இடுகைகள்

வாசனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

படம்
  பேருந்தில் ஏறும்போதே வாசனையின் தாழியில் வழிதவறி விழுந்தேன் மெல்ல மெல்ல நாசிகளில் நிரம்பிய வாசனை ஒரு பெண்ணின் உடலிலிருந்து என தோன்றியபோது.. நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.   தீராத வாசனை திசையெங்கும் அலைக்கழித்தது திடீரென வாசனை வற்றிப்போனது மெதுவாக குறைந்த வாசனை நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி ஓடத் தொடங்கினேன். கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும் முன்னே போய்க்கொண்டிருந்தாள். தீரா வாசனை அவளுடனே சென்று கொண்டிருந்தது முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள் நான் நாசியாக…  கவிதை- குமார் சண்முகம் படம்  - பிக்ஸாபே

மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

படம்
    கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம். இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது   என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.   இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன. கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால்,

வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

படம்
  மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா? பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம். 1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு அம

வாசனையையும் சுவையையும் அறியும் சுவாரசிய சோதனை!

படம்
  உணர்வுகளோடு விளையாடு! தேவையான பொருட்கள் வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை,மாதுளை, கண்களைக் கட்டும் துணி, நண்பர் ஒருவர் செய்யவேண்டியது 1. மேற்குறிப்பிட்ட பழங்களில் இரண்டை(வாழைப்பழம், ஆப்பிள்) எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றை முகர்ந்து பார்க்கவேண்டும். இன்னொரு உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இச்செயலை செய்யும்போது உங்கள்  கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். நண்பர் தான் உணவுப்பொருட்களை எடுத்துக் கொடுப்பார். தொடங்கலாமா? 2. உங்கள் நண்பரை அழைத்து கண்களை இறுக கட்டச்சொல்லிவிடுங்கள். அடுத்து அவர் ஒரு உணவுப்பொருளை (வாழைப்பழம்) உங்களுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அதேசமயம், இன்னொரு உணவுப்பொருளை (ஆப்பிள்) மூக்கில் அருகில் நீங்கள் அதனை வாசனையை அறியும்படி பிடிக்கவேண்டும். 3. மூக்கால் உணரும் வாசனை, உண்ணும்போது உங்களுக்கு தெரிய வரும் உணவுப்பொருளின் சுவை இரண்டையும் நீங்கள் கூறவேண்டும். இச்சோதனைகளை உணவுப்பொருட்களை மாற்றி செய்யலாம்.  கற்பது இதைத்தான்! பொதுவாக ஒருவருக்கு மூக்கால் முகரும் திறன் இல்லாதபோது பசி உணர்வு தூண்டப்படாது.  தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வாசனைகளை உணரும் திறனை இழப்பதற்கு அனோஸ்மியா (Anosmia)

போன்சாய் மரங்களின் இயல்பு, வாசனை உணர்த்துவது என்ன? - வினோத ரச மஞ்சரி

படம்
போன்சாய் மரங்கள், சிறு தொட்டியில் வளர்க்கும்படியானவை. இவற்றை சாதாரணமாக வளர்த்தால் பெரிய மரமாகும் வாய்ப்புண்டு. ஆனால் அதன் வளர்ச்சியை சிறு தொட்டியில் கட்டுப்படுத்துகின்றனர். போன்சாயின் வேர்கள், தொட்டிக்குள் குறிப்பிட்ட அளவு வளர்கின்றன. அவற்றின் தண்டு, கிளை ஆகியவையும் பெரிய மரங்களைப் போன்ற தன்மையில் மினியேச்சர் வடிவில் உள்ளன.  வாசனைகளை முகர்ந்ததும் அது இனிமையானதா, ஆபத்தானதா என்று நாம் யோசிப்பது நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களை வைத்துத்தான். சமையல் எரிவாயு கசியும்போது, நாம் முகரும் வாசனை மோசமானது அல்ல. ஆனால் அதை ஆபத்தானது என உடனே உணர்கிறோம்.  நாம் முகரும் வாசனை மிகவும் திடமாக இருந்தால், அதனை ஆபத்தோடு இணைத்து பார்த்து எச்சரிக்கையாவது மனித இயல்பு.  எறும்புகளுக்கு நுரையீரல் இல்லை. எறும்புகள் மட்டுமல்ல பல்வேறு பூச்சிகளும் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இதன் பெயர், ஸ்பைராகில்ஸ் (spiracles).  மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும்போது, நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முன்னதாக பார்வை மங்குவது, குமட்டல், வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மன அழுத்தம், வலி ஆகியவை ம

