது தாய் நடத்தி வந்த மிட்டாய்கடையில் மிட்டாய்களை தயாரித்து பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பான். இதனால் மிட்டாய்காரன் என அப்பகுதியில் கோரலுக்குப் பெயர். 1973 ஆம் ஆண்ட

நினைவுகளைத் தேடும் குற்றவாளி! - ரத்தப்படலம் காமிக்ஸ் அதிரடி!

படம்
ரத்தப்படலம்! 1-18 முத்து காமிக்ஸ் ரூ. 200 அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வருவது எனும் போட்டியில் நடக்கும் பல்வேறு துரோகங்கள், கொலைகள் ஆகியவற்றை ஒட்டி உருவான கதாபாத்திரம்தான் பதிமூன்று. முதல் காட்சியில் தலையில் சுடப்பட்டு வயதான பெண்மணியால் காப்பாற்றப்படுபவர்தான் நாயகன். தான் யார் என்று அறிய முயற்சிக்கும்போது, அவர் யார் என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. இவரைக் கொல்ல சிஐஏ, எஃப்பிஐ, மங்கூஸ் எனும் கூலிக்கொலைகாரன் ஆகியோர் பலரும் தேடி வருகின்றனர். அதேசமயம், பதிமூன்று என்பவருக்கும் சிஐஏ தலைவரான ஜியோர்டினோ என்பவருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவர் பதிமூன்றை ஏதோ ஒரு வழியில் துரத்திக்கொண்டே இருக்கிறார். அந்த உறவு என்ன? பதிமூன்று என தோளில் அச்சிடப்பட்டிருப்பதன் பொருள், அவர் மனைவியாக சொல்லப்படும் கிம் என்னவானாள், வாலி ஷெரிடன் கொலைக்கு காரணம் என அனைத்து மர்மங்களும் பதினெட்டு அத்தியாயங்களில் விடுவிக்கப்படுகிறது. எந்த அத்தியாயங்களையும் படிக்காமல் உங்களால் இறுதிப்பகுதியை எட்ட முடியாது. எனவே எடுத்தவுடனே கிளைமேக்ஸை படிக்க முயற்சிக்காதீர்கள். சிலந்திவலை போன்ற காமிக்ஸ் இது. எந்த இட

உலகை மாற்றிய ஃபைபர் ஆப்டிக்ஸ்!

படம்
தெரிஞ்சுக்கோ ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்தான் இன்று நீங்கள் மும்பைக்கு அனுப்பும் இமெயிலை நொடியில் கொண்டுபோய் சேர்க்கிறது. இங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பினாலும் சேர்க்கும் தொழில்நுட்பம் அதேதான். அந்தளவு தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒற்றை ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வழியாக 25 ஆயிரம் போன் அழைப்புகள் செல்கின்றன. ஃபைபர் ஆப்டிக் கேபிளின் உள்விட்டம் 9 மைக்ரான்கள் ஆகும். இதன் வெளிப்புறம் 125 மைக்ரான்கள் என அமைந்துள்ளது. சீனாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வீடுகளையும் அலுவலகங்களையும் இணைக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் நாற்பது நாடுகள் இணைந்துள்ளன. இதில் தோராய தரவிறக்கவேகம்  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் இடம் 25. டோக்கியோ ஆஸ்லோ, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் மாத இணையக்கட்டணம் 25 முதல் 40 டாலர்கள் வரை உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுக்க நாடுகளிடையே 80 சதவீத டேட்டா போக்குவரத்தை ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலமே நடைபெறுகிறது. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் டேட்டாவின் வேக அளவு 80 மில்லி செகண்ட்ஸ். நன்றி - க்வார்ட்

