இடுகைகள்

தொழிலதிபர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அதேநேரத்

நவீன காலத்தின் மிகச்சிறந்த தொழிலதிபர்! துணிச்சல், தைரியம், தொலைநோக்குப்பார்வை, அசாதாரண வெளிப்படைத்தன்மை கொண்ட எலன் மஸ்க்

படம்
              2020 ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபர் ! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டக

இந்தியா டுடே 2020! சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பெற்ற சிலர்....

படம்
              சக்தி வாய்ந்த மனிதர்கள் கிரண் மஜூம்தார் ஷா 67 பயோகான் சுயமாக உருவாகிய வணிகப்பெண்மணி . இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 34, 310 கோடி மஜூம்தார் ஷா மெடிக்கல் சென்டர் மூலம் குறைந்த விலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை வழங்கிவருகிறார் . ஆசியாவிலேயே இன்சுலின் தயாரிப்பில் முன்னணி வகிப்பது பயோகான்தான் . மலேசியாவில் உள்ள உள்ள தொழிற்சாலையில் இதுவரை 300 கோடி மருந்துகள் விற்றுள்ளன . பெங்களூருவில் பயோகான் தலைமையகம் உள்ளது . மறைந்த இவரது தந்தை சாம்பல் இங்குதான் தூவப்பட்டுள்ளது . சசிதரன் ஜகதீஷன் 55 ஹெச்டிஎப்சி வங்கி இயக்குநர் , தலைவர் இந்தியாவில் தனியார் வங்கிகளில் இன்று பெரிய வங்கியாக ஹெச்டிஎப்சி தலைநிமிர்ந்து நிற்கிறது . அதற்கு முக்கியக்காரணம் , அன்னார்தான் . 1996 ஆம்ஆ ண்டு நிதி இயக்குநராக பணிக்கு சேர்ந்தார் . 2008 இல் வங்கியின் தலைவர் இயக்குநராக பதவியேற்றார் . ஆதித்யா பூரி , நிறுவன இயக்குநராக 26 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தபிறகு , இவரையே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார் . இன்று முதலீட்டாளர்களின் சொர்க்கமாக ஹெச்டிஎப்சியே உள்ளது . மொத்த பொதுத்துறை வங

டைம் - இளம் தலைவர்கள் 2019

படம்
டைம் இளம் தலைவர்கள் ஹாரி மியோ லின் மியான்மர் என்று சொன்னாலே உங்களுக்குப் புரிந்துவிடும். ராணுவ சர்வாதிகார நாடு, அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருந்தால்தானே அதிசயம். ஏறத்தாழ 50 ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரம் செய்யப்பட்ட நாடு. மண்டாலே நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞரான மியோ லின், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வெறுப்பு பேச்சு, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார். ரோஹிங்கயே முஸ்லீம்கள் வன்முறை வெறியாட்டத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த வேதனை நிகழ்வில், கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் போராடினார் மியோ லின். 2013 ஆம் ஆண்டு புத்த மத வெறியர்களால் மெய்கிட்டியலா எனும் நகரிலிருந்த மசூதி எரிக்கப்பட்டது. இக்கொலை வெறியாட்டத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியோ லின் தி சீகல் எனும் தன்னார்வ அமைப்பை நிறுவி உதவினார். இவரின் உதவிகள் மதவாத அமைப்புகளை கோப ப்படுத்த, மியோ லின்னுக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வரத் தொடங்கின. 2017 ஆம் ஆண்டு சீகல் அமைப்பை விட்டு விலகியவர்,