பறவைகள் வாசனையை வைத்துதான் உணவு தேடுகிறதா? - அறிவியல் நூல்கள் அறிமுகம்

படம்
  சீக்ரெட் பர்ஃஃப்யூம் ஆப் பேர்ட்ஸ் டேனியல்லா ஜே வொய்டேகர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 2022 பெரும்பாலான பறவை ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கு சுவாசிக்கும் திறன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் டேனியல்லா தனது ஆராய்ச்சி வழியாக பறவைகளுக்கு வாசனை அறியும் திறன் உண்டு என்று சொல்கிறார். மேலும், உணவுகளை கண்டுபிடிக்கவும், இணை சேரவும் கூட வாசனைகளை பயன்படுத்துவாக சொல்லுகிறார். எனவே ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள்.  அனிமல் ரிசொல்யூஷன் ரோன் புரோக்லியோ மின்னசோட்டா பல்கலைக்கழகம் 2022 இதில் ஆங்கில பேராசிரியர் ரோன், விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கட்டுரைகளாக எழுதியுள்ளார்.  ஜர்னி ஆப் தி மைண்ட்  ஹவ் திங்கிங் எமர்ஜெட் ஃப்ரம் சாவோஸ்  ஆகி ஆகாஸ், சாய் கட்டாம் எப்போதும் நமது மூளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நியூரான்கள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு உண்டு. இந்த நூலில் பிரக்ஞை பற்றிய கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அறியத் தருகிறார்கள். தவளை, மனிதன், குரங்கு ஆகியவற்றின் மூளைகளை படமாக வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.  தி கைஜூ பிரசர்வேஷன் சொசைட்டி ஜான் ஸ்கால்ஸி  2022 இது ஒரு நாவல். நாவலுக்கு முன்னா

கடல்நீருக்கு வாசனை எப்படி வருகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? 1. உலகிலுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை பெறுமா? கடல்நீர் உப்பாக இருப்பதை அறிந்து இப்படி பலரும்கேட்கிறார்கள். மழைபெய்து அதில் பாறைகள் கரைந்து உப்புத்தன்மை கடல்நீரில் கூடுகிறது. உப்பில் சோடியமும், குளோரினும் அதிகமாக இருக்கும். இந்த வேதிப்பொருட்களை  சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் காணலாம். பல நூற்றாண்டுகளாக கடலில் உப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலின் உப்புத்தன்மை சற்று கூடுவது உண்மை. ஆனால் ஏன் உயிரினங்கள் வாழ முடியாதபடி மாறவில்லை என யோசிக்கலாம். இப்படி அதிகரிக்கும் உப்பின் அளவு  அரை நூற்றாண்டுக்கு சில சதவீதமே கூடுகிறது. கடலில் இப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூரியனின் வெப்பம் கூடுவதால் கடலிலுள்ள நீர் வேகமாக ஆவியாகிறது. இதன் விளைவாக கடற்கரையில் உப்பு தேங்க வாய்ப்புள்ளது. நீரின் அளவு குறைவதால் உப்பு கடல்நீரால் கரைக்கப்படுவது குறைகிறது என இங்கிலாந்து சூழலியலாளர் ஜேம்ஸ் லவ் லாக் கூறியுள்ளார்.  2. கடல் நீருக்கு அதன் வாசனை எப்படி வருகிறது? கடல்நீருக்கு தன்னளவில் எந்த வாசனையும் கிடையாது. ஆனால் அதில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள், உயிரினங்கள