தந்தைகளுக்கிடையே உரிமைப் போராட்டம் - டாடிஸ் ஹோம் 1

படம்
டாடிஸ் ஹோம் -2015 ஆங்கிலம் இயக்கம் - சீன் ஆண்டர்ஸ் கதை - பிரையன் பர்ன்ஸ் திரைக்கதை - சீன் ஆண்டர்ஸ், பிரையன் பர்ன்ஸ், ஜான் மோரிஸ் இசை - மைக்கேல் ஆண்ட்ரூஸ் அமெரிக்க குடும்ப முறையில் இருக்கும் சிக்கல்கள்தான் கதை. திருமணம் செய்து பிரிந்து மீண்டும் திருமணம் செய்து என பயணிக்கும் அவர்களின் திருமண முறையால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை பேசுகிற படம் இது. வில் ஃபெரல் படத்தில் நடிகராக பின்னி எடுத்திருக்கிறார். அதோடு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். தன்னுடைய மனைவியின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக நினைக்கிறார். ஆனால் அவர்கள் இவரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அந்த மனநிலையை மாற்ற முயல்கிறார். அப்போது, அக்குழந்தைகளின் உயிரியல் தந்தை அங்கு வர, இரு தந்தைகளுக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல்கள்தான் கதை. மார்க் வால்பெர்க் உயிரியல் தந்தை என்ற பெருமிதம் காட்டினாலும், குழந்தைகளுக்கான செய்யும் வேலைகள், பொறுமை, நிதானம் என்று வரும்போது ஆஹா... என பேக்கடிக்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தத்தளிக்கிறார்.  இவர்களின் கோபதாபத்திற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் லிண்டா

பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!

படம்
open நரசிம்மராவ் வினய் சீத்தாபதி தமிழில் - ஜெ.ராம்கி கிழக்கு பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது. அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர். ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர். இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்

போதை, வல்லுறவு கொலை - எலக்ட்ரீசியன் முதல் சீரியல் கொலைகார பயணம்!

படம்
டீன் கோரல் சிறுவயதில்.... அசுரகுலம் டீன் கோரல் கோரலுக்கு எதுவுமே நீட்டாக இருக்கவேண்டும். உடை முதல் தான் செக்ஸ் வைத்துக் கொண்டு கொல்லும் இளைஞர்கள் முதற்கொண்டு அப்படித்தான். ஃபிளைவுட் டேபிளில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதில் தான் வெட்டும் சதையின் துணுக்குகள், மலம், வாந்தி எல்லாம் வந்து விழ வேண்டும் என நினைப்பார் கோரல். அனைத்தும் யாருக்கும் தெரியாமல்தான் நடந்து வந்தது. கோரலும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு அசுர ஆட்டம் ஆடினார்.  ஆனால் நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி.  காவல்நிலையம். டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்த வந்த போன் அழைப்பு அது. இளைஞன் ஒருவன் பதற்றத்துடன் பேசினான். இங்கு நான் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டேன். சீக்கிரம் வாங்க சார் என்ற அவனின் குரலில் வழிந்த பதற்றத்தை போலீசார் விரைவில் உணர்ந்தனர். போனை வைத்துவிட்டு சைரன் ஒலிக்க காரை கிளப்பினர். முகவரி? 2020 லாமர் ட்ரைவ். அவர்கள் அங்கே சென்று சேரும் முன், போனில் அழைத்த ஹென்லி பற்றி பார்த்துவிடுவோம். ஹூஸ்டன் என்ற பகுதி, நகரின் குற்றங்கள் மலிந்த இடம். அங்குதான் கோரல் வாழ்ந்து வந

தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!

படம்
giphy.com அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ

சீனாவிடம் கற்போம் - விவசாயத்தில் சிறக்கும் டிராகன் தேசம்!

