இடுகைகள்

போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்

படம்
  விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.  நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...

மீண்டும் அணுஉலைகள்!

படம்
  மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...

தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து போராடும் அப்பாவி மனிதவளத்துறை அதிகாரி!

படம்
  ஜானி கீப் வாக்கிங் சீன திரைப்படம் யூட்யூப் ஜானி, நட், போல்ட், ஸ்க்ரூ என தயாரிக்கும் பெரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்தாலும் அவனுக்கு செல்வாக்கான ஆட்கள் பின்புலம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அவனுக்கு நல்ல பெயருண்டு. ஜானி சீனியர் பிட்டர். எந்த வேலையாக இருந்தாலும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அவன் மனைவி, கணவனுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லையென சண்டை போட்டு விவாகரத்து செய்துவிட்டு போய்விடுகிறாள். அதற்குப் பிறகு அவனுக்கு நண்பர்கள்தான் உலகம். அப்படி இருப்பவனுக்கு திடீரென நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலை செய்ய பணி இடமாற்ற ஆணை வருகிறது. ஜானிக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு நகருக்கு கிளம்புகிறான். உண்மையில் அந்த பணி ஆணை, இன்னொருவருக்கு வழங்கவேண்டியது. தவறுதலாக அவனுக்கு வந்துவிடுகிறது. ஜானி, தலைமையகத்திற்கு செல்கிறான். அங்கு அவனுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை அளிக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. அவன் சீனியர் பிட்டர். அவனை எதற்கு...

கிளர்ந்தெழு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
 ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ் வேர்ட்ஸ், விவலியோ, பாரோபாக்ஸ், டோலினோ, பேக்கர் அண்ட் டெய்லர், க்ளவுட் லைப்ரரி, ஓவர் ட்ரைவ், பேலஸ் மார்க்கெட் பிளேஸ் ஆகிய வலைத்தளங்களில் கிடைக்கும்  கிளர்ந்தெழு (kilarnthelu)       https://books2read.com/u/m2D611

தொழில்நுட்பத்தை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் எப்படி பயன்படுத்துகின்றன?

படம்
          தொழில்நுட்பம் என்பது ஒருவரை குறிப்பிட்ட செயலை செய்யவைக்கிறது என்று கூற முடியாது. ஆனால் செய்யும் செயல்பாட்டை சற்று எளிமைபடுத்தி வேகமாக செய்யலாம். இணையம் வந்தபோது இந்தியாவின் வடக்குதேச தற்குறிகள், வெளிநாட்டினரின் நிர்வாண படங்களைக் கேட்டு சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தனர். ஆக, தொழில்நுட்பம் என்பது உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதை நீங்கள்தான் தாழ்ந்துபோகாமல் காக்கவேண்டும். இப்போது விமானச்சேவை விலை குறைவாக வந்துவிட்டதால், வடக்குதேச தற்குறிகள் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு பொது இடங்களில் அநாகரிகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். உலகநாடுகளில், இந்தியா என்ற நாட்டிற்கு பெரிய நல்லபெயர் கிடையாது என்பதால், வடக்குதேச தற்குறிகளின் செயல்களால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், நேர்மையாக படித்து சென்று அமைதியாக வேலை செய்பவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ஒன்றியத்தின் பெயரைக் கூறாமல் தெற்குதேசத்திலுள்ள மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் மனம் சரியான ...

சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
              அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து. நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல. லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந...

மாநில பொருளாதார நலனுக்காக கனவு கண்ட லட்சியவாதித் தலைவர்! - புத்ததேவ் பட்டாச்சார்ஜி - அஞ்சலி

படம்
  அஞ்சலி புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1944-2024 மேற்கு வங்கத்தின் இடதுசாரிக்கட்சி, தனது முக்கியமான தலைவர்களில் ஒருவரான புத்ததேவை இழந்திருக்கிறது. அவருக்கு மனைவி மீரா, மகன் சுசேட்டன் ஆகியோர் உண்டு. மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று முதல்வராக பதவி வகித்தார். 2000-11 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்த மாநிலமாக பல்வேறு முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக மாற்ற கனவு கண்டார். ஆனால் அக்கனவு நிறைவேறவில்லை. புத்ததேவின் இறப்பு முக்கியமான காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர் முதல்வராக பதவியேற்றது இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.... 1977 ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையின் கீழ் இடதுசாரி கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது. அன்றைய காலம் அரசியல் சிந்தனையாளர்களுக்கானது. பல்வேறு அரசியல் தத்துவவாதிகளின் கொள்கை, கோட்பாடுகள், மேற்கோள்கள், செயல்பாடுகள் என அரசியல்தளம் மாறியிருந்தது. இப்படியான சூழலில் வளர்ந்து வந்த புத்ததேவ் கவிதைகளை எழுதினார். புத்தக திருவிழாக்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். காப்ரியல் கார்சியா மார்கேஸ் நூல்களை மொழி...

உரிமைகளைக் காக்க, கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த தெருக்களில் இறங்குவோம்!

படம்
             தெருக்களில் இறங்குவோம்! நம் அனைவரிடமும் உள்ள சிடுமூஞ்சி மாமா ஒருவர் இந்தியா எவ்வளவு மோசமானது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆர்.டி.ஓவிலிருந்து நியாயவிலைக்கடை, நகராட்சி வரை ஒவ்வொரு அரசு அமைப்பும் லஞ்சம் பெறுவது குறித்து நம்மிடம் கூறுகிறார். உடைந்துபோன சாலைகள், சீர்கெட்டுப்போன அரசுப் பள்ளிகள், மோசமான கல்வி என தனது கூற்றுக்கு பலபுறமும் ஆதரவு தேடிக்கொள்கிறார். அவரது தரப்பு சரியாக இருக்கிறபோது, அவரிடம் வாதம் புரிவது மிக கடினமானதாக இருக்கிறது. சில விஷயங்கள் வேலை செய்யாது; நீதி கிடைப்பதில்லை; அதிகாரம் பேசுகிறது; சமநிலை அழிந்துபோனது. அனைத்தும் கேட்க சிரமமாக, கசப்பாக இருந்தாலும் உண்மை அவையாகத்தான் இருக்கிறது. ஒத்துக்கொள்ள மனமில்லை என்றாலும் அதுவே நிஜம்.  மேலும் மாமா கூறுவார்: இங்கு எதுவும் மாறப்போவதில்லை. நமது சமூகம் சரிசெய்யமுடியாத அளவு பாதிக்கப்பட்டு இந்தியாவே துக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாக விளக்குவார். சிடுமூஞ்சி மாமா அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி மோசமான மனிதர்கள் என முத்திரை குத்தி நாட்டை கீழே தள்ள திட்டத்தோடு யாரோ ஒ...

வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!

படம்
            வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே! சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது. சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவ...

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரிய...

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எத...

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை த...

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

படம்
                  போராட்டத்தின் வீழ்ச்சி 2010 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம் . அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன . இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது . அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது . இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன . குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும் . துருக்கி , உக்ரைன் , ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன . சூடான் , ஈராக் , அல்ஜீரியா , ஆஸ்திரேலியா , ஃபிரான்ஸ் , இந்தோனேஷியா , லத்தீன் அமெரிக்கநாடுகள் , இந்தியா , லெபனான் , ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின . மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர் . போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர் . போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின . புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன . போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான் . ஆனால் , போராட...