இடுகைகள்

எதிரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

படம்
  இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள் வெளிநாட்டுப் பயணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம். கட்டி அணைப்பேன் உன்னையே… நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிர

சிவப்புக்கண் மரத்தவளை - எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவும் உடல் அமைப்பு

படம்
  சிவப்புக்கண் மரத்தவளை  இத்தவளையின் உடலிலுள்ள பச்சை நிறம், பச்சை இலைகளுக்கு இடையில் மறைந்து கொள்ள உதவுகிறது.  அறிவியல் பெயர்: அகல்ச்னிஸ் கால்டிரியாஸ் (Agalchnis callidryas) குடும்பம்: ஹைலிடே(Hylidae) குழு பெயர்: ஆர்மி (Army) இனம்: அ. கால்டிரியாஸ் (A. callidryas) அளவு: 7 செ.மீ.  காணப்படும் இடம் : மத்திய அமெரிக்கா  சிறப்பு அம்சம்: இரவு வேட்டையாடிகள். பச்சை நிற உடல், ஆரஞ்சு நிற கால், சிவப்பு நிற கண்கள். இதன் சிவப்பு நிற கண்களில் தலா மூன்று கண் இமைகள் உள்ளன. உடலின் பக்கவாட்டில் மஞ்சள், நீலநிற பட்டைகள் உள்ளன. பளீரிடும் நிறங்கள் எதிரிகளிடமிருந்து உயிர்பிழைக்க உதவுகின்றன. காடு, சதுப்புநிலங்கள் உள்ள மரங்களில் வாழ்கிறது.  உணவு: பூச்சி, அந்திப்பூச்சி  எதிரிகள்: பாம்பு, வௌவால், சிலந்தி, பறவை  ஐயுசிஎன் செம்பட்டியல்: அழியும் நிலையில் இல்லாதவை (Least Concern LC) https://www.iucnredlist.org/species/55290/3028059

எதிரியை கொன்று குடும்பத்தை ஒன்றுசேர்க்கும் போலீஸ் அண்ணன், திருடன் தம்பி! மாத்தோ பெட்டுக்கோக்கு - பாலைய்யா

படம்
  மாதோ பெட்டுக்கோக்கு பாலைய்யா, ரம்பா, ரோஜா, சுஜாதா மற்றும் உங்களின் அபிமான நட்சத்திரங்கள்.  இயக்கம்  - கொடண்டராமி ரெட்டி  இசை - மாதவப்பெடி சுரேஷ்  கதை - பார்கவ் தயாரிப்பு நிறுவன கதை இலாக்கா 1995இல் வெளியான படம். அதைவிட பழைய காலக்கதையைக் கொண்டுள்ளது. ஒரே ஆறுதல் பாலைய்யா இரண்டு வேடங்களை போட்டு நம்மை குஷிப்படுத்துவது மட்டுமே.... அர்ஜூன் ஐபிஎஸ் அதிகாரி. அநியாயம் என்றால் காழ்ச்சி பாரேஸ்தா கொடுக்கா என பாயும் குணம் கொண்டவர். இவருக்கான இன்ட்ரோவே, வல்லுறவு செய்ய முயலும் இன்ஸ்பெக்டரை போட்டு அடித்து பிளந்து ஏறக்கட்டுவதுதான். அடிக்கிற காட்டு அடியில் சம்பவ இடத்திலேயே வல்லுறவு இன்ஸ்பெக்டர் ஏறத்தாழ கோமாவுக்கு போய்விட்ட மாதிரிதான். அப்போதுதான் உயரதிகாரி வந்து அர்ஜூனைத் தடுக்கிறார். அந்த உரையாடலில் அர்ஜூன், எனக்கு சீதாபுரம் காவல் நிலையத்தில் பதவி கொடுங்கள் என்கிறார்.  இது ஒரு பாலைய்யாவின் சீரியஸ் கதை. அதாவது அண்ணன், இன்னொரு பாலைய்யாவின் பெயர் கிட்டய்யா. இவருக்கு போங்கு வேடங்களை போட்டு திருட்டு, கொள்ளையடிப்பதுதான் ஒரே வேலை.  யாருக்கு யார் ஜோடி என்று சொன்னால் படம் பார்த்த திருப்தி தங்களுக்கு கிடைத்துவிட

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்