படம்
giphy.com விவசாயத்தில் சீனாவிடம் இருந்து என்ன கற்கலாம்? இனி இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்டில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மூழ்கிவிட்டது. அதன் பட்ஜெட்டை விட இந்தியாவின் பட்ஜெட் அதிகம், வளர்ச்சிக்கான வேகமும் அதிகம். சீனாவைப் பார்ப்போம். சீனா, இந்தியர்களை விட குறைவான நிலத்தில அதிகளவு விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கியிருக்கிறார்கள். நாம் 407 பில்லியன் உற்பத்தி என்றால் சீனர்கள் 1367 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறார்கள். சீனர்கள் 41 சதவீத நிலத்திலும், இந்தியர்கள் 48 சதவீத நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்கள். காரணம் சீனர்கள் ஆராய்ச்சிக்கு மட்டும் 7.8 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றனர்.இந்தியாவில் இதன் அளவு 1.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்புறம் எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்? இந்தியாவில் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் விவசாயத்துறையில் செய்யும் 11.2 ரூபாய், முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று கூறுகிறது. 1990களில் நடந்த தாராயமயமாக்கள் அந்நிய முதலீடுகளை அதிகரித்தது. வியட்நாம் ரேஷரை நாம் பயன்படுத்த வைத்தத

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

நாயைப் போல இறந்தார் ஐஎஸ் தீவிரவாதித் தலைவர் அல் பக்தாதி!

படம்
புஷ் சதாமை ஒழித்தார். பாரக் ஒபாமா, பின்லேடனை தீர்த்து கட்டினார். இந்த வரிசையில் டிரம்ப், அல் பக்தாதியை நாயைப்போல சுட்டு கொன்றிருக்கிறார். நாய் வார்த்தை நாம் கூறியதல்ல. டிரம்பே தன் ஸ்டைலில் சொன்ன வார்த்தை. ஞாயிற்றுக்கிழமை. நாம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த போது, 8 அமெரிக்க  விமானங்கள் ஈராக்கின் விமானத்தளத்திலிருந்து கிளம்பின. அவை நேராக சிரியாவை நோக்கி சென்றன. 70 நிமிஷ பயணத்தில் மேற்கு சிரியாவிலுள்ள பாரிஷா எனுமிடத்தை அடைந்தன. டெல்டா ஃபோர்ஸ் படையின் ஆதரவுடன் அமெரிக்க விமானங்கள் பக்தாதி பதுங்கியிருந்த இடத்தை நோக்கி தாக்கத் தொடங்கின. கமாண்டோக்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அல் பக்தாதி தன் மூன்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தரைக்கு கீழே இருந்த பதுங்குமிடத்திற்கு சென்றார். அவர் தற்கொலை குண்டுகளைக் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கிறாரோ என கமாண்டோக்கள் அஞ்சினர். இதனை அறிய  ராணுவ நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறுதியில் தப்பிக்க முடியாத பக்தாதி, குண்டுகளை வெடிக்க வைத்து தன் மகன்களோடு தற்கொலை செய்துகொண்டார். அல் பக்தாதி கொலைத் திட்டத்திற்

சீரியல் கொலைகாரர்களுக்கான வரையறை!

படம்
unspalsh.com அசுரகுலம் ரத்த தடங்களைத் தேடி சீரியல் கொலைகார ர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன தொடர்பு என முதலில் நாம் தெளிவாக வேண்டும். குடும்பத்திலுள்ள உள்ளவர், தன்னுடைய ரத்த சொந்தத்தைக் கொல்கிறார். என்ன காரணம், சொத்து என போலீஸ் முடிவு செய்து உள்வட்ட விசாரணையில் கேசை மூடிவிடும். ஆனால் சைக்கோ கொலைகாரர்கள் விஷயத்தில் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கவேண்டும். அமெரிக்க அரசின் எஃப்பிஐ, சீரியல் கொலைகார ர்களுக்கு மூன்று கொலைகள் செய்யவேண்டும் என்ற வரையறையை வைத்திருக்கிறது. இன்று அவை மாறிவிட்டன என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று கொலைகள்  என்பது சீரியல் கொலைக்காரர் என அடையாளப்படுத்துவதற்கான முதல் பாய்ன்ட். பின்னர் கொலை எப்படி நடந்தது, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவை இதில் சேர்க்கப்பட்டன. அமெரிக்காவில் இப்போது இனவெறி தூண்டுதலாக துப்பாக்கியை எடுத்து பள்ளிகளிலோ, தியேட்டர்களிலோ சென்று சுடும் பழக்கம் இருக்கிறது. அதனை திரள் கொலைகள் என வகைப்படுத்தலாம். இதில் சீரியல் கொலை என்ற பதம் உதவாது. ஒருவருக்கு மனநலம் பாதித்து அதன் விளைவாக நிறையப் பேரை கொல்கிறார். தனக்கு சரியான சமயத்தில் உதவாத

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?