வாசனை முகரும் திறன் - சில சுவாரசியங்கள்

படம்
  கோவிட் வந்தபிறகு ஒருவருக்கு வாசனை உணரும் திறன் போய்விட்டாலே அருகிலிருப்பவர் உடனே அலுவலகத்தில் மனிதவளத்துறை மேலாளருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு மாநகராட்சி வார் ரூமுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்.அந்தளவு மரணபயத்தை கோவிட் -19 ஏற்படுத்திவிட்டது.  யாராவது இருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட அவர் பாக்கெட்டில் கையைவிட்டு ஸ்ரீ  ராம் மெடிக்கலில் போய் டாபர் ஹனிடசை வாங்கி வந்து கொடுத்து கூட காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவு பாழும் பயம் மனதை பாடாகப் படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் சரி, நாம் இங்கு வாசிக்கப்போவது வாசனை பற்றி மட்டும்தான்.  கோவிட் -19 வந்தவர்களை கண்டுபிடிக்க காய்ச்சலை சோதிப்பது கூட ஒருகட்டத்தில் குறைந்துபோய் வாசனை சோதனைகளை செய்திருக்கின்றனர். அதுவும் அறிகுறிகளில் ஒன்றுதானே என்பதுதான் காரணம். நோய்த்தாக்கம் குறைந்தபிறகு வாசனைகளை முகரும் திறன் மெல்ல இயல்புக்கு மீண்டு வந்திருக்கிறது.  வயதாகும்போது இயல்பாகவே வாசனைகளை முகரும், இனம் கண்டுபிடிப்பது குறைந்துவிடும். செல்கள் அழியத் தொடங்குகிறது அல்லவா?  அதனால்தான்.  வாசனை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பது குறைந்து வந்தால் அதனால என்னப்பா என ச

வாசனையை அறியமுடியாத குறைபாடு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  அனோஸ்மியா ஆங்கில திரைப்படத்தின் பெயரை கூறவில்லை. இது ஒரு குறைபாடு. இந்த குறைபாடு வந்தவர்களுக்கு மணம் தெரியாது. வாழ்க்கை முழுக்க வாசனையை, துர்நாற்றத்தை எதையும் இவர்களால் உணர முடியாது.இதற்கு காப்பீடு கூட கிடைப்பதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனா காலத்தில்  பலருக்கும் நோய் வந்ததன் முதல் அறிகுறியாக மணத்து முகரும் தன்மை காணாமல் போயிருக்கும். பிறகு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள்.  வாசனையை முகரும் ரிசெப்டர்கள் மனிதர்களுக்கு 6 மில்லியன் உண்டு. நாய்களுக்கு 300 மில்லியன் உண்டு.  ஒரு டிரில்லியன் வரையிலான வாசனைகளை மனிதர்களால்  அறிய முடியும்.  3.2 சதவீத அமெரிக்கர்களுக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  உலக மக்கள்தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு அனோஸ்மியா குறைபாடு உள்ளது.  கொரோனா பாதிப்பில் பத்து சதவீத பேருக்கு அனோஸ்மியா பாதிப்பு ஏற்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு நீங்கியிருக்கிறது.  பார்க்கின்சன், நீரிழிவு நோய், புற்றுநோய் காரணமாகவும் ஒருவருக்கு அனோஸ்மியா தோன்றலாம். மூக்கில் உள்ளே வரும் காற்றுதான், என்ன வாசனை என்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது. காற்று ஊடகத்தின் வழியாக நோய்க்கிருமிகள் பரவுவதால

