இடுகைகள்

கிறிஸ்தவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

கிறித்துவத்தில் ஒளிந்திருக்கும் தொன்மை மர்மம்! - டாவின்சி கோட்

படம்
டாவின்சி  கோட் டான் ப்ரௌன் எதிர் வெளியீடு பிரான்சிலுள்ள  அருங்காட்சியகத் தலைவர், மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவர் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவரின் மூன்று நண்பர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுவிடுகின்றனர். இந்த கொலை கற்சாவி ஒன்றுக்காக நடைபெறுகிறது. இந்த கொலைகளை டீச்சர் என்பவர் வழிநடத்த அரிங்கரோசா என்ற பிஷப்பின் சீடன் சிலாஸ் எனும் அடிப்படைவாதி கொலைகளை செய்கிறான். ஏன் இந்த கொலைகள், கற்சாவி என்பது என்ன?  என்பதை விவரிக்கிறது டாவின் கோட். நாவல் முழுக்க ஏராளமான கணிதப்புதிர்கள் உள்ளன. கணிதத்தில் 35 மார்க்குகளை எடுத்த ஆட்கள் இந்த நூலை தவிர்ப்பது நல்லது. காரணம், ஏராளமான விஷயங்கள் கணிதம் மூலமாகவே பூடகமாகவே கூறப்படுகின்றன. பிபனாச்சி தொடர்வரிசை, டாவின்சியின் குறியீட்டு முறை, என்கிரிப்ஷன், டீகிரிப்ஷன் என பல்வேறு புதிர்முறைகளை சிறப்பாக அமைத்து அதனை விடுவித்திருக்கிறார் நூல் ஆசிரியர் டான் ப்ரௌன். நூலில் புதிராக அமையும் கதாபாத்திரம் அதனை சிறப்பாக வடிவமைத்து இறுதியில் அதனை உடைத்து பிரமிப்பு தருகிறார் ஆசிரியர். முழு நாவலையும் வடிவமைப்பது டீச்சர் எனும் போனில் மட்டும் பாத்திரம்தான்