படம்
giphy.com ஊட்டச்சத்து பற்றாக்குறை! இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும். இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.  குழந்தைக

நீலநிற சீஸ் என்ன செய்யும்?

படம்
மிஸ்டர் ரோனி நீலநிற சீஸை உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமா? சரிவிகிதமான உணவைச் சாப்பிட்டால்தான் உடல் சரியாக இயங்கும். நீங்கள் கூறும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் மட்டும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வதற்கான வழி பிறந்துவிடாது. ஆன்டி பயாடிக் மருந்துகள் கூட இன்று பாக்டீரியாக்களுக்கு எதிராக தேங்கி விட்டன. பாக்டீரியாக்களில் பலவீனமாக உள்ளவற்றை மட்டுமே அவை எதிர்கொண்டு தாக்கி அழிக்கின்றன. பென்சிலினை சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தினால் நீங்கள் சொன்னது போல, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. வயிற்றிலுள்ள நன்மை, கெடுதல் செய்யும் பாக்டீரியா என அனைத்துமே அழியும் விளைவுதான் ஏற்படும். எனவே மருந்தை மருந்தாக பயன்படுத்துவதே நல்லது. நன்றி - பிபிசி

கற்பழிப்பிலும் காட்டிய கருணை - பாபிக்கு ஆப்பு!

படம்
பாபி ஜோ லாங் 3 பாபிக்கு மனைவியிடம் மூன்று முறை இசைவாக செக்ஸ் அனுபவித்தாலும் ஏதோ ஒன்று குறைந்தது. எனவே, அவரிடம் உடலுறவு அனுபவிப்பதைக் குறைத்துக்கொண்டு தனக்கான இரையை வெளியில் தேடத் தொடங்கினார். புளோரிடாவில் உள்ள மியாமி, ஓக்லா ஆகிய ஏரியாக்களைத் தேர்ந்தெடுத்தார். முந்தை அத்தியாயத்தில் சொல்லியிருப்பது போலத்தான். பொருட்களை விற்கும் விளம்பரங்களை உள்ளூர் நாளிதழில் படித்துவிட்டு முகவரியைக் குறித்துக்கொள்வார். பின் நேராக நடையைக் கட்டி, வீட்டைச் சுற்றி நோட்டமிடுவார். பெண்கள் இருப்பது தெரிந்தால் களத்தில் இறங்கிவிடுவார். வீட்டுக்குள் சென்று பொருட்களின் விலை விசாரிப்பார். வலுவான ஆண்கள் இல்லையென்றால் ரைட் என பெண்களை மிரட்டி, கட்டிப்போட்டு முடிந்தளவு வன்புணர்வு செய்துவிடுவார். அவ்வளவுதான். விடுவென கிளம்பி வந்துவிடுவார். இம்முறையில் 1980 -83 வரையில் பதினைந்து வல்லுறவுகளை வெற்றிகரமாக செய்தார். பின்னர் புகார் போலீசுக்குப் போனது.  தீவிரமாக பாபியைத் தேடினர். அதோடு விட்டார்களா?  வான்ட் ஏட் ரேபிஸ்ட் (want ad rapist) என்ற பெயரில் நோட்டீஸ் அடித்து ஒட்டி தேடி வந்தனர். பாபிக்கு இதெல்லாம் சுத்தமா

தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்

படம்
டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை. இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது. காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த

ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஓயின் பாட்டில்களை கிடைமட்டமாக வைப்பது ஏன்? இப்படியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பதால்தான். சும்மா ஜாலிக்காக சொன்னேன். பொதுவாக பாட்டிலை மூடியுள்ள கார்க் தன் ஈரப்பதத்தை இழக்க கூடாது என்பதுதான் கான்செஃப்ட். கிடைமட்டமாக ஒயின் பாட்டிலை வைக்கும்போது அதன் தரம்  கூடுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். பாட்டிலிலுள்ள நொதித்தலும் சீராக நடைபெறுகிறது. நன்றி - பிபிசி

வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது? வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. 1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்த

உண்மையைச் சொன்னால் கொல்வேன் - பாபி மிரட்டல்

படம்
அசுரகுலம் பாபி ஜோ லாங் 1953 ஆம் ஆண்டு மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர் பாபி. பின்னர் தாயுடன் மியாமிக்கு இடம்பெயர்ந்தார். சிறுவயதிலிருந்து மேற்கு நாடுகளில் குழந்தைகளை தனியாக படுக்க வைத்து பழக்குவார்கள். அவர்களின் சுய ஆளுமைக்கு அது முக்கியம். ஆனால் பாபி, பதிமூன்று வயது வரை தாயுடனே தூங்கிப் பழகியவன். தாய் வெயிட்ரஸாக பணியாற்றியவர். அவர் தூங்கிய இடம் பின்னாளில் தாயின் காதலனுக்கு என்றானபோது பாபியின் மனம் உடைந்து போனது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மெல்ல தனியாக தூங்கத் தொடங்கினான். இதற்கிடையில் அவனது உடல்ரீதியான பாதிப்பு பெரியதாக தொடங்கியது. குறிப்பாக பள்ளியில். பாபி சிறுவனாக இருக்கும்போதே அவனுக்கு ஹார்மோன் குறைபாட்டால் மார்புக் காம்புகள் பெரிதாகி ( Klinefelter syndrome ) பெண்கள் போல வளரத் தொடங்கியது. சாதாரணமாக ஆண்கள் படிக்கும் பள்ளியில் லேசாக பெண் சாயலில் இருக்கும் பையன்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதும், மார்பைத் தடவுவதும், புட்டத்தைக் கிள்ளுவதுமாக இருப்பார்கள். இங்கு பாபி இப்படி இருந்தால் சும்மா விடுவார்களா? பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். தொட்டு தடவினர். மார்பை

தினசரி மூன்றுமுறை செக்ஸ், ஐந்துமுறை சுய இன்பம்! - பாபியின் ரூல்ஸ் புதுசு

படம்
மனைவி சிந்தியாவுடன் பாபி ஜோ லாங் அசுரகுலம் பாபி ஜோ லாங் நீங்களே சொல்லுங்கள். உடலுறவு அனுபவிப்பதில் தவறு என்ன இருக்கிறது? அதுவும் பாபி தன் மனைவியிடம்தான் அனுபவித்தார். கல்யாணமான புதிதில் வேகமாக இருப்பவர்கள், பின்னாளில் மெல்ல தளர்வார்கள். எண்ணிக்கை சரசரவென குறையும். குழந்தை பிறந்தபிறகு உடலுறவு கொள்ளும் எண்ணிக்கை இன்னும் குறையும். பிறந்த குழந்தையை தந்தை தூக்கி உடல்மணத்தை நுகரும்போது டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் குறையும் என்கிறது மருத்துவ ஆய்வு. ஆனால் பாபிக்கு நடந்த துரதிர்ஷ்ட விபத்து அனைத்தையும் மாற்றிவிட்டது. தினசரி மூன்று முறை மனைவியிடம் உடலுறவு கொள்வார். பின்னர் ஐந்து முறை சுய இன்பம் அனுபவிப்பார். காரணம் ராணுவப்பணிக்கு பிறகு அவருக்கு நேர்ந்த சாலை விபத்துதான். அதன்பிறகுதான் அமைதியாக இருந்த பாபி ஆக்ரோஷமாக மாறினார். கூடுதலாக உடலுறவு  வேகமும் கூடியதில் பள்ளித்தோழியாக இருந்து புரமோஷன் பெற்று காதல் மனைவியாக மாறிய சிந்தியாவுக்கு மூச்சு வாங்கியது. எத்தனை முறை? இப்படியே போனால் மாதத்திற்கு என கணக்கு போட்டால் சாதனை தம்பதி என இந்தியா டுடே செக்ஸ் சர்வேயில் கட்டுரை போடலாம் அல்லவா? பி

நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?

படம்
தெரிஞ்சுக்கோ! பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள். அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர். கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள். யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது,

காணாமல் போகும் ஸ்டெதாஸ்கோப் - புதிய தொழில்நுட்பங்களின் வருகை!

படம்
giphy.com ஸ்டெதாஸ்கோப் இல்லாத ஒருவரை டாக்டர் என அவரே சொன்னாலும் மக்கள் நம்புவதில்லை. ஆனால் இனி ஸ்டெதாஸ்கோப்பின் தேவை கிடையாது. தொழில்நுட்பம் அந்தளவு வளர்ந்துவிட்டது. வீட்டில் நீங்களே உங்களை சோதித்துக்கொள்ளுமளவு டெக் உலகம் வளர்ந்திருக்கிறது. கூடுதலாக டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப் இதயத்துடிப்பைக் கணிக்கிறது. கையில் இலகுவாக பயன்படுத்தும் புதிய கருவிகளும் மொபைல் போனுடன் இணைத்துப் பயன்படுத்துமளவு வந்துவிட்டன. அமெரிக்காவில் உள்ள பட்டர்ஃப்ளை இன்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கருவியை நோயாளிகளே பயன்படுத்தலாம். இம்முறையில் நாம் நம் உடல்நிலையை படம் எடுத்து மருத்துவருக்கு அனுப்பலாம். அவர் பிரச்னையைப் பொறுத்து உங்களுக்கு சிகிச்சை வழங்குவார். ஸ்கைப்பில் வழங்குவாரா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது அவரவர் வசதியைப் பொறுத்தது. ஸ்டெதாஸ்கோப்பில் நம் நெஞ்சிலும், முதுகிலும் வைக்கும் உலோகப்பரப்பு ஒலியை பெரிதுபடுத்திக் கொடுக்கிறது. இது, மருத்துவர் காதில் பொருத்தியுள்ள கருவியில் கேட்கிறது. மருத்துவப் பயிற்சி பெற்றுள்ளவருக்கு இதன் மாறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். ரெனெ லானெக் என்ற பிரெஞ்சுக்காரர

இந்தியப் படங்களுக்கு ரஷ்யாவில் மவுசு ஜாஸ்தி! - ஆலெக் அவ்தீவ்

படம்
நேர்காணல் ஆலெக் என் அவ்தீவ், ரஷ்ய ஃபெடரேஷன் தலைவர் சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகம் தன் செயற்பாடுகளாக என்னென்ன விஷயங்களைச் செய்துவருகிறது? இந்தியாவும் ரஷ்யாவும் பல்லாண்டுகளாக நெருக்கமான தொடர்புகளிலுள்ள நாடுகள். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விஷயங்களிலும் நாங்கள் இந்தியாவுடன் ஒத்திசைவாக உள்ளோம். கலாசாரத்தின் பக்கம் வருவோம். நாங்கள் 1980களில் படித்த பல்வேறு நூல்கள் ரஷ்ய அரசால் மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. எப்படி இதனைச் செய்தீர்கள்? முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் ராதுகா பதிப்பக நூல்களைக் குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான் அப்பதிப்பகங்கள் இன்று இல்லை என்றாலும் அன்று நிறைய நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டு வந்தனர். இன்றும் மொழிபெயர்ப்பதற்கான ஏராளமான இலக்கியச் செல்வம் ரஷ்யாவில் உள்ளது. உள்நாட்டிலும் அவை விலை குறைவாக கிடைக்க காரணம், இன்றும் அரசு அவற்றுக்கு நிதியுதவி அளித்து வருவதுதான். நாங்கள் உயர்கல்வியில் படித்த லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ், மிகாய்ல் சொலோவ்கோவ் ஆகியோரின் நாவல்களில் காட்டிய கலாசாரம் இன்று ரஷ்யாவில் இல்லை அப்படித்தானே? கருத்தியல் என்பது காலம