ஆண்களுக்கு தலை நடுவிலிருந்து வழுக்கையாவது ஏன்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி பதில் சொல்லும்போது தலையை சொறிவது ஏன்? இயல்பாகவே இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இரண்டில் ஒன்று என்றால் பலரும் எதை தேர்ந்தெடுப்பது என தலையை சொறிவார்கள். அது இயல்பானதுதான். இதனை உயிரியலில் டிஸ்பிளேஸ்மென்ட் ஆக்டிவிட்டி என்று கூறுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் இந்த பழக்கம் இல்லை பறவைகளுக்கும் கூட உண்டு. பறவை ஆபத்தான சூழலில் தாக்கவா, ஓடிவிடவா என இரு வாய்ப்புகள் உள்ள நிலையில் பதற்றத்துடன் தரையை கொத்துகிறது.  பதற்றத்தில் இருக்கும்போது யோசிக்கிற போஸில் உள்ளதால் அதன் பதற்றம் கூட தணிகிறது என நினைக்க வாய்ப்புள்ளது. 2017இல் செய்த ஆய்வில் மக்காவ் வகை குரங்குகள் இப்படி ஏதேனும் தீவிர யோசனையில் தலையை சாய்த்து சொறிந்துகொண்டிருக்கிற குரங்கை அணுக பயந்து நின்றிருக்கின்றன. அது யோசிக்கிற நிலையில் அதனை தாக்குவது தவறு என்பதை அதன் சொறிகிற பாவனை ஏற்படுத்தியிருகிறது. தலையை சொறிகிற பழக்கம் அப்படியே பாரம்பரியமாக நமது உடலுக்குள் பொதிந்து வந்திருக்கிறது என்று கூறலாம்.  மீன்களால் தன்னை உணர முடியுமா? முடியாது. ஆனால் முகரும் சக்தியால் பிற மீன் இனங்களை அடையாளம் அறிய முடியும். தன்னுடைய

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை

உயிருக்கு உயிரான காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆல்பட்ரோஸ் பறவை! - டே ட்ரீமர் - துருக்கி தொடர்

படம்
                    டே ட்ரீமர் துருக்கி தொடர் 50 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சனீம் என்ற பெண்தான் தொடரின் மையப் பாத்திரம் . எப்போதும் புதிய தீவு ஒன்றுக்கு சென்று தனக்கு பிடித்த காதலனுடன் வாழவேண்டும் . அதுவும் ஆல்பட்ரோஸ் பறவையைப் போலவே தன்னைக் கருதுகிறாள் . தனக்கான ஆண் இணையைக் கண்டுபிடிப்பதே அவளது வாழ்க்கை லட்சியம் . சனீமைப் பொறுத்தவரை தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிடுவாள் . எதிரிலிருப்பவர்கள் யார் , என்ன நினைத்து கேட்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமாட்டாள் . இதனால் அவளது குடும்பம் , தோழி அய்ஹான் , அக்கா லைலா என் எல்லோருமே அவளைப் பார்த்து மிரள்கிறார்கள் . குடும்பத்தின் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு பகல் கனவு காண்பதுதான் அவளது வேலை . குடும்பத்தின் கடன் வேறு அதிகமாகிக்கொண்டிருக்க , மகள் வேறு அதிக வருமானம் வரும் வேலைக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள் . அப்படி எந்த வேலைக்கு போக எனத் தேடும்போது அக்கா லைலா தனது நிறுவனத்திற்கு கூட்டிச்செல்கிறாள் . விளம்பர நிறுவனமான அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் ஜவ்வாக இழுக்கும் ஏ

வாசனை காணாமல் போகிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் மூக்கிற்கு வரும் வாசனை என்னாகிறது? நாம் சாக்லெட் பர்ப்யூம் அணிந்த அழகியைச் சந்திக்கிறோம். அவர் நம்மிடம் பேசிவிட்டு சென்றவுடன் சில நிமிடங்களில் அந்த வாசனை அழிந்துவிடுகிறது. நினைவில் மட்டும் அந்த வாசனை நீடித்திருக்கும். அதற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். மூக்கின் நுகர்வு எல்லைக்கு, அந்த வாசனை தட்டுப்படாத தற்கு, வாசனை மூலக்கூறுகள் காற்றிலிருந்து அழிந்துபோனதே காரணம். அழுகிய முட்டை, சல்பைடு தன்மை கொண்டது என்பதால் காற்றுடன் வினைபுரிந்து தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அனைத்து வாசனைகளும், அதன் மூலக்கூறுகளும் இப்படியானவை அல்ல. நன்றி- சயின்ஸ் ஃபோகஸ்