புதிய இசை பிடிக்காமல் போகும் வயது எது? - உளவியல் ஆராய்ச்சி

படம்
மிஸ்டர் ரோனி முப்பது வயதுக்கு மேல் புதிய இசை பிடிக்காமல் போவது ஏன்? நல்ல கேள்வி. எங்கள் அலுவலகத்தில் கூட 53 வயதான சீனியர் ரஹ்மானையும் அனிருத்தையும் திட்டி ராஜ விசுவாசத்தை நிரூபித்து வருகிறார். இதற்கு காரணம், மூளையில் இருக்கிறது. இயல்பாகவே நாம் திருவிழா, சாவு, மயானக் கொள்ளை என பல்வேறு இடங்களிலும் இரண்டு சாமி பாட்டுகளைப் போட்டு பின்னர் அதிரடியாக சினிமா பாட்டுகளுக்கு இறங்கி வந்துவிடுவோம். இதனால் நம் 13 -14 வயதில் குறிப்பிட்ட இசை வகைக்கு செட் ஆகிவிடுவோம். இருபது வயதில் ரஹ்மான்தான்டா லெஜண்டு, ஜிப்ரான்லாம் அவரோட கால் தூசுக்கு சமம்டா என சண்டை இழுக்கும் அளவுக்கு தரை லோக்கலாக மாறிவிடும். இயல்பாகவே இருபதுகளில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதனால் யூட்யூப்பில் வைரலாகும் அனைத்தையும் நாம் கேட்போம். நண்பர்கள் ஹேங்அவுட்டில் கிடைக்கும் நண்பர்களின் பரிந்துரைகளையும் லிங்குகளையும் ஏற்று ரசிப்போம். ஆனால் 30 வயது ஆகும்போது அனைத்தும் மாறிவிடும். அதற்குப் பிறகு, வேலை, குடும்பம் என நச்சு வேலைகள் மூளையெங்கும்  நிறைந்துவிடும்.  அதற்குப் பிறகு நாம் நினைத்தாலும் புதிய விஷயங்களுக்குச் செல்ல ம

துண்டு துண்டாக வெட்டி.. சமைத்து - ஆல்பிரெட் ஃபிஷ் அட்டூழியம்!

படம்
புன்னகையுடன் ஆல்பிரெட் ஃபிஷ் ஆல்பிரெட் ஃபிஷ் ஃப்ராங்க் ஹோவர்டு என்ற பெயரில் ஆல்பிரெட், திருமதி டெலியா பட்டின் வீட்டுக்குச் சென்றார். எதற்கு என்கிறீர்களா? அவர்தான் தன் மகன் எட்வர்ட் வீட்டு வேலை செய்வான் என விளம்பரம் கொடுத்திருந்தார். எட்வர்டை வீட்டுவேலை என்று சொல்லி கூட்டிவந்து சித்திரவதை செய்யலாம் என ஆல்பிரெட்டுக்கு தோன்றியது. ஆனால் திருமதி டெலியாவின் வீட்டுக்குச் சென்றதும், அவரது எண்ணம் மாறிவிட்டது. காரணம், அங்கு டெலியாவின் பின்னால் ஒட்டி நின்ற கிரேசி பட் என்ற பத்து வயது சிறுமிதான். உடனே தன்னுடைய சகோதரன் வீட்டில் பார்ட்டி ஒன்று நடக்கிறது. உங்கள் மகன் சில நாட்கள் கழித்து என்னுடைய பண்ணைக்கு வரட்டும். இப்போது உங்கள் மகளை நான் பார்ட்டிக்கு அழைத்து சென்றுவிட்டு கொண்டு வந்து விடுகிறேன் என்றார் ஆல்பிரெட். அதன் பின்னாலுள்ள பயங்கரத்தை திருமதி டெலியா உணரவில்லை. அப்புறம் என்ன போன கிரேசி போனவர்தான். கிரேசியை தன் வீட்டுக்கு நேராக அழைத்துச்சென்றார் ஆல்பிரெட். அங்கு சென்று, வீட்டுக்குள் நுழைந்தார். எட்வர்ட் பட்டுக்கு ரெடி செய்த சித்திரவதை அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு மேல்

சமூகச்செயற்பாடுகளுக்கு தனியார் அளித்த நிதியுதவி!

படம்
giphy.com அரசு மட்டுமல்ல, இன்று தனியாரும் மக்களின் நலனில் பங்கெடுக்கிறார்கள். சட்டத்தின் நிர்பந்தம் இருக்கிறதுதான். ஆனாலும் அதிலும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி திட்டங்களை செயற்படுத்துவதில் தனியாரின் பங்கு முக்கியமானது. மிகச்சில ஆண்டுகளில் அரசு ஒழுங்காணையம் போலத்தான் செயற்பட விருக்கிறது. உலக வர்த்தக கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தம் அப்படி இருக்கிறது. 2014-18 காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்திற்காக செலவழித்த தொகை 13 ஆயிரம் கோடி ரூபாய்.  இதன் விளைவாக இத்துறை 12 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.  தனியார் நிறுவனங்கள் போக, தனி நபர்கள் மட்டும் 43 ஆயிரம் கோடி ரூபாயை சமூக செயற்பாடுகளுக்காக செலவிட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் அளிக்கும் நிதியுதவியை ஒப்பிட்டால் 21 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. 2014 -18 ஆம் ஆண்டில் தனிநபர் நிதியுதவி 60 சதவீதமாக உள்ளது. அதாவது, இந்த பங்கு சமூக செயற்பாடுகளுக்கு மட்டுமேயானது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சாதனை மட்ட

என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்

படம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம். ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம். 2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான். மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உ

பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

படம்
பசுமைப் பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளுக்குப் பதிலாக அரசு பசுமைப்பட்டாசுகளை அறிமுகம் செய்திருக்கிறது. உண்மையில் பசுமைப் பட்டாசுகளின் சிறப்பு என்ன? இதில் சாதாரண பட்டாசுகளை விட மாசுபடுதல் அளவு பிஎம் 2.5 எனும் அளவுக்கு இருக்கும். பட்டாசு தயாரிப்பில் பயன்படும் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஜியோலைட் எனும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களாக சிஎஸ்ஐஆர் என்இஇஆர்ஐ ஆகியவை பசுமைப் பட்டாசுகளுக்கான ஒன்பது மூலக்கூறு கலவையை உருவாக்கியுள்ளன. இவை 30 சதவீதம் மாசுபடுதலைக் குறைக்கும். இதில் ஒலி, ஒளி சந்தோஷம் குறைவுபடாது. இந்தியாவில் பட்டாசுகளுக்கான சந்தை மதிப்பு 1800 கோடி. இவற்றின் தேவையை சிவகாசி பட்டாசுகள்தான் தீர்த்து வைக்கின்றன. இந்திய சந்தையில் சிவகாசியின் பங்கு 95 சதவீதம். இந்தியாவிலுள்ள எட்டு ஆய்வகங்கள் பசுமைப்பட்டாசுகளுக்கான மூலக்கூறு கலவையை ஆய்வு செய்து தயாரித்துள்ளன. எந்த பட்டாசில் என்ன மாதிரியான ஆய்வுக்கலவை உள்ளது என்பதை க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பார்த